OnlinePJ

Thanks for Visiting my Page

செவ்வாய், 4 ஜனவரி, 2011

புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபரீதம். 17 வயது இளம்பெண் கற்பழித்துக் கொலை.


அன்பர்களே, நேற்று நான் புத்தாண்டு கொண்டடத்தின் அவலங்களை பற்றி எழுதி இருந்தேன், அதை நிருபிக்கும் வகையில், இன்று நான் ஒரு வலைப்பதில் கண்ட நியூஸ் இதோ உங்கள் பார்வைக்கு.  

டெல்லியில் நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடந்தது. இந்த கொண்டாட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடந்து விடாமல் தடுக்க நகரம் முழுவதும் 22 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.  
இதையும் மீறி 17 வயது பெண் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளார். பெற்றோரை இழந்து அந்த பெண் தனது சகோதரருடன் டெல்லி லேடி ஹார்டிங் ஆஸ்பத்திரி ஊழியர் குடியிருப்பில் தங்கி இருந்தார். 31-ந் தேதி இரவு வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் நேற்று மாலை துவாரகா என்ற இடத்தில் உள்ள காலி மனையில் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிந்தது. உடல் பாதி நிர்வாண நிலையில் இருந்தது. அவர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்து இருந்தனர். பின்னர் அவர் முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்டு இருந்தது. அவருடைய உடல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதில் அவரை 2 பேர் சேர்ந்து கற்பழித்து இருப்பது தெரிய வந்தது.   புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த வாலிபர்கள் அவரை கடத்தி சென்று கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. அவர்களை கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

என்று தணியும் இந்த மோக தாகம்......... என்று கிடைக்கும் பெண்களுக்கு விடுதலை...... . . வக்கிரங்களை தீனி போட்டு வளர்க்கும் ஊடகமும், சமுதாயமும் திருந்தாவிடின் குற்றாவளியை குற்றம் சாட்டி என்னப் பயன்.....