OnlinePJ

Thanks for Visiting my Page

புதன், 26 டிசம்பர், 2012

இந்தியாவில் நடக்கும் குற்றங்களுக்கு இஸ்லாதான் ஒரே வழி – பாகம் 2


நேற்றைய தினம் இந்தியாவில் நடக்கும் அக்கிரமங்களுக்கு இஸ்லாம்தான் தீர்வு என்பதை பார்த்தோம், அதன் தொடர்ச்சியாக இந்த பதிவில் மேலும் ஒரு தீர்ப்பும் இஸ்லாம் வழங்குகிறது:-


பெண்களுக்கான பாதுகாப்பு:-
உடலை மறைத்தால்தான் ஆண்களின் தொல்லைகளிலிருந்து பெண்கள் தப்பிக்க முடியும். ஆண்களிடம் குலைந்து பேசக்கூடாது. அப்போதுதான் பாதுகாப்பாக ஒரு பெண் இருக்க முடியும் என இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டுப் பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் தற்போது பெண்கலுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இதற்க்கு முக்கிய காரணங்களில் ஒன்று நவீன கால பெண்களின் ஆட முறைகளே. பெண்கள் தங்களின் உடலை இஸ்லாம் சொல்லும் முறைப்படி மறைத்தால் மட்டுமே இது போன்ற குற்றங்களை பெருமளவில் குறைக்க முடியும். அதேபோல் பெண்கள் அந்நிய ஆண்களிடம் குழைந்து பேசுவதை தவிற்பதன் மூலம் இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியும் என குர்ஆன் மனித சமுதாயத்திர்க்கு வழிகாட்டுகின்றது.

“நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலபடுவ்னா. அழகான கூற்றையே கூறுங்கள் (அல் குர்ஆன் 33:32)


குர்ஆனின் இந்தக் கூற்றை மேபிக்கும் வண்ணமாக இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டு பெண்கள் இந்தியா வாலிபர்களால் தொல்லை தாங்க முடியாமல் உடலை மறைப்பதன் மூலமும், குழைந்து பேசுவதை தவிற்பதன் மூலமும் எங்களை நாங்கள் பாதுக்காத்துக் கொள்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.

இந்தியா வாலிபாற்கால் தொல்லைக்கு ஆளான வெளிநாட்டுப் பெண்களை சந்தித்து அவர்கள் பட்ட தொல்லைகள், அதை தவிர்க்க அவர்கள் மேற்கொள்ளும் வழிமுறைகளை பேட்டி எடுத்து தீ வீக் பத்திரிக்கை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது.


அதில்:-
நெதர்லாந்தை சேர்ந்த 26 வயது பெண் அன்னிமிகி ஸ்பிட்சி, டெல்லியில் படித்துக்கொண்டு இருக்கின்றார். அவர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்..... நான் மேற்கத்திய முறையில் (அரைகுறை) ஆடைகளை அணிந்து செல்லும்போது ஆண்களின் தொல்லைக்கு ஆளானேன். ஒரு முறை பழைய டெலீயில் சாலையை கடக்க முயன்ற பொது ஒருவன் என்னை தொட்டு சில்மிஷம் செய்தான். நான் பேருந்தில் பயணிக்கும்போது வேண்டும் என்றே என்னை உரசுவது, பிறகு “சாரி” சொல்வது ஆண்களுக்கு வாடிக்கையாக போய்விட்டது. இதை தடுக்க நான் இப்போதெல்லாம் உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிகின்றேன். வெளியில் போகும்போது ஸ்கார்ப்பை அணிந்து செல்கின்றேன். இப்போது என்மீதான ஆண்களின் பார்வையை தடுக்க முடிகின்றது. ஓரளவிர்க்கு பாதுக்காப்பை உணரமுடிகிறது எனத் தெரிவித்துள்ளார்.

இவரை போலவே பாதிக்கப்பட்ட எல்‌ஐ‌எஸ் கிரீன் என்ற இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண்மணி கூறுகையில்.... ஆண்களின் தொல்லைகளில் இருந்து தப்பிக்க நான் இப்போது ஆண்களிடம் குழைந்து பேசுவதில்லை, கடுமையாகவே நடந்துகொள்கின்றேன். ஆண்களை பார்த்து புன்னகை புரிவதில்லை. இதன் மீளம் நாம் பாதுக்காப்பாக இருந்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இஸ்லாம் மனித குலத்திர்க்கு நடைமுறைப்படுத்த கூடிய சிறந்த நடமுறையே வழங்குகிறது. பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையிலிருந்து தீர்வை வழங்குகிறது. பாதிக்கப்பட்ட இந்த பெண்கள் முஸ்லீம்கள் இல்லை. இவர்கள் ஆண்களின் தொல்லைகளை அனுபவித்து அதில் இருந்து தப்பிக்க இஸ்லாம் சொல்லும் தீர்வைதான் தேர்ந்தெடுள்ளனர்.

இப்படி பிரச்சனைகளை சந்திக்காத, அல்லது இதுபோன்ற கேவலத்தை விரும்புபவர்கள்தான் இஸ்லாம் சொல்லும் தீர்வை எதிர்கின்றனர். ஆண்களின் பாலில்யல் தொல்லையில் இருந்து தர்க்காத்துக் கொள்ள மானம் உள்ள எவரும் இஸ்லாம் சொல்லும் உடலை மறைத்தல், ஆண்களிடம் கண்டிப்புடன் பேசுதல் போன்ற தீர்வைதான் தேர்ந்தெடுப்பார்கள். அனைத்து பிரச்சனைகளுக்கும் இஸ்லாம் சொல்லக்கூடிய தீர்வுகள்தான் சரியானவை என்பதை மேற்க்கண்ட நிகழ்வுகள் உண்மைப்படுத்திக் கொண்டுள்ளன.

முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் பெண்களை ஒரு காமப் பொருளாக பார்க்கவே இவர்கள் பெண்களின் மானத்தைக் காக்கும் பர்தா முறையை எதிர்க்கிறார்கள். பர்தா எதிர்ப்பு என்பது ஆண்களின் காம இச்சையின் வெளிப்பாடே தவிர ஒழுக்கமுள்ள மனிதனின் பண்பாகாது. எனவே பெண்கள் பர்தா அணிவதை வலியுறுத்துவோம். பெண்களின் மான காக்கும் பண்பாளர்களாவோம்.

நன்றி:- www.onlinepj.com  

கருத்துகள் இல்லை: