OnlinePJ

Thanks for Visiting my Page

புதன், 2 மார்ச், 2011

pkp.in என்கின்ற வலைதளத்தில் இருந்து

இந்த கட்டுரை pkp.in என்கின்ற வலைதளத்தில் இருந்து எடுக்க பட்டது. அதன் ஆசிரியரே பரிந்துரை செய்யும் ஒரு இஸ்லாமிய வலைத்தளம் என்னவென்று கட்டுரையின் கடைசி பாராவில் தெரிந்துகொள்ளுங்கள். 


ஸ்லாத்தை பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்புவோருக்கு பல தடைகள் வருவதுண்டு. உதாரணமாக இஸ்லாமிய கட்டுரைகளை வாசிக்க நேரிட்டால் அதில் மிஃராஜ், ஸ்ஜ்தா, மவ்லிது, தவ்ஹீத், ஜமாஅத் என வரும் அநேக புரியாத அரபிச்சொற்கள் நம் ஆர்வத்தை குறைக்கும். சரி கட்டுரைகள் தான் அப்படி சொற்பொழிவாவது கேட்கலாமென்றால் தமிழ் இஸ்லாமியர் கூட அரபியில் தான் பேசத் தொடங்குகின்றார். அவ்ளோதான் இனி நமக்கு ஒன்னுமே புரியப்போவதிலை என வீடியோ கிளிப்பை மூடப்போகும் போது நல்லவேளை தமிழில் பேசத் தொடங்குகிறார்கள்.

இஸ்லாம் என்றொரு மிகப்பெரிய அமைப்பு உலகெங்கும் பரவி இருந்தும் கூட அதிலிருக்கும் இரு பெரும் பிரிவுகளை பெரும்பாலோர் அறிந்ததில்லை.எலியும் பூனையுமாக சண்டை இட்டுக் கொள்ளும் அளவுக்கு அங்கே பகை உண்டு. ஈரான்-ஈராக் போர் உங்களுக்கு நினைவிலிருக்கலாம். இஸ்லாத்தை நிறுவிய முகமது நபியின் காலத்துக்குப் பின் அவரின் உண்மையான வாரிசு யார் என்பதில் தான் இந்த பிளவு தோன்றியது.முகமது நபியின் மாமனாரான அபுபக்கர் தான் அவரின் உண்மையான வாரிசு என ஒரு சாரார் சொல்ல, இல்லை இல்லை அவரின் மருமகன் அலி தான் உண்மையான வாரிசுவென இன்னொரு சாரார் சொல்ல புதுப் புது கொள்கை குழப்பங்கள் முகமது நபிக்குப் பின் இஸ்லாத்தில் புகுந்தன. பல கொலைகள் கூட இதன் காரணமாக நிகழ்ந்தன. இன்றைக்கும் அந்த விரோதம் இப்பிரிவினர்களிடையே நீடிக்கின்றது. அபுபக்கரை வாரிசாக ஏற்றுக்கொண்ட சன்னி பிரிவினர் எண்ணிக்கையில் அதிகமாகவும் (ஏறத்தாழ 80 சதவீதம்) வாழ்க்கையில் அமைதியாகவும் வாழ்ந்து இஸ்லாம் ஒரு அமைதியான மார்க்கம் என உலகுக்கு பறை சாற்றிக் கொண்டிருக்கின்றனர். அதே வேளையில் அலியை வாரிசாக ஏற்றுக்கொண்ட ஷியா பிரிவினரின் கொள்கை இதில் சற்று மாறுபட்டதாகும்.இங்கு கிபி 874-ல் நடைபெற்ற ஒரு சம்பவத்தை நாம் விளக்க வேண்டும்.

சியா பிரிவினர் தாங்கள் முகமது நபியின் வாரிசென நம்பும் அலியின் வாரிசு வழி வருபவர்களை தங்கள் மதத் தலைவராக ஏற்று வந்தனர். தாங்கள் மதத் தலைவராக ஏற்று வெகுவாகக் கொண்டாடி வந்த பதினோராவது இமாம் கிபி 874-ல் இறந்தபோது ரொம்பவே நொந்துபோயினர். ஏனெனில் அவரது வாரிசான அவர் மகனுக்கு அப்போது வயது ஐந்து தான் ஆகியிருந்தது. பன்னிரண்டாவது இமாமாக (12th Imam) பதவிக்கு வரவேண்டிய அந்த சிறுவன் தன் தகப்பனாரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டிருக்கும் போதே திடீரென காணாமல் போய் விட்டான். அவன் போன இடம் இன்று வரைக்கும் யாருக்கும் தெரியாது. அவனை கடவுள் இப்போதைக்கு பூமியிலே மறைத்து வைத்திருக்கிறார், உலக இறுதி காலத்தில் உலகம் அமைதி இழந்து தவிக்கும் போது, மக்களெல்லாம் தங்களுக்குள்ளே போரிட்டு தங்களை தாங்களே மாய்த்துக் கொள்ளும் போது, நாடுகளெல்லாம் தீப்பற்றி எரிந்து புகையும் போது அந்த பன்னிரண்டாவது இமாம் பூமிக்கு மீண்டும் மஹ்தியாக வந்து பூமியிலே அமைதியையும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தையும் நிலை நாட்டுவார் என்பது ஷியா பிரிவினரின் அசைக்க முடியாத நம்பிக்கை.அதானால் தான் இன்றைக்கும் ஈரான் தலைவர்கள் தாங்கள் உரையாற்றத் தொடங்கும் போதெல்லாம் மஹ்தியின் வருகை விரைவாக இருக்கட்டும் எனவும் அதற்காக தாங்கள் தயாராவதாகவும் இறைவனை வேண்டிக் கொண்டு பேச்சைத் தொடங்குவார்கள்.

சன்னி பிரிவினர் இக்கருத்துக்களை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களை பொருத்தவரை இந்த சியா பிரிவினர் எல்லோரும் தங்கள் கொள்கைகளை விட்டு ஒரு நாள் மனம் திரும்பி வரும் போது இறுதிக்காலம் வரும் எனவும் அந்த இறுதி நியாய விசாரணை நாளில் ஜெருசலேமிலுள்ள மவுண்ட் ஆலிவ்ஸ்க்கும் டோம் ஆப் தி ராக் மசூதிக்கும் இடையே முகமது நபியும், ஈசாவும் (இஸ்லாமில் யேசு ஈசா என அறியப்படுகிறார்)நிற்க்க அதில் கட்டபட்டுள்ள இறுதி தீர்ப்பு கயிறு வழியே ஒவ்வொரு ஆன்மாவும் நடந்து செல்லும். ஒரு ஆன்மா அது தான் செய்த தீமைகளையெல்லாம் விட ஒரு நன்மை அதிகம் செய்திருந்தாலும் அது பாரடைஸ் செல்லும் எனவும், ஒரு ஆன்மா அது தான் செய்த நன்மைகளையெல்லாம் விட ஒரு தீமை அதிகம் செய்திருந்தாலும் அது நரகம் செல்லும் எனவும் இவர்கள் நம்புகின்றார்கள். இப்படித்தான் இறுதி தீர்ப்பு நடைபெறுமாம். ஆனால் புனிதப்போரில் (ஜிகாத்) இறப்பவர்கள் மற்றும் கல்லெறிந்து கொல்லப்படுபவர்கள் நேரடியாக பாரடைஸ் சென்று விடுவார்களாம்.

ஈரான் நாட்டின் பெரும்பாலோர் சியா பிரிவினரை சேர்ந்தோரே. இன்றைக்கு டுனீசியா, எகிப்து, பகரின் என பல அரபுநாடுகளிலும் நடக்கும் கிளர்ச்சிகளுக்கும் புரட்சிகளுக்கும் யார் காரணமென ஈரான் அதிபர் முகமது அக்மதினஜாத் சொல்வதை கேளுங்கள் "The final move has begun. We are in the middle of a world revolution managed by this dear (12th Imam). A great awakening is unfolding. One can witness the hand of Imam in managing it,”. இப்போது புரிகின்றதா நாம் எங்கு செல்கின்றோமென்று?

நானறியவந்த தகவல்கள் சுவாரஸ்ய மிக்கதாயிருந்ததால் மேல்கண்ட பதிவை இட்டேன். இதில் ஏதேனும் தகவல் பிழையிருந்தால் நண்பர்கள் சுட்டிக் காட்டலாம். இஸ்லாம் குறித்ததான தகவல்கள் தமிழில் குவிந்திருக்கும் ஒரு தளம் ஆன்லைன் பி.ஜே.
http://onlinepj.com

நன்றி: PKP.in 

கருத்துகள் இல்லை: