OnlinePJ

Thanks for Visiting my Page

வியாழன், 20 டிசம்பர், 2012

இந்த மிருகங்களை என்ன செய்யலாம்?


ஒரு பெண்  இரவு 12 மணி அளவில் வெளியே சென்றாலும் அவள் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல்  நடமாடுகிறாலோ அன்றுதான் முழு சுதந்திரம் கிடைத்தது என்று அர்த்தம் என யாரோ சொன்னதாக எனக்கு நினைவு!


ஆனால் இந்தியாவின் தலைநகரில் ஓடும்  பேருந்தில் ஒரு பெண்ணை 6 காம கொடூரன்கள் சிதைத்துள்ளனர்...இப்போது அந்த பெண் சீரியசான நிலையில்  மருத்துவ மனையில்!இவ்வளவுக்கும் அப்பெண் ஒரு ஆண் தன்  உறவினருடன் இருக்கும்போதே அந்த நபரை அடித்து கீழே வீசிவிட்டு இந்த கொடுரத்தை அரங்கேற்றி உள்ளனர் அந்த மிருகங்கள்.


டெல்லிக்கு இது ஒன்றும் புதிதல்ல. நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக டெல்லி திகழ்கிறது. கடந்த வருடம் மட்டும் டெல்லியில் 572 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என்று அதிர்ச்சியளிக்கிறது தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பின் புள்ளிவிபரம். பாலியல் பலாத்கார நிகழ்வில் டெல்லி முதலிடத்தில் இருப்பதாகவும் அந்த அமைப்பு எச்சரிக்கிறது. அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பலாத்கார குற்றங்களில் மிக மோசமாக இருக்கும் மாநிலம் டெல்லிதான் என்கிறது அந்த அறிக்கை.ஒரு நாட்டின் தலைநகரத்துக்கு இதைவிட வேறு என்ன பெருமை வேண்டும்?

இது சம்பந்தமாக நாடெங்கிலும், போராட்டங்களும், ஆர்பாட்டங்களும் நடந்து வருகின்றன, என்னதான் போராடினாலும், அந்த பெண் இயல்பு வாழ்க்கைக்கு வருவது மிகவும் கடினம், மேலும் அந்த பெண்ணிர்க்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் கூறுகையில், அந்த பெண்ணின் மிக முக்கியமான உறுப்புகள் மிக மோசமாக பாதிக்கபட்டதாக கூறியுள்ளார்கள், மேலும் இது போல ஒரு கொடூரமான கேசை இதுவரை பார்த்ததில்லை என்று வேற கூறுகின்றனர். இதர்க்கெலாம் மேல இறைவன்தான் அந்த பெண்ணை காப்பாற்ற வேண்டும்.

சரி இனி அந்த  மிருகங்களுக்கு என்ன தண்டனை தரலாம்?. ஒரு 7 வருடம் சிறை தண்டனை? 15 வருடம்? அல்லது ஆயுள் தண்டனை? இந்த உலகில் எத்தனை வகை தண்டனை குடுத்தாலும் அந்த பெண்ணிர்க்கு மன திருப்தி வராது, அந்த மிருகங்களை நடு ரோட்டில் பொது மக்கள் முன்னிலையில் தூக்கில் இட வேண்டும், அதை பார்க்கும் மற்றவர்கள் இனி அது போன்ற தவறை செய்ய பயப்பட வேண்டும், இதை உடனே எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் நடத்திட வேண்டும். இதெல்லாம் இந்த இந்தியாவில் சாத்தியமா?

தண்டனைகள் கடுமையானால்தான், தவறுகள் குறையும், யாரோ சொன்னது மறுபடியும் நியாபகத்திர்க்கு வந்துதொலைகிறது!!!!!!!

மனித நேய ஆர்வலர்களே, தயவுசெய்து இவர்களின் தூக்கிற்க்க்கும் வக்காலத்து வாங்கி கொண்டு வறாதீர்கள், உங்கள் வீட்டிலும் இவளை போன்ற ஒரு பெண்ணிருக்க கூடும்.


1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

இது போன்ற கயவர்களை ஒவ்வொரு வாரமும் மக்கள் கூடும் இடத்தில் கொண்டுவந்து இவர்கள் செய்த தவறுகளை சொல்லி சாட்டை அடி கொடுத்து பின்னர் நாடு வீதியில் தூக்கு போட்டு கொல்லவேண்டும்.
kalam