OnlinePJ

Thanks for Visiting my Page

செவ்வாய், 8 ஜனவரி, 2013

சமூக தீமைகளும், தீர்வும்!!!இஸ்லாம் மட்டுமே தீர்வு!!!!!!!!!!!வேறொன்றுமில்லை

 
இந்த டெல்லியில் ஒரு பொண்ணை கற்பழித்தாலும் அழித்தாங்க, நம்ம வலைப்பூ பதிவர்களுக்கு அவ்வளவு சந்தோஷம். சும்மா தினமும் ஒரு கற்பழிப்பு பதிவு போட்டு தள்ளிக்கிட்டே இருக்காங்க. ஏன் அந்த டெல்லி சம்பவத்திர்க்கு முன்பு தெரியாதா இந்தியாவில் நிமிடத்திர்க்கு 4 பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள் என்று?

இது சம்பந்தமாக நானும் சில பதிவுகள் எழுதிவிட்டேன். ஆனால் பல பேர் கேட்கிறார்கள் ஏன் உங்கள் கண்ணுக்கு இந்த பெண் மட்டும்தான் தெரிகிறாளா? மற்ற இடங்களில் நடக்கும் இதே போன்ற கொடுமைகள் தெரியவில்லையா என்று. டெல்லி மட்டும் என்றில்லை இந்த உலகில் எங்கும் நடந்தாலும் அது கண்டிப்பாக தண்டனைக்குரியது. ஆனால் அந்த தண்டனைகள் எல்லா நாடுகளிலும் சமமாக கிடைக்கின்றதா? சரியானா தண்டனையாக இருக்கின்றதா? என்றால் கண்டிப்பாக கிடையாது. அதுவும் இந்தியாவில் ஒரு 5 சதவிகிதம் கூட மனசாட்சி என்பதே இந்த சட்டத்திற்க்கு கிடையாது. இங்கே ஆட்டை புடித்து கோழி என்பார்கள், பன்றிய புடித்து பூனை என்பார்கள். இவர்கள் குடுக்கும் தண்டனையோ???????? ஆனால் இன்னும் சில பேரோ  பெண்கள் ஆண்களின் உணர்ச்சிகளை தூண்டக்கூடிய விதத்தில் ஆடை அணியக்கூடாது என்கிறார்கள் அதனை தங்கள் உரிமை என்கின்றனர் பெண்கள் அமைப்பினர்.


முதல் விஷயம், பெண்கள் அந்த மாதிரி ஆடைகள் அணியக் கூடாது என்பவர்கள், தங்கள் வீடுகளில், பெண்களை ஏதாவது ஒரு சூழ்நிலையில் ஆடை அலங்கோலத்தில் பார்த்ததே இல்லையா? அப்படி பார்த்த போதெல்லாம் என்ன உடனே மிருகம் போல கற்பழித்ததுண்டா?

அடுத்து ஆடை அணிவது தங்கள் உரிமை என்னும் பெண்களே, இடையையும் தொடையையும் காட்டிக் கொண்டு திரியும் நீ! உன்னுடைய மார்பகத்தையும் காட்டி கொண்டு திரிவாயா உன் தகப்பன் முன்னாலும், உன் அண்ணன் முன்னாலும்???? கேட்டால் மாதர் சங்கமாம், இப்படி மூளை முடுக்கெல்லாம் சங்களால் முக்கி முக்கியே இந்த நாடு சீரழிந்து கொண்டே இருக்கின்றது.

இப்படி உங்களை குற்றம் சொல்வது இல்லை என் நோக்கம். இந்த மாதிரி சமூக தீமைகளுக்கு என்னுடைய இறைவனும் அவனது தூதரும் என்ன தீர்வுகள் காட்டி தந்துள்ளார்கள் என்பதை கூறுவதே எனது நோக்கம்.
நபி (ஸல்) அவர்கள் தனது இறுதி பேருரையில் கூறினார்கள்:-
பெண்கள் விஷயத்தில் நீங்கள் அல்லாஹ்வை பயந்துக் கொள்ளுங்கள். நீங்கள் அவர்களை அமானிதமாகப் பெற்றுக் கொண்டிருக்கின்றீர்கள். (திருமணம் முடியுங்கள் என்ற) அல்லாஹ்வின் வார்த்தையின் அடிப்படையிலேயே அவர்களது கற்புகளை அனுபவிக்கின்றீர்கள். நீங்கள் வெறுக்கும் எவரையும் உங்கள் வீட்டிற்குள் அனுமதிக்காதீர்கள். இது உங்கள் மனைவியர் உங்களுக்கு செலுத்த வேண்டிய கடமையாகும். நீங்கள் நல்ல முறையில் உணவும், உடையும் உங்கள் மனைவியருக்கு வழங்க வேண்டும். இது நீங்கள் உங்கள் மனைவியருக்குச் செலுத்த வேண்டிய கடமையாகும்” மேலும் “அவர்கள் உங்களிடம் அடைகலமாக இருக்கிறார்கள். அவர்களிடம் நன்மைகளை போதியுங்கள். அவர்கள் கட்டுபட்டுவிட்டால் வேறு எந்த வழியுலும் அவர்களிடம் வரம்பு மீறாதீர்கள்.

மேலும் இறைவன் தான் திருமறையாம் குர்ஆனிலே நான்காவது அத்தியாயம் அன்னிஸாவிலே 15 மற்றும் 16 வாது வசங்களில் கூறுகின்றான்:-
உங்கள் பெண்கள் வெட்கக்கேடானதை செய்தால் அதனை நான்கு சாச்சியங்கள் கொண்டு நிரூபியுங்கள், அவர்கள் சாட்சி கூறினால் அவர்கள் மரணிக்கும் வரை அல்லது அல்லாஹ் அவர்கள் விஷயத்தில் வேறு வழி காட்டும் வரை அவர்களை வீடுகளில் தடுத்துவையுங்கள்.

மேலு, வெட்கக்கேடானதை செய்த அவ்விருவரையும் கஷ்டபடுத்துங்கள், அவர்கள் மன்னிப்பு கேட்டுவிட்டால் அவர்களை விட்டுவிடுங்கள். அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கின்றான். மேலும் அதில் 19 வது வசனத்தில் கூறுகின்றான். பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை.

எவ்வளவு ஒரு அற்புதமான வரிகள், இன்று ஏத்தினை பேர் பெண்கள் விஷயத்தில் இப்படி நியாயமாக நடந்த்து கொள்கின்றனர். சாதரான மனிதர்களை விடுங்கள், இன்று சமூகத்தில் உள்ள ஊடகங்களை எடுத்துக் கொள்ளுங்கள், பெண்களை எப்படி காட்டுகின்றது, இன்று பெண்கள் இல்லாத விளம்பரங்கள் இருக்கின்றதா? அட ஆண்கள் உபயோகிக்கும் லுங்கி விளம்பரத்தில் கூட பெண்தான் காட்டப்படுகின்றாள். பெண்களுக்காக விளம்பரம் செய்யப்படு சில விளம்பரங்களை பெண்கள் தங்கள் வீடுகளில் பார்க்கவே கூச்சப்படுகின்றனர். மேலும் சில டியோடெரண்ட் விளம்பரங்களில் வக்கிரங்கள்தான் காட்டப்படுகின்றன.

இதனைதான் நான் அடிக்கடி எனது வலைப்பூவில் ஊடகம் செய்யும் விபச்சாரம் என்று எழுதி வந்துள்ளேன்.

மேலும் இறைவன் தன் திருமறையில் 24 வது அத்தியாயத்தில் 15 மற்றும் 19 வது வசங்களில் பின் வருமாறு கூறுகின்றான்:-
உங்கள் நாவுகளால் அதை பரப்பியதை எண்ணிப்பாருங்கள், உங்களுக்கு அறிவில்லாததை நீங்கள் கூறினீர்கள்,அதை லேசானதாவும் எண்ணினீர்கள் ஆனால் அதுவோ இறைவனிடத்தில் மிகவும் பயங்கரமானது.

வெட்கக்கேடான செயல் மக்களிடையே பரவவேண்டும் என்னும் எண்ணுவோருக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. அதை அல்லாஹ்வே அறிவான் நீங்கள் அறியமாட்டீர்கள்.

மேலும் 30வது வசனத்தில், (முஹமதே) தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும், தான் கற்பை காத்துக் கொள்ளுமாறும் கண்ணியமிக்க ஆண்களிடம் கூறுங்கள்.
இன்று பெண்களிடம் மட்டும்தான் கற்பு என்று வாதிட்டுக் கொண்டிருக்கும் ஆணாதிக்க வர்காத்திர்க்கு இப்படி ஒரு செருப்படி எந்த மதத்திலும் இல்லை. இருந்தால் கொண்டு வாருங்கள். இதிலிருந்தே விளங்கவில்லையா? நம் சமூக அவலங்கள் அனைத்திர்க்கும் தீர்வு இஸ்லாம் ஒன்றே என்று.

அதே சமயம் 31 வது வசனத்தில், தங்களுடைய பார்வைகளை தாழ்த்திகொள்ளுமார், தங்களுடைய கர்ப்புகளை பேணிக்கொள்ளுமாறும் நம்பிக்கைக் கொண்ட பெண்களுக்கு கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெறிபவை தவிர மற்றவற்றை வெளிபடுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையார், தமது கணவர்களுடைய தந்தையார், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்கு சொந்தமான அடிமைகள். பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மரைத்திருக்குக்ம் அலங்காரல் அறியப்பட வேண்டுமென்பதர்க்கக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கி திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.   

இன்று முக்கியமாக ஒரு வார்த்த்தையே கவனியுங்கள் “தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்”, கவனித்தீரா? இன்று நகரம் என்றில்லை எல்லா ஊர்களிலும் பெண்கள் முக்காடுகளை எங்கே போட்டுளார்கள் என்று நான் சொல்லி தெரிய வேண்டும் என்று அவசியமில்லை, அம்மா மாதர் சங்கங்களே, இதனால உங்கள் பெண் சுதந்திரம் போயி விடாது.

இஸ்லாம் கூறும் தண்டனைகள் நிறைவேற்றாத வரை இந்தியா என்று மட்டுமில்லை, எந்த நாட்டிலும் சமூக தீமைகளை களை எடுக்கவே முடியாது.

மேலும் இந்த இரண்டு வாரங்களில் நடத்தப்பட்ட பெரும்பாலான கணக்கெடுப்புகளும் கூறுகின்றன இஸ்லாம்தான் இதற்க்கு ஒரே தீர்வு என்று,.

உங்களை நான் அன்புடன் கூறி அழைக்கின்றேன், வாருங்கள் இஸ்லாத்தின் பக்கம், படித்துதான் பாருங்களேன் இந்த மனிதருகளுக்கு வழங்கப்பட இந்த வேதத்தை!!!!!!!!!!!!!!!!!!!!!!


கருத்துகள் இல்லை: