OnlinePJ

Thanks for Visiting my Page

செவ்வாய், 14 ஜூன், 2011

எம்.எல் ஏ-வுக்கு பிடி-வாரண்ட்

1997 - ஆம் ஆண்டு கோவை கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக உதவித்தொகை வழங்கப்பட்டது. இதற்காக வெளிநாட்டில் பணம் வசூல் செய்யப்பட்டதாகவும், அந்தப் பண வசூல் தொடர்பாக முறையான ஆவணங்கள் சமர்பிக்கப்படவில்லை என்பதால் கடந்த 2001 -ஆம் ஆண்டு சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.






இந்த வழக்கின் விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கில் மூன்று முறை சம்மன் அனுப்பியும் நீதிமன்றத்தில் ஆஜராகததால் ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ-வும் த.மு.மு.க மாநிலத் தலைவருமான ஜவாஹிருல்லாஹ், த.மு.மு.க பொதுச் செயலாளர் ஹைதர் அலி மற்றும் நல்லார் முஹம்மது,காசிம்,செய்யது நிஷார் அஹ்மது ஆகிய ஐந்து பேருக்கும் ஜாமீனில் வெளிவர முடியாதபடி பிடிவாரண்டை பிறப்பித்து எழும்பூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


source:www.MYPNO.com

கருத்துகள் இல்லை: