OnlinePJ

Thanks for Visiting my Page

செவ்வாய், 3 மே, 2011

ஒசாமாவை கொன்ற அமெரிக்க அரசாங்கம் தீவிரவாதிகள் இல்லையா?




இன்று எல்லோராலும் பெரிதும் பேசப்படுவது நேற்றைய தினம் அமெரிக்க ராணுவத்தால் கொலை செய்யப்பட்ட ஒசாமாவை பற்றிதான். அவர்  நல்லவரா  இல்லை தீவிரவாதியா என்பதை பற்றி நான் இங்கே அலசவரவில்லை............அதை பற்றி அலசுவதற்கு முன்னாள்................இந்தியராகிய நாம் சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பார்வையில் தீவிரவாதிகளா இல்லை நல்லவர்களா என்று ஒரு அலசல் ரிபோர்ட் தான் இந்த பதிவு...அது மட்டுமில்லை. இன்று உலகையே தனக்கு அடிமை போல கருதும் அமெரிக்க அரசாங்கம் செய்வது தீவிரவாதமில்லையா என்பதை பற்றியும் ஒரு ஆய்வு.......................இதன் முடிவில் சிந்திக்க கூடியவர்களுக்கு கண்டிப்பாக புரியும்.

முதலில் நம் இந்தியா சுதந்திரம் அடைந்தது யாரால் என்று கேட்டால் அதற்க்கு காரணம் மகாத்மா காந்தி என்று யாரை கேட்டாலும் சொல்லுவார்கள்...........ஏன் என்றால் அவர்தான் அமைதியான முறையில் போராடி சுதந்திரம் வாங்கி குடுத்தார்.................இருந்தாலும் அதே காலத்தில் இந்த அமைதி போராட்டம் எல்லாம் சரியாக வராது என்று நேதாஜி தலைமையில் ஆங்கிலயருக்கு எதிராக கிளம்பிய படைக்கு பெயர் புரட்சிப்படை, அதன் மூலம் அவர் கொன்ற ஆங்கிலேயர்களின் உயிரும் உயிர்தான், மயிர் இல்லை, அதை ஏன் நாம் ஏற்று கொண்டோம் என்றால் அவர்கள் நம்மை அப்படி ஒரு கொடுமை படுத்தினார்கள்.(அதுதான் இன்று நீங்கள் கூறும் தீவிரவாதம்), ஏன் அவர் இதை செய்தார், வேறு நாட்டுக்காரன் தன நாட்டை ஆளக்கூடாது என்று ஒரு ஆதங்கம், அந்த ஆத்திரத்தில் தான் அன்று அவர் அப்படி செய்தார். அவர் மட்டுமில்லை இன்னும் ஏராளமானோர், ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதத்தைத்தான்  கையிலேடுதார்கள், அப்படி என்றால் அன்றைய இந்தியர்கள் ஆங்கிலேயர்களின் பார்வையில் தீவிரவாதிதான்....................அன்று மட்டுமில்லை இன்று கூட வேறு ஒருவன் நம் நாட்டை அடிமைபடுத்த நினைத்தால் நம் நாட்டை காக்க அவர்களை எதிபதர்க்கு ஆயுதத்தை கையிலெடுக்க நாம் அனைவரும் தயார்......................இதைதான் இன்று உலகம் முழுவதும் தீவிரவாதம் என்று கூறி கொண்டு அதை ஒரு சமுதாயத்தின் மீது சாயம் பூசி கொண்டே இருகிறார்கள்....அதனால் நான் தீவிரவாதமே இல்லை என்று சொல்லவில்லை.................எந்த ஒரு காரணமும் இல்லாமல் அப்பாவி மக்களை கொன்று குவிப்பவர்கள் கண்டிப்பாக தீவிரவாதிதான்,,,,,,,,,,,,,,,,,அவர்களுக்கு கண்டிப்பாக மிக பெரிய தண்டனைதான் தர வேண்டும் என்பதில் கடுகளவும் எனக்கு ஆட்சயபனம் கிடையாது.  

இந்த அடிப்படையில் பார்த்தால் தன நாட்டை அமெரிக்கா என்ற ஒரு கொடூர அரக்கனிடமிருந்து காப்பாற்ற உருவாகின ஒரு புரட்சி படைதான் இந்த ஒசாமா படை. இன்னும் சொல்ல போனால் இவரை வளர்த்து விட்டதே இந்த அமெரிக்காதான். மேலும் இந்த அமெரிக்கா அரசாங்கம் ஒசாமாவை கொல்ல சொல்லும் காரணம் அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணம் இந்த ஒசமாதான் என்று..................."இதுல என்ன கொடுமைனா அந்த தாக்குதலுக்கும் இந்த ஒசாமாவிற்க்கும் எந்த ஒரு தொடர்புமில்லை என்பதே உண்மை" மேலும் விளக்கம் தேவை என்றால் தயவு செய்து இந்த விடியோவை ("LOOSE CHANGE") தரவிறக்கி பாருங்கள் உங்களுக்கே புரியும் வீடியோ பெயர் மட்டும் தான் எனக்கு தெரியும் டோறேன்டிலோ இல்லை யூடுபிலோ பாருங்கள். இந்த விடியோ ஒரு 90 நிமிடங்கள் ஓட கூடிய விடியோ முழுவதும் பாருங்கள். கண்டிப்பாக விளங்கும் இது முழுக்க முழுக்க அமெரிக்கா அரசாங்கத்தின் திட்டமிட்ட சதி என்று. மேலும் அந்த விடியோவில் சொல்ல பட்டிருக்கும், இவர்கள் யாரை எல்லாம் குற்றவாளிகள் என்று கூறினார்களோ அதாவது கோபுரங்கள் மேல் மோதிய விமானத்தில் இருந்த தீவிரவாதிகள்  என்று குற்றம் சுமத்தினார்களோ அவர்களில் பாதி பேர் இன்றும் கூட உயிரோட இருபதாக  கூறப்பட்டிருக்கும், 
சரி அப்படியே ஒசமாதான் காரணம் என்று வைத்து கொள்வோம், இந்த அமெரிக்கா அரசாங்கம் இப்பொழுது தீவிரவாத ஒழிப்பு என்று கூறிக்கொண்டு இராக்கிலும், பலஸ்தினிலும் அன்றாடம் அப்பாவி மக்களை கொன்று குவிப்பதை என்னவென்று சொல்லுவது.....................? இதை யாரு கேட்பது. நேற்று சதாம் ஹுசைன் இன்று ஒசாமா நாளை நமது மன்மொஹன்சின்கா கூட இருக்கலாம் யாருக்கு தெரியும்.?

இன்று நாம் நிறைய முன்னேறி இருக்கிறோம், நமது வலைபதிவர்கள் அதிகமாகி கொண்டே வருகிறார்கள், ஆனால் எதையுமே சரியாக ஆராயாமல் வெறும் செய்திகளை மட்டும் படித்து விட்டு அவர்கள் வலைபதிவில் போட்டு விடுகிறார்கள், கண்டிப்பாக ஆரயாந்தாள் எது உண்மை என்று விளங்கிவிடும், நாம் (வலைபதிவர்கள்) எல்லாம் சமுதாயதிற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த வலைப்பதிவை தொடங்கி உள்ளோம், ஏனோ தானோ வென்று மக்களை குழப்புவதை விட, உண்மையை புரியவைத்தால், நாளை நாமும் போற்ற படுவோம் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை, என்னுடைய ஒரே வேண்டுகோள், முடிந்தவரை அந்த விடியோவை பாருங்கள், ஒசாமா நல்லவரோ கேட்டவரோ என்பதை விட அமெரிக்கா எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம். 

உங்கள் கருத்துக்கள் என்னுடைய தவறுகளை திருத்தி கொள்ள உதவும்..................................




1 கருத்து:

Unknown சொன்னது…

பின் லாடன் உள்ளிட்ட அனைத்து இஸ்லாமிய சாயம் பூசப்படா அனைவரும் அமெரிக்கவினால் தீவிரவாதிகள் ஆக்கப்பட்டவர்களே!!