OnlinePJ

Thanks for Visiting my Page

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

இது எங்க ஊரு ஸ்பெஷல் (ரெண்டான்)

முதலில் நான் எந்த ஊரு என்பதை சொல்லிவிடுகிறேன், அதாவது கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டை என்கின்ற ஊரை சேர்ந்தவன் நான் எங்கள் ஊரு கடலூருக்கும் சிதம்பரத்திற்கும் இடையில் கடலை ஒட்டி அமைந்துள்ளது........

அட இவன் இவ்வளவு நாளைக்கு அப்புறம் ஊரை பத்தி எழுதுராண்டு நினைக்காதீங்க, இங்கே இதை பத்தி எழுதுவது ஒரு அவசியமாக பட்டது அதான், சரி வாங்க மேட்டருக்கு   போவோம், 
எந்த ஒரு ஊரை எடுத்துகிட்டாலும் அங்கே ஏதாவது ஒரு சமையல் ஸ்பெஷல்லா இருக்கும் அந்த மாதிரி நம்மூரில் இந்த ரெண்டான் ஒரு ஸ்பெஷல் அத பத்திதான் இந்த பகிர்வு ஒரு சமையல் குறிப்பாக...........!!!!!!!!! இதை மீன், இறால் முட்டை போன்றவற்றி செய்யலாம்.........இங்கே நான் எடுத்து கொண்டது வஞ்சரம் மீன் 





தேவையான பொருட்கள்:

  1. ஒரு மீடியம் அளவு வஞ்சரம் மீன் ஒன்று
  2. வெங்காயம் மீடியம் சைஸ் நான்கு
  3. தக்காளி மீடியம் சைஸ் இரண்டு
  4. பச்சைமிளகாய் 5 அல்லது 6  
  5. தேங்காய் ஒரு அரை மூடி 
  6. மிளகாய் தூள், மஞ்சள் தூள் உப்பு, எண்ணை போன்றவைகள்


செய்முறை:

  1. முதலில் வஞ்சிரன் மீனை மீடியம் சைசில் வெட்டி மஞ்சள் உப்பு சேர்த்து நன்றாக கழவி எடுத்துகொள்ளவும்.
  2. கழிவிய மீனை மிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி வைத்து கொள்ளவும் (கொஞ்சம் இஞ்சி பூண்டு சேர்த்தால்  மேலும் சுவையாக இருக்கும்)
  3. பின்னர் அதை அறைவேகாடாக பொரித்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும் .
  4. வெங்காயம் , தக்காளி பச்சைமிளகாய் போன்றவற்றை பொடிசாக வெட்டி வைத்து கொள்ளவும்,  தேங்காயை அரைத்து மிக்ஸ்யில் போட்டு பால் எடுத்து வைத்து கொள்ளவும் 
  5. பின்னர் உங்கள் வீட்டில் மண் சட்டி இருந்தால் அதை அடுப்பில் ஏற்றவும் (மண் சட்டியில் செய்தால் சுவை கொஞ்சம் கூடுதலாக இருக்கும்)
  6. தேவையான அளவு என்னை விட்டு அது சூடு வந்தவுடன், அதில் முதலில் வெட்டி வெங்காயத்தை போட்டு வேக வைக்கவும் வெங்காயம் சிறிது வண்ணம் மாறியவுடன் 
  7. அதனுடன் பச்சைமிளகாய் மற்றும் தக்காளியை சேர்த்து மீண்டு வேகவைக்கவும், ஒரு இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் கழித்து அதனுடன் சிறிது மஞ்சள் தூள், மிளகாய் தூள் (கொஞ்சம் கூடுதலாக இருந்தால் நன்று) சேர்த்து நன்றாக கிளறி விட்டு மூடி வைக்கவும், 
  8. ஒரு ஐந்து நிமிடம் கழித்து தக்காளி கரைந்தவுடன் அதில் ஏற்கனவே எடுத்து வைத்த தேங்காய் பாலை ஊற்றவும், பின்னர் ஏற்கனவே நாம் பொரித்து வைத்துள்ள மீனை போட்டுவிட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.அவ்வளவுதாங்க ரெண்டான் ரெடி............!!!!!!!!!!!!!

இதில் முக்கியமாக நீங்க பார்க்ககூடியது, தேங்காய் பால் சிறிது கட்டியாக இருக்கவேண்டும், இல்லையென்றால் குழம்பு தன்னியாகிவிடும்,  அப்புறம் அடுப்பை அனைபதர்க்கு சிறிது நேரத்திற்கு முன் கொஞ்சம் மல்லி  இலையை போட்டு மூடிவிட்டு அணைத்துவிடுங்கள்..................

இன்னும் பல ஸ்பெஷல் எங்கள் ஊரில் உள்ளன தொடர்ந்து எழுதலாம் என்று உள்ளேன்.............உங்கள் கருத்துக்களை பார்த்து விட்டு...................

கருத்துகள் இல்லை: