OnlinePJ

Thanks for Visiting my Page

செவ்வாய், 29 மார்ச், 2011

பாகிஸ்தான் அணித்தலைவர் அப்ரீடி சொன்னது என்ன?

கடந்த சில நாட்களாக எந்த நியூஸ் சேனலை திறந்தாலும் இதுதாங்க செய்தி, பாகிஸ்தான் அணித்தலைவர் நம்மூர் சச்சினை பற்றி ஏதோ தவறாக சொல்லிவிட்டார் என்று.....................அவர் அப்படி என்னதான் சொன்னார்...........
அதாவது 


"எங்களுக்கும் இந்தியாவிற்கும் இடையில் நடக்கவிருக்கும் அரை இறுதியில், சச்சினை அவருடைய நூறாவது சதத்தை எட்டவிடமாட்டோம்" .

இதுதாங்க அவரு சொன்னது இதுல என்ன தப்பு இருக்குன்னு எனக்கு தெரியலை, இதை இந்த இந்திய மீடியாக்கள் ஏதோ அப்ரீடி சச்சினோட பொண்டாட்டிய இழுத்துட்டு ஓடினமாதிரி பேசுறானுங்க.................இதை ஏன் இந்த மீடியாக்கள் வேறு விதமாக பார்க்கவில்லை என்கின்ற கருத்தையும் அப்ரீடி இன்று தெரிவித்துள்ளார்...............

அதாவது ஒரு அணியின் தலைவராக நான் சொன்னது உண்மைதான், அதிலிருந்து வெளியே வந்தால் கண்டிப்பாக சச்சின் ஒரு தலைசிறந்த வீரர் என்பதில் அவருக்கு ஒரு போதும் சந்தேகமில்லை என்கிறார். அதுமட்டுமில்லை, இதியாவிற்கு எதிராக விளையாட கூடிய எந்த ஒரு நாட்டின் அணித்தலைவரும் சொல்லமாட்டார் நாங்க அவுங்களை நல்லா ரன் எடுக்க விடுவோம் என்று.............இது கூட புரியாத இந்த மூதேவி மீடியாக்கள் என்னமோ பெரிய போர் நடக்க போவதை போலதான் சித்தரிகிறார்கள்.  

ஒரு வேலை மற்றவர்களையும் நம்ம தோணி போல சொரணை கெட்டவனு நினைத்து விட்டார்களோ என்னமோ..............அப்புறம் இந்த மீடியாதான் இப்படினா இங்கே வலைபதிவு எழுதுறவங்க இருக்காங்களே அவங்க அதுக்கு மேல, எல்லா படிச்சவங்கதான்................ஆனால் அதுக்கு உண்டான அறிவு கொஞ்சம் கூட இல்லை......................

நான் ஏற்கனவே சொன்னது போன்று விளையாட்டை விளையாட்டா பாருங்க....................

கருத்துகள் இல்லை: