OnlinePJ

Thanks for Visiting my Page

புதன், 9 ஜனவரி, 2013

401 வது பதிவு, குறைந்தது 4 பேர் படிப்பாங்களா?


பார்ப்போம், நாலு பேர் படிக்கிறாங்களா? இல்லை நாற்பது பேர் படிக்கிறாங்களா? அப்படியுமில்லை 400 பேர் படிக்கிறாங்களான்னு? சரி அது என்ன எல்லோரும் 100, 200, 300 அப்படின்னு பதிவு எழுதும் பொது நீ மட்டும் என்ன 401 வது பதிவு. எல்லா ஒரு பாசிடிவ் யோசனைதான், அதாவது முன்னூரில் இருந்து 400 என்பது முடிவடையும் இடம், அதனால்தான் 401 என்று தொடங்க கூடிய இடத்தை தேர்ந்தெடுத்தேன்.

அது சரி இவ்வளவு நாள் இந்த அறிவு எங்கே என்று கேட்கிறீர்கள் தெரிகிறது, என்ன செய்வது மனிதனாக பிறந்தால் இதெல்லாம் சாதாரணமாப்பா!!!.

சரி பதிவு தொடங்கியாச்சு என்ன எழுதுவது (அப்போ இதுவரைக்கும் என்னவென்றே யோசிக்கலையா) பொறுங்க இப்படி அவசரப்பட்டால் எழுதவந்தது மறந்துடும்.

டெல்லி கற்பழிப்பு பற்றி கேட்கவே வேணாம், அந்த பெண் என்னவோ கற்பழிக்கப்பட்டது ஆறு பேரால் மட்டும்தான், ஆனால் அதை பற்றி எழுதியே கற்பழித்தவங்க ஒரு 6000........... இருக்கலாம் இன்னும் கொஞ்சும் நீளும்!

இஸ்லாத்திர்க்கு எதிராக இருக்கும் என்று விஷ்வரூபத்தை எதிர்க்க நினைத்தால், அதற்க்குள்ளே அவரே அவருக்கு மிக பெரிய ஆப்புகளை எல்லாம் வைத்து இப்பதான் கொஞ்சம் வெளியே எடுத்து இருக்கார்!!!! இனி படம் வந்தால் வேற உண்டு.........!!!!!!!!!!!! கண்டிப்பாக எதிர்த்தே தீருவேன்.

செவ்வாயில் 80,000 பேர் தங்கும் நகரம் உருவாக்கப்படுகிறது. இந்த தகவலை பேபால் நிறுவனத்தின் உரிமையாளரும்,கோடீசுவரருமான எல்கான் முஸ்க் (41) தெரிவித்தார். ராயல் ஏரோனாடிக்கல் சொசைட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த இவர் செவ்வாய் கிரகத்தில் தங்க விரும்புபவர்கள் இன்னும் 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியது அவசியம். இதர்க்காக நபர் ஒன்றுக்கு ரூ 2 கோடி வசூலிக்கப்படும். அப்போ 80,000 X 2 = 1 60 000 கோடி, இது இருந்தால் இந்த அழகான பூமியில் ஏத்தினையோ நாடுகளில் சாப்பாடு இல்லாமல் மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள், அதனை சரி செய்யலாம்.
இதுதான் இருக்குறதை விட்டுட்டு பராக்குறதுக்கு ஆசை படுவதோ!!!!!! ஒருவேளை இருக்க்லாம் யாருக்கு தெரியும், அப்புறம் செவ்வாயிலே கொஞ்சம் இடத்தை காணோம்!!

இந்துக்கள் இளிச்சவாயார்களா? கருணாநிதியால் கொதிக்கும் சங்கமடம்? இப்பவாச்சும் உங்களுக்கு ரோஷம் வருகிறதே, அட எப்படி உங்களுக்கு ரோஷம் வருகிறதோ அதே போலதான் கருணாநிதி எங்களை (இஸ்லாமியரை) தீவிரவாதி என்று முதன்முதல் தமிழ்நாட்டில் முத்திரை இட்ட பொது கோபம் வந்தது!!!!! பரவா இல்லை உப்பு போட்டுதான் தின்கின்றார்கள்!!!

சச்சின் ஒருநாள் போட்டியில் இருந்து விலகினார், அதுக்கு என்ன இப்ப? இவரு என்ன பெரிய தேச தியாகியா? காசுக்கு மாறடிக்கிற கூலிக்கூட்டம் போன்றவர்தான் இவர். இவர் என்ன நாட்டுக்கு எண்ணத்தை கிழித்தார்????. ஒ கிரிக்கெட் வீரரா? அதுசரி அப்ப வருத்தப்பட வேண்டியதுதான்!!!!!!!!!!!!!!!

பூமியை போன்றே 1700 கிரகங்கள் இருக்கின்றனவாம், ஆனால் பாருங்க, 1700 என்ன 1700 கோடி கிரகங்கள் பூமியை போன்று இருந்தாலும் அங்கே மனிதன் வாழவே முடியாது.!!!!!

ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானிய ராணுவம், இந்திய ராணுவ வீரர்கள் இருவரை கொன்று, ஒருவரின் தலையைத் துண்டித்து எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் இந்திய ராணுவத்தினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 
என்ன கொடுமை பார்த்தீங்களா? ஜம்மு காஷ்மீர் எப்போ இந்தியாவுடன் சேர்ந்தது, இவனுங்களே திருடனுங்க, ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் சேர்ந்துவிட்டது என்பதற்க்கு எதேனும் ஒரு ஆதாராம்????? இருந்தால் பதில் போடுங்க...

இப்படி எங்கு திரும்பினாலும், ஒரே விதமான செய்திகள்தான் பல தரமான கோணல்களில், ஆனால் ஒவ்வொரு செய்திக்கும் இவர்கள் குடுக்கும் தலைப்பு இருக்கிறதே, எப்பா முடியலை!!!! இப்படி ஒரு செய்தியை மட்டும் வைத்துக் கொண்டு பல நூறு பதிவுகளை தாண்டி வெடிர்நடை போடுகின்றோம் என்று வெட்டியாக பதிவு எழுதுபவர்கள் மத்தியில் இப்படியும் ஒருத்தானா என்று நீங்கள் என்னை புகழ்வது தெரிகிறது. இருந்தாலும் இப்போதைக்கு இது போதும். இப்ப கொஞ்சம் ரெஸ்ட், மத்ததெல்லாம் நெக்ஸ்ட்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

2 கருத்துகள்:

yuvanika சொன்னது…

401வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

yuvanika சொன்னது…

401 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.