OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 25 ஏப்ரல், 2011

எப்போதெல்லாம் இந்திய அணி கிரிகெட் ஆடுகிறதோ அப்போதெல்லாம்





எப்போதெல்லாம் இந்திய அணி கிரிகெட் ஆடுகிறதோ அப்போதெல்லாம் மீனவர்கள் கொல்லபடுகிறார்கள் என்று அது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகி விட்டது. உலக கோப்பை போட்டியில் இலங்கை நம்மிடம் தோத்ததற்கு நான்கு மீனவர்களை கொன்று வெறியை தீர்த்து கொண்டது . வழக்கம் போல் நிருபமா வருத்தம் தெரிவித்தாகி  விட்டது . பிரெச்சனையை இந்தியா உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறதாம் .ஹி ஹி .வேற என்ன புடுங்க முடியும் ..இன்னும் நாற்ப்பது பேரை கொன்றாலும் இன்னும் உன்னிப்பாக கவனித்து கொண்டுதான் இருப்பார்கள்.பேசாமல் உன்னிப்பாக கவனிக்கும் இலாக்கா ஒன்று ஆரம்பித்து  அதுக்கு ஒரு அமைச்சரையும் போடலாம் மங்குனி சும்மாதான் இருக்காரு .


சரி விசியத்துக்கு வரேன் ஐ.பி.எல். என்னும் பணம் கொழிக்கும் ஆட்டத்தில். கிரிகெட் ஆடும் அணைத்து நாடுகளும் விளையாட மிக ஆர்வமாக இருக்கிறது . காரணம் வீரர்களுக்கு கிடைக்கும் அபரிதமான பணம் .
அந்த அற்ப சந்தோசத்தை கூட பாகிஸ்தானுக்கு குடுக்க இந்தியா தயாராக இல்லை . அந்த நாட்டில் இருந்து ஒருவரையும் ஏலத்தில் எடுக்கவில்லை. பழி வாங்குறாங்கலாமாம்.

அப்பேற்பட்ட ரோசகார புளியாங்கொட்டை நாடான இந்தியா இலங்கையில் இருந்து மட்டும் பதினொரு வீரர்களை ஏலம் எடுத்தது .
எல்லாம் செஞ்சோற்று கடன் .வேற எந்த நாட்டில் இருந்தும் இவ்ளவு வீரர்களை மொத்தமாக எடுக்கவில்லை .

ஆனால் நேரம் பார்த்து வச்சான் பாரு ஆப்பு. எல்லாரும் ஆடுனது போதும் திரும்பி வாங்கன்னு . நம்ம ஆளுங்க  கெஞ்சி கேக்குறாங்க ஒன்னுத்துக்கும் மசியவில்லை .

 இப்போ ஐ.பி.எல். க்கு போட்டியாக எஸ்.பி.எல். ஆரம்பிக்க போறாங்களாம் இந்த போட்டியை பாகிஸ்தானும் இலங்கையும் சேர்ந்து நடத்துகிறது என்று நினைக்கிறன் . கிழக்கு இலங்கைக்கு அப்ரிதி கேப்டனாக நியமிக்க பட்டுள்ளார்
ஜூலை முதல் ஆகஸ்ட்டு வரை இலங்கையில் நடக்கும் வெளிநாட்டு வீரர்களை அவர்கள் ஏலம் எடுப்பார்களாம் .
போங்கடா போங்க இங்க விலை போகாத மாடுங்க எல்லாம் இனிமேல் அங்க போயி கழுத்துல டோக்கன மாட்டிக்கிட்டு நில்லுங்க நல்ல விலைக்கு போவீங்க மகராசனுங்களா .

அமெரிக்காவின் காலில் குத்திய முள் என்று கியூபாவை சொல்வார்கள் . அதே போல இந்தியாவின் காலில் குத்த போகும் முள்ளாக வளர்ந்து  வருகிறது இலங்கை. இந்த புண்ணியம் எல்லாம் அந்த கணவனை இழந்த அந்த அன்னையாரை தான் சேரும்.
அது சரி எவன் தாலி அறுத்தா நமக்கு என்ன இத்தாலி பிசா சாப்பிட்டா போதும். நல்ல கட்சி,...... நல்ல தலைவி,..... நல்ல நாடு,...நல்ல தேசபக்தி......நல்ல (மானங்கெட்ட)தொண்டர்கள் ..............

கருத்துகள் இல்லை: