OnlinePJ

Thanks for Visiting my Page

புதன், 20 ஜூலை, 2011

சச்சின் நூறாவது கக்கா எப்போ போவாரு???????????

கடந்த இரண்டு வாரமாக எல்லா செய்திதாள்களிலும், வலைதளங்களிலும், வலைபூகளிலும் பரப்ப படுகின்ற ஒரே செய்தி இதுதாங்க, சச்சினை சமாளிக்குமா இங்கிலாந்து, சச்சின் நூறாவது சத்தம் அடிப்பாரா, சச்சின் கக்கூஸ் போவாரா...............இது போல நிறைய. நான் தெரியாமதான் கேட்குறேன், சச்சின் சதமடிக்கவில்லை யென்றால் இந்தியாவிற்கு என்ன அவ்வளவு பெரிய இழப்பா?



கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு அது ஒரு சோம்பேறி தனமான விளையாட்டு அந்த எழவு எனக்கு தெரிஞ்சுதான் நானும் விளையாடி வந்தேன், எனக்கு பிடிக்கும், ஆனால் இந்த இந்தியாவில் இருக்கின்ற கிரிக்கெட் மோகம் இல்லை இல்லை கிரிக்கெட் காமம் என்றே சொல்லுவது தான் சரி. ஏன் தெரியுமா இந்தியாவில் பசங்க பொண்ணுங்களுக்கு அடுத்த  படியா அதிகமா பார்ப்பது இந்த எழவைதான் (கிரிக்கெட்) அதிகமா பேசபடுவது இந்த எழவைதான். 

ஒரு நாட்டின் கிரிக்கெட் அணி மற்றொரு நாட்டிற்க்கு விளையாட செல்வது என்பது ஓர்  இயல்பான விஷயம் அதை ஏன் போட்டு இவ்வளவு பெரிது படுத்த வேண்டும்? நல்லா பாருங்க கடந்த மாதம் இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடி வந்தது அப்போதெல்லாம் இந்த நாதாரி பயலுங்க இந்த மாத்ரி விளம்பரம் செய்யவில்லை.................ஏன் அதற்க்கு முன் பாகிஸ்தான் அணி மேற்கு இந்திய அணிகளுடன் விளையாடின அதற்கும் எந்த ஒரு விளம்பரமும் இல்லை இந்த மாதிரி..........இந்த தர்திரியம் புடிச்ச இந்தியா விளையாடினா போதும்...............அவ்வளவு தான்  அவனவன் பொண்ட்டாடி எவன் கூடவோ ஓடி போன மாதிரிதான் புழம்புரானுங்க.....................சரி ஒரு பாகிஸ்தான் கூட விளையாட போகுதுனா கூட பரவாயில்லை எதிரி நாடு (அப்படின்னு இந்த கிரிக்கெட் பைத்தியங்கள் சொல்லுவது) அப்படின்னு எடுத்துகிடலாம்...............நம் எல்லோருக்கும் தெரியும் இங்க்லாந்து அணி ரொம்ப நாகரிகமா நடந்துபாங்கேனு அவுங்க கூட விளையாட போறதுக்கு எதுக்கு இந்த பில்டப்பு..................

இந்திய கிரிக்கெட் பற்றி இவ்வளவு பினாத்துகிறீர்களே, கடந்த வாரம் மும்பையில் குண்டு வெடித்து அப்பாவி மக்கள் இறந்தார்களே அவர்களின் குடும்பத்திற்கு என்ன செய்தீர்கள்...............அட ஒரு பேச்சிற்கு அவர்களின் ஆதங்கங்களை கேட்டு சொன்னீர்களா?????  இல்லை சென்னையில் ஒரு சின்ன பையன் ராணுவ வீரனால் சுட்டு கொள்ளப்பட்டானே, அதற்க்கு கொஞ்சம் கூட சமந்தமிலாமல் வேறு ஒருத்தனை அரசாங்கம் கைது செய்ததே அதை பற்றி ஏதாவது செய்தீர்களா? அதற்க்கு அவனே ஒத்து கொண்டானே அதை பற்றி எதவாது யோசித்தீர்களா? தமிழ் நாட்டில் பள்ளிகூடங்கள் திறந்து இன்னும் ஒரு வகுப்பு கூட நடத்த படவில்லையே அதை பற்றி எதாவது யோசித்தீர்களா?  தினம் தினம் செய்திகளில் கள்ள காதலால் பிள்ளைகளை கொன்ற தாய்..........இது போன்ற செய்திகள் வந்தவண்ணம் உள்ளதே அதற்காக என்ன செய்தீர்கள்...................அந்த குழந்தைகள் என்ன பாவம் செய்தன??????????? 

மிருகங்களை காக்க வரிந்து கட்டி கொண்டு வரும் இயக்கமே? இந்த குழந்தைகளை காக்க வராமல் போனது ஏன்?

கடைசியாக நம் இந்தியா திருந்தணும்னா, கண்டிப்பாக இந்த மூனும் நடக்கணும்:

  1. மனுஷன் மனுஷன் காலில் விழுவது (நம் இந்திய மக்கள் அரசியல் வாதி காலில் விழுவதை விட வேண்டும்).
  2.  நடிகர்களை கடவுளுக்கு சமமாக பார்ப்பதை நிறுத்தனும் , அந்த நாதாரிகளும் அதை மறுக்கனும் .
  3. இந்த கிரிக்கெட் மோகம்...................காமம் என்கின்ற பிசாசு.
சில கொடுமைகள்:
அப்புறம் இந்த பத்திரிகைகள் செய்யும் விபச்சாரம், கொஞ்சம் கூட வாய்கூசாமல் பொய்   சொல்லுவது, எப்ப பார்த்தாலும், கிரிக்கெட், சினிமாவை பற்றிய செய்தகளை மட்டுமே குறிவைத்து எழுதுவது அப்புறம் கள்ளகாதல், நடிகையின் காதல், போன்றவைகளை மட்டுமே கவனமாக செயல் படுவது

இந்த இந்திய மட்டும்தான் ஒரு சொத்தை அணி கூட மோதினாலும் மிக பெரிய விளம்பரம் செய்ய படுகிறது. அது ஏன் தெரியுமா? எல்லாமே காசுக்காக தான்? இவனுங்க யாருமே நாட்டுக்காக விளையாட போகலை, நாட்டுக்காக விளையாடவும் முடியாது ஏன்னா இப்போ இருகின்ற இந்திய அணி இந்த நாட்டின் அணியே கிடையாது அது ஒரு தனியார் நிறுவனதின் அணி.....அவனுங்க ஸ்பொன்சர் என்ற பெயரில் ஒரு ஒரு நிறுவனத்திற்கு விலை போய்டாங்க, அதனால தான் இவ்வளவு பெரிய விளம்பரங்கள் அது தெரியாம இந்த நாதாரி கிரிக்கெட் ரசிகர்கள்....................ஜெய் இந்தியா...................போன்ற வசங்களை அள்ளி வீசுகிறார்கள்..............ஒவ்வொருவரும் லட்சகணக்கில் காசுகுடுத்து டிக்கெட் வாங்கி ஆட்டங்களை பார்கிறார்கள், அந்த பணமிருந்தால் எத்தினை ஏழை குடும்பங்கள் சோறு உண்ண முடியும் சிந்தியுங்கள்......................கிரிக்கெட் பைத்தியங்களே????????????சிந்தியுங்கள்....................

இன்னொரு முக்கியமான ஒன்று நான் இந்த கிரிக்கெட்கோ, சச்சினுக்கோ எதிரி அல்ல, இந்த பைத்தியகார இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு தான் இந்த பதிவு.  

கருத்துகள் இல்லை: