OnlinePJ

Thanks for Visiting my Page

வியாழன், 30 டிசம்பர், 2010

குழந்தைகள் அதிசயம்


இன்று மக்கள் அதிகமாக கவலை படுவது குழந்தை இல்லை என்பவர்கள்தான், வசதி, வாய்ப்பு எல்லாம் அடுத்ததுதான். இரண்டு தினகளுக்கு முன் அமீரகத்தில், ஒரு எகிப்திய தம்பதியருக்கு ஒரு பிரசவத்தில் ஆறு குழந்தைகள் பிறந்து உள்ளன.

இது என்ன பெரிய விஷயம்  என்கிறீர்களா, அவர்களுக்கு கல்யாணம் ஆகி பன்னிரண்டு வருடம் கழித்து இந்த அதிசயம் நிகழ்துள்ளது, இன்னும் சொல்ல போனால், அந்த குழதைகளின் தகப்பன் வெறும் டிரைவர் தான் அவரின் மாத வருமானமோ வெறும் 2000 திர்ஹம்ஸ் தான், இதை வைத்து கொண்டு இந்த குழந்தைகளை எப்படி காப்பாற்ற    போகின்றேன் என்று, அவர் கண்ணீர் வடிகின்றார். 

இதனால் இந்த நாட்டில் உள்ள ஒரு மாகானமாகிய  அஜ்மான்  அரசர் "Shaikh Ammar Bin Humaid Al Nuaimi ", அந்த குடும்பத்திற்கு மருத்துவ செலவுகளையும், தங்கவதுர்க்கு இலவசமாக வீட்டையும் வழங்க முன் வந்துள்ளார், இது மட்டுமில்லை, இன்னும் பல அமைப்புகள் அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப உதவ முன் வந்துள்ளன, நிச்சயம் இந்த பூமியில் மனிதாபிமானம் உள்ளவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். 

எனவே குழந்தை இல்லை என்று வருந்த கூடிய தம்பதியர்கள், வருத்தபடுவதை விட்டுவிட்டு, இறைவனிடம் இறைஞ்சுங்கள், நிச்சயம் அதற்க்கு பலன் கிடைக்கும். இதைதான், இறைவன் தன திருமறையில் கூறுகிறான்

"நம்பிக்கை கொண்டோரே பொறுமையுடனும், தொழுகையுடனும் அல்லாஹ்விடம் உதவிதேடுங்கள், நிச்சியமாக அல்லா போருமையாலருடன் இருக்கின்றான்"

கருத்துகள் இல்லை: