OnlinePJ

Thanks for Visiting my Page
சமையல் குறிப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமையல் குறிப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

ஆறு சுவைகள் தான் அறுசுவை


 
 
Six tastes
பழங்கால இந்திய மருத்துவங்களும்ஆயுர்வேதமும் நா அறியக்கூடிய சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. ஆயுர்வேதம்உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகளைச் சம்பந்தபடுத்திஉடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது. இனிப்புபுளிப்புஉவர்ப்புகசப்புகார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த ஆறுசுவைகளின் பண்புகளையும்உடல் நலத்திற்கு இவற்றின் பங்குகளைப் பற்றியும் சற்று விரிவாய் பார்க்கலாம்.
தொன்றுதொட்டு பழக்கத்தில் இருந்து வரும் இந்திய மருத்துவங்களாகிய ஆயுர்வேதம்சித்த மருத்துவம் போன்றவற்றில் சுவைகள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உடலானது ரத்தம்தசைகொழுப்புஎலும்புநரம்பு,உமிழ்நீர்மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டது என்பதனால் உடலை "யாக்கை" என்று கூறினர். இதில் ஏழாவது தாதுவான மூளை சரிவர இயங்க முதல் ஆறு தாதுக்கள் தகுந்த அளவில் இருத்தல் அவசியம். இந்த ஆறு தாதுக்களும்ஆறு சுவைகளுடன் கீழ்கண்டவாறு சம்பந்தப்பட்டுள்ளன.
 
துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றது

இனிப்பு - தசையை வளர்க்கின்றது

புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது

கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது

கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது

உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது
 
அந்த கால மருத்துவங்களும்உணவு முறைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டே இருந்துவந்தது. உடல் தாதுவைப் பெருக்கசமன் செய்ய அதற்கு ஏற்றவாறு உணவு வகைகளைத் தயாரித்து வந்தனர். இதனைக் கொண்டுதான் "உணவே மருந்துமருந்தே உணவு" என்று சொல்வார்கள்.
 
துவர்ப்புச் சுவை (Astringent)
Astringent
இது அதிகம் விருப்புவெறுப்பு காட்டப்படாத சுவை. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த சுவை. அதிக வியர்வையைக் கட்டுப்படுத்துகின்றது. இரத்தப்போக்கினைக் குறைக்க வல்லது. வயிற்றுப்போக்கினை சரி செய்யவல்லது.
இது அதிகமாயின்இளமையில் முதுமை தோற்றத்தை உண்டுவிக்கும். வாய் உலர்ந்து போகச் செய்யும்சரளமாக பேசுவதைப் பாதிக்கும். வாத நோய்கள் தோன்ற வழிவகுக்கும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்
வாழைக்காய்மாதுளைமாவடுமஞ்சள்அவரைஅத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.
இனிப்புச் சுவை (Sweet)
Sweet
மனிதர்களால் அதிகம் விரும்பப்படும் சுவை இதுதான். மனதிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் உடனடி உற்சாகத்தைத் தரக்கூடிய சுவையிது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது.
இது அதிகமாயின் உடல் தளர்வுசோர்வுஅதிகத் தூக்கம்இருமல்உடல் எடைக் கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்பு உள்ளது.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்
பழவகைகள்உருளைகாரட் போன்ற கிழங்கு வகைகள்அரிசிகோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.
புளிப்புச் சுவை (Sour)
Sour
உணவிற்கு மேலும் ருசி சேர்க்கும் ஒரு சுவையிது. பசியுணர்வைத் தூண்டும். உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்கின்றது. இதயத்திற்கும்செரிமானத்திற்கும் மிகவும் நல்லது.
இது அதிகமாயின்தாக உணர்வினை அதிகரிக்கும். பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல்இரத்தக் கொதிப்புஅரிப்பு போன்ற தொந்திரவுகளை உண்டுவிக்கும். உடல் தளரச் செய்யும்.
எலுமிச்சைபுளிச்ச கீரைஇட்லிதோசைஅரிசிதக்காளிபுளிமாங்காய்தயிர்மோர்நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.
 
காரச் சுவை (Pungent)
Pungent
பசியுணர்வைத் தோற்றுவிப்பதோடு அல்லாமல்செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகின்றது. உடல் இளைக்கவும்,உடலில் உள்ள அதிக்கப்படியான நீரை வெளியேற்றவும் செய்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. தோல் நோய்களுக்கு நல்லதொரு பலனைத் தருகின்றது.
அதிகப்படியான காரம்உடல் எரிச்சலை உண்டுவிக்கும். உடல் சூட்டை அதிகரித்துவியர்வையை அதிகம் சுரக்கச் செய்யும். குடல் புண்கள் தோன்ற அதிக வாய்ப்பு அளிக்கும்.
வெங்காயம்மிளகாய்இஞ்சிபூண்டுமிளகுகடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.
 
கசப்புச் சுவை (Bitter)
Bitter
அதிகம் வெறுக்கப்படும் சுவையாக இருந்தாலும்அதிகம் நன்மைப் பயக்கும் சுவையும் இது ஒன்றே. மற்றச் சுவைகளை அறிய இது பெரிதும் உதவுகின்றது. சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியாக செயல்படுகின்றது. தாக உணர்வைக் கட்டுப்படுத்துகின்றது. உடல் எரிச்சல்அரிப்புகளில் இருந்து நிவாரணம் தருகின்றது. காய்ச்சலைத் தணிக்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது.
இது அதிகமாயின்உடலின் நீர் குறைந்துப் போகச் செய்யும். மேனி வறண்டு கடினத்தன்மைத் தோன்ற நேரிடும். எலும்புகளைப் பாதிக்கும். அடிக்கடி மயக்கம் உண்டாகும்உச்சகட்டமாய் சுயநினைவற்ற நிலைக்கும் செல்ல வழிவகுக்கும்.
பாகற்காய்சுண்டக்காய்கத்தரிக்காய்வெந்தயம்பூண்டுஎள்வேப்பம்பூஓமம் போன்றவற்றில் இந்த சுவை மிகுதியாய் உள்ளது.
 
உவர்ப்புச் சுவை (Salt)
Salt
தவிர்க்க இயலாத சுவை இதுஅளவோடு இருக்கும்பட்சத்தில் அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது. மற்றச் சுவைகளைச் சமன்செய்ய உதவுகின்றது. உணவுச் செரிமானத்திலும் பங்கு வகிக்கின்றது.
இது அதிகமாயின் தோல் தளர்வினை உண்டுவித்துசுருங்கிப் போகச் செய்யும். தோல் வியாதிகளையும் தோன்றச் செய்கின்றது.
உடல் சூட்டினை அதிகப்படுத்தி சிறுக் கட்டிகள்பருக்கள் தோன்ற வழிவகுக்கும்.
கீரைத்தண்டுவாழைத்தண்டுமுள்ளங்கிபூசணிக்காய்சுரைக்காய்பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.
 

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

இது எங்க ஊரு ஸ்பெஷல் (ரெண்டான்)

முதலில் நான் எந்த ஊரு என்பதை சொல்லிவிடுகிறேன், அதாவது கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டை என்கின்ற ஊரை சேர்ந்தவன் நான் எங்கள் ஊரு கடலூருக்கும் சிதம்பரத்திற்கும் இடையில் கடலை ஒட்டி அமைந்துள்ளது........

அட இவன் இவ்வளவு நாளைக்கு அப்புறம் ஊரை பத்தி எழுதுராண்டு நினைக்காதீங்க, இங்கே இதை பத்தி எழுதுவது ஒரு அவசியமாக பட்டது அதான், சரி வாங்க மேட்டருக்கு   போவோம், 
எந்த ஒரு ஊரை எடுத்துகிட்டாலும் அங்கே ஏதாவது ஒரு சமையல் ஸ்பெஷல்லா இருக்கும் அந்த மாதிரி நம்மூரில் இந்த ரெண்டான் ஒரு ஸ்பெஷல் அத பத்திதான் இந்த பகிர்வு ஒரு சமையல் குறிப்பாக...........!!!!!!!!! இதை மீன், இறால் முட்டை போன்றவற்றி செய்யலாம்.........இங்கே நான் எடுத்து கொண்டது வஞ்சரம் மீன் 





தேவையான பொருட்கள்:

  1. ஒரு மீடியம் அளவு வஞ்சரம் மீன் ஒன்று
  2. வெங்காயம் மீடியம் சைஸ் நான்கு
  3. தக்காளி மீடியம் சைஸ் இரண்டு
  4. பச்சைமிளகாய் 5 அல்லது 6  
  5. தேங்காய் ஒரு அரை மூடி 
  6. மிளகாய் தூள், மஞ்சள் தூள் உப்பு, எண்ணை போன்றவைகள்


செய்முறை:

  1. முதலில் வஞ்சிரன் மீனை மீடியம் சைசில் வெட்டி மஞ்சள் உப்பு சேர்த்து நன்றாக கழவி எடுத்துகொள்ளவும்.
  2. கழிவிய மீனை மிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி வைத்து கொள்ளவும் (கொஞ்சம் இஞ்சி பூண்டு சேர்த்தால்  மேலும் சுவையாக இருக்கும்)
  3. பின்னர் அதை அறைவேகாடாக பொரித்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும் .
  4. வெங்காயம் , தக்காளி பச்சைமிளகாய் போன்றவற்றை பொடிசாக வெட்டி வைத்து கொள்ளவும்,  தேங்காயை அரைத்து மிக்ஸ்யில் போட்டு பால் எடுத்து வைத்து கொள்ளவும் 
  5. பின்னர் உங்கள் வீட்டில் மண் சட்டி இருந்தால் அதை அடுப்பில் ஏற்றவும் (மண் சட்டியில் செய்தால் சுவை கொஞ்சம் கூடுதலாக இருக்கும்)
  6. தேவையான அளவு என்னை விட்டு அது சூடு வந்தவுடன், அதில் முதலில் வெட்டி வெங்காயத்தை போட்டு வேக வைக்கவும் வெங்காயம் சிறிது வண்ணம் மாறியவுடன் 
  7. அதனுடன் பச்சைமிளகாய் மற்றும் தக்காளியை சேர்த்து மீண்டு வேகவைக்கவும், ஒரு இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் கழித்து அதனுடன் சிறிது மஞ்சள் தூள், மிளகாய் தூள் (கொஞ்சம் கூடுதலாக இருந்தால் நன்று) சேர்த்து நன்றாக கிளறி விட்டு மூடி வைக்கவும், 
  8. ஒரு ஐந்து நிமிடம் கழித்து தக்காளி கரைந்தவுடன் அதில் ஏற்கனவே எடுத்து வைத்த தேங்காய் பாலை ஊற்றவும், பின்னர் ஏற்கனவே நாம் பொரித்து வைத்துள்ள மீனை போட்டுவிட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.அவ்வளவுதாங்க ரெண்டான் ரெடி............!!!!!!!!!!!!!

இதில் முக்கியமாக நீங்க பார்க்ககூடியது, தேங்காய் பால் சிறிது கட்டியாக இருக்கவேண்டும், இல்லையென்றால் குழம்பு தன்னியாகிவிடும்,  அப்புறம் அடுப்பை அனைபதர்க்கு சிறிது நேரத்திற்கு முன் கொஞ்சம் மல்லி  இலையை போட்டு மூடிவிட்டு அணைத்துவிடுங்கள்..................

இன்னும் பல ஸ்பெஷல் எங்கள் ஊரில் உள்ளன தொடர்ந்து எழுதலாம் என்று உள்ளேன்.............உங்கள் கருத்துக்களை பார்த்து விட்டு...................