OnlinePJ

Thanks for Visiting my Page

செவ்வாய், 13 டிசம்பர், 2011

ஏன் இந்த கொலை வெறி? இது கண்டிப்பாக தனுசின் கொலை வெறி இல்லை


என்னங்க தலைப்ப பார்த்தவுடனே, என்னடா இவனும் இந்த பாட்டுக்கு வக்காலத்து வாங்க போறான்னு நினைகிறீங்கள.........அதுதான் இல்லை....இந்த பாட்டு எனக்கு புடிச்சிருக்கு ஆனால் நான் அதை பத்தி பேச வரவில்லை.........இன்று நம் இந்தியாவில நடக்கும் கொலை வெறிய பத்திதான் பேச போகின்றேன்.



இன்று நம்ம இந்தியாவில் எங்கு பார்த்தாலும் ஊழல், கொலை, கற்பழிப்பு, விலைவாசி உயர்வு இன்னும் இதுபோல மக்களுக்கு பாரமாக நிறைய இருக்கிறது .
இதை எல்லாம் நம்ம ஊடகங்களும் மக்களுக்கு எடுத்து காட்டும், ஆனால் அப்புறம் கொஞ்சம் நாட்களில் பார்த்தால் அடுத்த பிரச்சினை பற்றி பேச ஆரம்பித்து விடும். உதாரணமாக:-.




  1. தமிழக மீனவர்கள் படுகொலை.
  2. உலக கோப்பை கிரிக்கெட்
  3. அப்புறம் சச்சின் நூறாவது நூறு எப்போ அடிப்பாரு (இப்பவும் தொடருது)
  4. அன்ன ஹசறேவின் உண்ணாவிரதம் (அவன் ஒரு நாதாரி பய அத விடுங்க)
  5. தமிழக தேர்தல்
  6. ரஜினியின் உடல் நிலை சரியில்லை.
  7. ரஜினி ராணாவில் நடிப்பாரா??
  8. ரஜினியின் ஜோடி யார்?
  9. அந்த தேர்தலில் விஜகாந்த், வடிவேல் சண்டை.
  10. ஸ்பெக்ட்ரம் ஊழல்
  11. கனிமொழி மற்றும் ராஜா கைது 
  12. தேர்தல் முடிந்த பதவி ஏற்க வரவழியில் அநியாயமாக ஒருத்தர் கொல்லபட்டார்.
  13. கூடான்குளம்  அணுமின் நிலையம் பிரச்சினை.
  14. இப்பொழுது முல்லை பெரியார் ஆணை.
இங்கே மேல சொன்னதல சில முக்கியமானதும் இருக்கின்றது அதாவது சமுதாய பிரச்சினை. அதில் இந்த ஊடகங்கள் செய்த சில கொலைவேரிகளை பற்றி இங்கே பாப்போம்

கொலைவெறி #1  :-தமிழக மீனவர்கள் படுகொலை:-

இது இன்று நேற்று இல்லை கால காலமாக நடந்து கொண்டுதான் வருகின்றது. இதுல என்ன ஒரு கொடுமை என்னவென்றால், ஆஸ்திரேலியாவில் ஒரு இந்தியன் தாக்குதலுக்கு உட்பட்டால் நம்ம ஊடகங்கள் சொல்லுவது "ஆஸ்திரேலியாவில் இந்தியர் மீது தாக்குதல்" அதே இந்தியன் அதாவது நம்ம தமிழகத்து மீனவர்கள் இஅலங்கை படையினரால் சுட்டு கொல்லப்பட்டால் இந்த ஊடகங்கள் எழுதுவது "தமிழ் மீனவர்கள் சுட்டுக் கொலை" அப்போ தமிழ் நாடு இந்தியாவில் இல்லையா?? ஏன் இந்த கொலை வெறி. (நாம கண்டிப்பாக தனி நாடு கேட்டு போராடனும்). இதுல மேலும் கொடுமை என்னவென்றால் நம்ம தமிழ் ஊடகங்களே அப்படிதான் எழுதுறாங்க...........ஏன் இந்திய மீனவன் இலங்கை ராணுவத்தால் சுட்டு கொலை என்று எழுதலாமே................!!!!

கொலைவேர் #2 :- தமிழக தேர்தல் 

இந்த தேர்தல பார்தீங்கன்ன நம்ம அம்மாவுக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் அப்படியே ஹல்வா சாபிடுகின்றது போல ஆகிவிட்டது எப்படியோ அதை வைத்து ஒரு அரசியல் செய்து ஏதோ பிழைத்து விட்டார், இதுல அவரு அதிகமா சொன்னது மின்சாரம் சரியாக வழங்கப்படும் என்று, ஆனா இதுல பாருங்க முன்ன விட இப்பதான் அதிகமா மிசாரம் தடைபடுகின்றது.............ஏங்க இந்த கொலை வெறி...........!!!! ஒட்டு போட்டவங்க எல்லாம் கொஞ்சம் யோசிங்க.(நான் போடலைங்க என்ன நான் வெளிநாட்டுல இருக்கேன்,,,,,,,,,,,,கொய்யாலே தப்பிச்சோம்லே)

கொலைவெறி #3 :- ரஜினியின் புராணம்

இப்ப இருக்குற நாட்டு நடப்புக்கு இந்த தலைப்பு தேவையா? ரஜினி என்பவர் யார் காசுக்காக எதைவேணும்னாலும் செய்கின்ற நடிகர் தொழில் செய்பவர் அவ்வளவுதான். இதை ஏன் இந்த ஊடகங்கள் புரிந்து கொள்ள மாட்டேங்கிறாங்க..........அப்பாவி பாமரர்கள்தான் புரிந்து கொள்வதில்லை என்றால் நல்லா படித்து விட்டு வருகின்ற உடகங்கள் ஏன் இதை போட்டு பெரிது படுத்துகின்றன??? அவனவன் ஒரு வேலை சோத்துக்கு திண்டாடுறான் இதுல ரஜினி வாந்தி எடுத்தாரு என்கின்ற செய்தி தேவையா? அவரு வாந்தி எடுத்தா என்ன? வாந்தி எடுக்க (என்ன அவரால முடியாத? அப்படின்னு நீங்க சொல்லுறது கேட்குது!!! அதை அப்புறம் வைச்சுக்கிறேன்) வைத்தால் என்ன? ஏன் இந்த மாதிரி கொலைவெறி பிடித்து அலைறீங்க.................

கொலைவெறி #4 :- கனிமொழி மற்றும் ராஜா கைது

நான் தெரியாமதான் கேட்குறேன், இந்த கனிமொழியும் ராஜாவும் என்ன தேச தியாகிகளா? இவர்களை கைது செய்ததற்கு அவ்வளவு எதிர்ப்பு, இதுல கொடுமை என்னவென்றால் இவர்கள் கொள்ளை அடித்து என்னமோ வெளிநாட்டு காரன் காசை நினைக்கிறாங்க..............அய்யா தாய்மார்களே தொண்டன் மார்களே அம்முட்டும் நம்ம காசுதாங்க..................அவர்களுக்கு சப்போர்ட் செய்கின்ற அய்யா மார்களே.............தயவுசெய்து உங்க வீட்டு அட்ரெஸ் குடுங்க நானும் வந்து கொஞ்சம் அள்ளிகிட்டு போறேன் (என்ன நீங்களே சோத்துக்கு லாட்டரியா) அதுக்கே இந்த அலம்பலா????????? உங்க கொலை வெறிய கொஞ்சம் அடக்குங்க.....!!!!!!!!!!
இந்த கைதால ஒருத்தர் (சாதிக் பாட்சா)  சாகடிக்கப்பட்டார், அவரின் குடும்பத்தாரின் நிலைமை என்னவென்று இந்த ஊடகங்களால் வெளியே சொல்ல முடியுமா????? 

கொலைவெறி #5 :- கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு மற்றும் முல்லை பெரியார்.  

இது ஒரு நியாயமான போராட்டம், இதை பற்றி சில ஊடகங்கள் உண்மையான தகவல்களை கொடுத்தது. ஆனால் இதனை மூடி மறைக்க, மக்களின் பார்வையை திசை திருப்ப அதே ஊடகங்களால் துவக்கி வைக்கப்பட்டதே இந்த முல்லை பெரியார் அணை விவகாரம். இந்த முல்லை அணை பிரச்சினை இருந்து கொண்டே தான் வருகின்றது இப்ப ஏன் இது மிக பெரிய அளவில் பேசப்படுகின்றது எதனால் தெரியுமா..........எல்லாம் அந்த DAM 999 என்ற படம் வெளிய வந்ததால்தான்.............பாருங்கள் அவர்கள் காசு சம்பாதிக்க இரு மாநிலத்தவர் இடையில் பிரச்சினையை பெரிதாக்கி விட்டார்கள்.............இது புரியாம நாம கொலைவெரில அலைந்துகிட்டு இருக்கோம்........

சற்று யோசித்து பாருங்கள், உலகில் எப்பவுமே சரி ஏதாவது ஒரு பிரச்சினை போய்கொண்டே இருக்கும் அது தீவிரம் அடையும்போது சரியாக இந்த ஊடகங்கள் வேறு ஒரு பிரச்சினைய கிளறி விடும், உடனே இந்த மானம் கேட்ட மக்களும் (என்னையும் சேர்த்துதான்) அதை உடனே பெரிய விசயமாக பேச ஆரம்பித்து விடும் இதுதான் நடந்து கொண்டே இருக்கிறது.............இதற்க்கு மூன்று முக்கிய காரணங்கள்.

  1. அரசியல்
  2. விளையாட்டு
  3. சினிமா உலகம்.
ஆமாங்க, உலகில் என்கேவேல்லாம் இந்த உலக கோப்பை மாதிரி நிகழ்சிகள் நடக்கிறதோ அப்பவெல்லாம் உலகில் எங்கேயோ ஏதாவது ஒரு இனம் அழிக்கப்படுகின்றது, அதே போல ஏதாவது முக்கியமானதோர் போராட்டமோ, இல்லை வழக்குகளோ நடைபெறுகின்ற பொது அப்போதான் அந்த நாட்டில் ஏதாவது ஒரு பெரிய நடிகனின் படங்கள் வெளிவரும், அப்படி இல்லை என்றால் ஏதாவது ஒரு பெரிய அரசியல் புள்ளி உன்னாவிரத்மிருப்பர், இது எல்லாம் அவர்கள் அதற்க்கு பின்னால் ஒரு மிக பெரிய சூழ்ச்சி செய்வதற்கான அத்தாச்சி....................இதெல்லாம் புரியாம மக்கள் அடித்து கொண்டு இருக்கிறார்கள்.

இதையெல்லாம் அவர்களை சொல்லி குற்றமில்லை, மக்களாகிய நம்மை சொல்லணும், நாம் யோசிக்காம எடுகின்ற ஒவ்வொரு முடிவிற்கும் நாம் தான் நாளை கஷ்டப்படவேண்டும். 

இனிமேலாவது இந்த சினிமாக்காரன் போஸ்டருக்கு பால் ஊத்துறதை நிறுத்துமா, அரசியல்வாதிக்காக தீகுளிப்பதை நிறுத்துமா? விளையாட்டு வீரர்களுக்காக வாக்குவாதம் செய்வதை நிறுத்துமா? பெத்த அப்பா அம்மாவை விட ஏன் படைத்த இறைவனை விட இவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதை நிறுத்துமா????????????? இப்படி எத்தினையோ நிறுத்தல் நிற்காமல் போனால்................குடிப்பதற்கு காஞ்சி இல்லை என்று வருந்துவோருக்கு இனி கேட்பதற்கு வாயும் போய்விடும் (கொய்யாலே ஒரு வேலை காஞ்சி குடிதால்தானே கேட்கமுடியும் மீதி வேலைக்கும்)................

மக்கள் எல்லாம் ஒன்று கூடினால் ஒழிய இவர்களை திருத்த முடியாது, மக்கள் திருந்த வேண்டும்.................மக்கள் புரட்சிதான் என்றுமே வெல்லும்............

இதை படிச்சிட்டு சும்மா புரண்டு படுக்காதீர்கள், ஒட்டு மற்றும் கருத்தை தெரிவியுங்கள்..................நன்றி.

கருத்துகள் இல்லை: