OnlinePJ

Thanks for Visiting my Page

புதன், 1 ஜூன், 2011

சைகோவை பிடித்த சைனா செல்



தமிழகம் முழுவதும் பெண்களிடம் செல்போனில் ஆபாசப் பேச்சு மற்றும் எஸ்.எம்.எஸ். டார்ச்சர் செய்து வந்த ஆசாமியை சீர்காழி போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த இளைஞர்கள் பொறி வைத்து பிடிதிரிகிறார்கள்.

சீர்காழியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு செல்போன் அழைப்பு வந்திருகிறது எதிர்முனையில் பேசியவன் எடுத்த எடுப்பிலேயே போனிலேயே முத்தம் கொடுக்க துவங்கியதொடு, யகதிர்க்கும் ஆபாசாமாக பேசியிருக்கிறான், ராத்திரி, பகல் என்று பாராமல் தொடர்ந்து இப்படியே டார்ச்சர் செய்திருக்கிறான்.  

இதனை தாங்க முடியாமல் அந்த பெண், போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த திலகர் மற்றும் மாரியப்பன் ஆகியோரிடம் தகவல் சொல்ல இருவரும் களத்தில் இறங்கினார்கள். சீனா மொபைலில் உள்ள "வாய்ஸ் சேன்ஜர்" மூலம் பெண் குரலுக்கு மாற்றி ஒரு சிறுவனை அந்த ஜொள்ளு பார்டிக்கு மிஸ்ஸுடு கால் கொடுக்க வைத்தார்கள், அடுத்த சில நிமிடங்களில் "லைனில்" வந்தவன் எதிர்முனையில் அழகான பெண் குரல் கேட்டவுடன் அவனது சேட்டைகளை ஆரம்பித்துவிட்டான்.

இதனை தொடர்ந்து, இந்த சிறுவனும், தனது பெயர் மதுசுதா என்றும், நான் உங்களை பார்க்க வேண்டும், 24 காம் தேதி வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள் வாருங்கள் சொல்லாக இருக்கலாம் என்று பேச வைத்தனர் அந்த சிறுவனை, இதை தொடர்ந்து அவனும் சீர்காழி பேருந்து நிலையத்துக்கு வந்தான்,  வந்தவனை ஒரு சிறுவன் மூலம் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்து வந்தனர், எங்கே மதுசுதா? என்று கேட்ட அடுத்த வினாடி போலீஸ் நண்பர்கள் அவனை சுற்றி வளைத்தனர்.

பிடிபட்ட அவனிடம் போலீஸ் நண்பர்கள் விசாரித்ததில் சில பகீர் தகவல்கள் கிடைத்தன.
செல்போனில் குத்து மதிப்பாக ஒரு பாத்து எங்களை போட்டு "டயல்" செய்வானாம் யாரவது ஆண்கள் எடுத்தால் "ராங் நம்பர்" என்று வைத்து விடுவானாம், பெண்கள் எடுத்தால் போதும் இவனது லீலைகளை தொடருவானாம், அவர்கள் அந்த என்னை மாற்றும் வரை. 

இது குறித்து போலீஸ் நண்பர்கள் கூறுவது, இவன் பெயர் பார்த்தசாரதி, விவசாயக் கூலியாக இருந்திருக்கிறான், 48 வயதாகும் இவன், இரண்டு மகள்களை தாம்பரம் அருகே திருமணம் செய்து கொடுத்திருக்கிறான், ஒருநாள் எதேச்சையாக யாருக்கோ டயல் செய்ய  எதிமுனையில் பெண் குரல் கேட்டது. அன்று முதல் இப்படி ஒரு வக்கிர செயலை செய்யத்துவங்கி இருக்கிறான்............

அட இது கூட பரவாஇல்லை, இதெல்லாத்தையும் சொல்லிட்டு, அவன் என்ன தெரியுமா கேடிருகிறான்,

எங்கே மதுசுதா?????????????????????????முடியலை.................... 

கருத்துகள் இல்லை: