OnlinePJ

Thanks for Visiting my Page

செவ்வாய், 25 டிசம்பர், 2012

இந்தியாவில் நடக்கும் தவறுகளுக்கு ஒரே வழி இஸ்லாம்தான்!


 
என்னடா இவன் திரும்ப திரும்ப இதை பத்தியே எழுதுகிறான் என்று எண்ணாதீர்கள், என்ன செய்வது வேற வழியில்லை, சில விஷயங்களை அதற்க்கு ஏற்ற இடங்களில் சொன்னால்தான் அது குறைந்தது ஒரு 60% மக்களிடம் போயி சேரும். “இடம், பொருள் பார்த்து பேசவேண்டும்” என்பதில் எனக்கு முழு உடன்பாடு.

இன்று பல கோணங்களில் பலவிதமாக சமீபத்திய டெலி சம்பவத்தை பற்றி கருத்துக்கூறினாலும், நாம் ஒரு சில விஷயங்களை மறுக்கமுடியாது. அதாவது விக்கிபீடியா என்கின்ற வலைதளத்தில் இந்தியாவில் நடந்த கற்பழிப்புகள் மற்றும் பெண்கலுக்கு எதிரான செயல்களை பட்டியலிட்டுள்ளார்கள் அந்த பட்டியலை பார்பதற்க்கு முன்னாள், நமது புண்ணாக்கு தேசத்தில் கற்பழிப்பு சம்பந்தமாக என்ன நிலைப்பாடு இருக்கிறது என்பதை பார்ப்போம்.

இந்தியாவை பொறுத்தவரை கற்பழிப்பு என்பது ஒரு பொதுவான குற்ற செயல் ஆகிவிட்டதாம், மேலும் இந்தியாவில் ஒவ்வொரு 34 நிமிடத்திர்க்கு ஒரு பெண் கற்பழிக்கவோ அல்லது கற்பழித்து கொல்லபடுகிறாள் என்கிறது ஒரு ஆய்வு. இன்னும் ஒரு படி மேல இந்தியாவில் 25% பெண்கள் 15 வயதிர்க்கு முன்பே இரண்டு விடுகிறார்களாம், அதில் அதிகமானோர் கற்பழித்து கொலை செய்ய படுகிறார்களாம். 1971 முதல் இந்தியாவில் கற்பழிப்பு 700% வளர்ந்துள்ளதாம் (ஒ இதைதான் இந்தியா 2020-இல் வல்லரசு ஆகிவிடும் என்கிறார்களா), 2001 ஆம் ஆண்டில் மட்டும் 26,000 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளனவாம். மேலும் அதே ஆண்டு பதிவான 256,329 குற்றங்களில் 228,650 பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ( இந்திய நாட்டை கூட இந்தியர்கள் பெண்ணாக தான் பார்க்கிறார்கள்). மேலும் இந்த கற்பழிப்புகள் அதிகமா தாழ்த்தப்பட்ட வர்காத்தினர் மீதே அதிகமாக செய்யபடுகின்றன. இவ்வாறு இந்தியாவின் வல்லரசு கனவை கூறிவிட்டு, அந்த வலைத்தளம் இந்தியாவில் இது வரை நடைபெற்ற கற்பழிப்புகளை பற்றி ஒரு பட்டியலிடுகிறது:-

1.   1973 –ஆம் ஆண்டு அருணா ஷன்பௌக் என்கின்ற நர்ஸ் வேலை செய்த ஒரு பெண் அதே மருத்துவமனையில் துப்புரவு பணியாளர் ஒருவரால் ஆண்டு கற்பழிப்பட்டார், ஆனால் இந்த கேஸ் 2011 ஆம் ஆண்டுதான் தீர்பளிக்கப்பட்டது. அதுவும் வெறும் 7 ஆண்டு சிறைத்தண்டனை. ஆனால் அந்த பெண்ணிர்க்கோ இதன் மூலம் பார்வை பறிபோனது, சுவாச மண்டலம் பாதிப்படைந்ததான் மிச்சம்.  
2.   1974 ஆம் ஆண்டு 16 வயது பெண் ஒருத்தி இரண்டு போலீஸ்காரர்களால் போலீஸ் நிலையத்திலேயே கற்பழிக்கப்பட்டால். ஆனால் நீதிமன்றம் அவளை அந்த வழக்கில் விபச்சாரீ என்றும், உடம்பில் எந்த வித காயங்களும் இல்லை என்றும் கூறி அவர்களை விடுதலை செய்தது.
3.   1991 ஆம் ஆண்டு காஷ்மீரில் உள்ள குனன் புஷ்போரா என்கின்ற கிராமத்தில் இந்தியா ராணுவம் கிட்டதட்ட 100 பெண்களை கற்பழித்தார்கள், இதில் கல்யாணம் ஆனவர்கள், ஆகாதவர்கள் மற்றும் கற்பிணியை கூட விட்டு வைக்கவில்லை. இவை அனைத்தும் கும்பலாக செய்தார்கள்.
4.   1992 ஆம் ஆண்டு அஜ்மீரில் பண்வரி தேவி என்கின்ற பெண்மணி, 5 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டால், அவர்கள் அவளுடைய கணவனை அடித்து போட்டுவிடு இந்த தீய செயலை செய்தார்கள்.
5.   அதே 1992 ஆம் ஆண்டு, நம்ம தமிழகத்தில் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் வச்சாத்தி என்கின்ற கிராமத்தில் வனத்துறைனரும், காவல்துறையினரும் சேர்ந்து 18 பெண்களின் கற்புக்களை சூறையாடினர். ஆனால் இந்த வழக்கு 2011 ஆம் ஆண்டு தான் தீற்பழிக்கப்பட்டது, இதில் மொத்தம் 215 பேர்களுக்கு சிறை தண்டனை வழக்கப்பட்டது.  
6.   1996 ஆம் ஆண்டு, சூர்யாநெல்லி இடுக்கியை சேர்ந்த 16 வயது பெண் தொடர்ந்து 40 நாட்கள் 42 பேர்களால் கற்பழிக்கப்பட்டால். இதர்க்கும் சரியான தீர்ப்பு வழங்கபடவில்லை.
7.   1999 ஆம் ஆண்டு, அஞ்சனா மிஷ்ரா அங்கீன்ற ஒரிஸ்ஸாவை சார்ந்த பெண் தன்னுடைய தோழி ஒருத்தியுடன் போகும் பொழுது 3 பேர்களால் தடுக்கப்பட்டு தன்னுடைய தோழியின் கண் முன்னே கற்பழிக்கப்பட்டால்.
8.   2004 ஆம் ஆண்டு தங்கஜம் மனோரமா, என்கின்ற பெண்மணி 17 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டு, மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்டால். அந்த 17 பேர்களும் ராணுவத்தை சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் தகவல்.
9.   2005 ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த சரி எஸ் நாயர் என்ற பெண் நாடகங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றி 6 நபர்களால் கற்பழிப்பட்டால். இதில் இவளை இது போல செய்ததற்க்கு முக்கிய காரணம்  லதா நாயர்  என்கின்ற பெண்மணிதான்.
10.  அதே 2005 ஆம் இம்ரான என்கின்ற பெண்மணி தன்னுடைய மாமனாறினாலேயே கற்பழிக்கபடுகிறாள். இதர்க்கும் சரியான ஒரு தீர்ப்பு வழங்கபடவில்லை.


இங்கே மேல குறிப்பிட்டது மட்டுமில்லாமல் இந்தியாவில் இன்னும் ஏறலாமான கர்ப்ழிப்புகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றது, அதுமட்டுமில்லாத மேலே உள்ள எந்த ஒரு கற்பழிப்பீர்க்கு மரணதண்டனை விதிக்கவில்லை, பெண்களை புனிதமாக பார்க்கும் இந்த இந்திய திருநாட்டில் இந்த தெருநாய்களை இப்படி விட்டால், 2020 இல்லை, உலகம் அழியும் வரை இந்தியா வல்லரசில்லை, ஒரு புள்ளை புடுங்க கூட லாய்க்கில்லாமல் போய்விடும்.

இதர்க்கெல்லாம் ஒரே முடிவு, இஸ்லாமிய முற்றவியல் தண்டனைகள்தான், ஒருத்தன் திருடுறானா? கைய்ய வெட்டு, ஒருத்தன் கொலை செய்கிறானா? தூக்கில் போடு (கொலையானவனுடைய உறவினர்கள் மன்னித்தால் அவனை மன்னித்துவிடு), நான் ஒன்றும் உங்களை முழுவதுமாக இஸ்லாத்திர்க்கு வார சொல்லவில்லை, குறைந்தது உங்கள் வீட்டு பெண்களை பாதுகாக்க இஸ்லாமிய சட்டங்களை நடைமுறை படுத்துங்கள், மிருகத்தை விட கேவலமான இவர்களை மக்கள் மன்றத்தில் வைத்து தூக்கிலிடுங்கள், இல்லை மக்களிடத்தில் விட்டுவிட்டு இவர்கள்தான் என்று கூறிவிட்டு சென்று விடுங்கள், மாற்றத்தை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

மேலும் இறைவன் தான் திருமறையில் கூறிகின்றான்:- -

நபியே நீர் மூமீனான ஆண்களுக்கு கூறுவீராக, அவர்கள் தமது பார்வைகளை தாழ்த்திக் கொள்ளட்டும். தமது மர்மஸ்தானங்களை பாதுகாத்துக் கொள்ளட்டும், அது அவர்களுக்கு மிகவும் சிறந்ததாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

நீங்கள் விபச்சாரத்தை நெருங்கவும் வேண்டாம், அது மாநாகேடனாதாகவும், மோசமான வழிமுறையாகவும் இருக்கின்றது.

ஆண்களும் பெண்களும் எப்படி காட்டுபாட்டுடன் வாழும் ஒரு நெறியை இஸ்லாம் சொல்கிறது. இதை அறிவுரையாக இல்லாமல், இதற்க்கு ஒரு மாத சாயம் பூசாமல், ஒரு நாட்டின் வழிமுறையாக மாற்றினால், குறைந்தது 3020 இல் ஆவது இந்தியா வல்லரௌ ஆக கொஞ்சம் வாய்ப்புள்ளது.



கருத்துகள் இல்லை: