OnlinePJ

Thanks for Visiting my Page

புதன், 13 பிப்ரவரி, 2013


தமிழன் என்று சொல்லிக்கொள்கின்ற எவனும் விஷ்வரூபத்தை ஆதரிக்க மாட்டான்!!!!!!!!!
(காவி சிந்தனையாலணை தவிர)

முதலில் ஒன்றை தெளிவாக பதியவைக்கிறேன், 99% நாங்கள் (முஸ்லீம்கள்) தீவிரவாதத்தை ஆதரிப்பதில்லை, ஆதரிக்கவும் கூடாது. அநியாயமாக ஒருவன் ஒருத்தனை கொன்றால் அதை இறைவன் மன்னிக்கவே மாட்டேன் என்கிறான் திருமறை குர்ஆனில். 1% முஸ்லீம்கள் இஸ்லாத்தின் சட்டங்களை சரியாக விளங்காமல் ஜிகாத் என்பதை தவறாக புரிந்துக்கொண்டு இந்த மாதிரி பயங்கர செயல்களை செய்கிறார்கள், இந்த 1% இஸ்லாத்தில் மட்டும் என்றில்லை அனைத்து மதங்களிலும் உண்டு இது மறுக்க முடியாத உண்மை.

வலைத்தளங்களில் பதிவு எழுதுபவர்களும் சரி அதனை படித்துவிட்டு கருத்து தெரிவிப்பதும் சரி ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் இஸ்லாமியர்களுக்கு எதிராகவே எழுதுகிறார்கள். இஸ்லாமியர்கள் விஷ்வரூபத்தை எதிர்ப்பதால் உடனே அவர்களை ஆஃப்கானிஸ்த்தான் ஆதரவாளர்கள் என்கிறார்கள். எங்கள் மதத்தை இழிவு படுத்துவதாக இந்த படம் இருக்கு என்பதாலேயே இதனை எதிர்க்கிறோம், இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை???? நாங்கள் என்ன உங்களையா எதிர்த்தோம்??? ஏன் நீங்கள் கமலுக்கு வரிந்துகட்டிக் கொண்டு வருகிறீர்கள்???? மேலும் நாங்கள் கமலை கூட எதிர்க்கவில்லை, அவர் சொல்லிய விஷ கருத்தைதான் எதிர்த்தோம் இன்னும் சொல்லப்போனால் இந்த படத்தால் தலைகுனியவேண்டியது தமிழன் தான். கமலின் கதைப்படி அவந்தானே முல்லா உமருக்கு பதுங்கி இருக்க இடம் குடுத்தது.

ஆப்கானிஸ்தானை பற்றி படம் எடுத்தால் உங்களுக்கு என்ன என்று கேட்கும் அறிவு ஜீவிகளே? பாகிஸ்த்தானில் ஒரு பெண்ணை ஒருத்தன் சுட்டால் உங்களுக்கு என்ன? இப்ப மட்டும் எங்கே இருந்து அந்த பாசம் பொத்து கொண்டு வந்தது? சரி ஒரு இறக்கத்தில் வந்துடுச்சு என்றே வைத்துக் கொள்வோம், உங்கள் இறக்கப்படி பார்த்தால் ஏன் பாலேஸ்தீனில் இஸ்ரேல் ஆர்மீகளால் கொல்லப்படும் ஒரு பெண்ணின் மேலோ, குழந்தையின் மேலோ வரவில்லை, அதை ஏன் இந்த ஊடகங்கள் பெரிது படுத்தவில்லை???? இது உங்கள் கண்களுக்கு தீவிரவாதமாக தெரியவில்லையா?  

அப்புறம் இந்த ரிசானா என்ற பெண்ணை சௌதியில் தூக்கு தண்டனை குடுத்ததற்க்கு ஆதரவு என்கின்றோமா? அதனால நாங்கள் தீவிரவாதியாம். அந்த பெண் ஒரு குழந்தையை கொன்ற குற்றவாளி என்று கைது செய்யப்பட்டு, கடந்த ஐய்ந்து வருடங்களாக விசாரணை நடத்தி, இந்த தண்டனையை நிறைவேற்றி உள்ளார்கள். இதனை சும்மா ஊடகங்களில் மட்டுமே பார்த்தும் படித்தும் விட்டு இந்த பதிவர்களும், ஊடகங்களும் சௌதியை சும்மா கிழி கிழின்னு கிழிச்சாச்சு!!!!!!!!!!!!!!! இங்கேயும் நாங்க அதனை ஆதரித்து பேசவில்லை, இந்த கேடுகெட்ட ஜென்மங்கள் இஸ்லாமிய சட்டங்களை பற்றி விமர்சித்தார்கள் அதனைத்தான் எதிர்த்தோம், இதை புரிந்துக் கொள்ள முடியவில்லை உங்களுக்கு எதுக்கு 6 அறிவு ???????????

அப்புறம் அஜ்மல் மற்றும் அப்சல் தூக்கிர்க்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோமாம்? அதனால நாங்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றோம் என்று குதிக்கின்றாராகள் இந்த கூமுட்டைகள்!!! இந்த ரெண்டு பெரும் குற்றம் நிறுப்பிக்கப்பட்டவர்கள் என்றே வைத்துக் கொள்வோம், அப்படி பார்த்தால் இவர்களுக்கு முன்னாள் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் நிறுப்பிக்கப்பட்ட அந்த மூன்று பேரை ஏன் இன்னும் தூக்கில் போடவில்லை?????  அப்பாவி மக்களை யார் கொன்றாலும் அவனுக்கு தூக்கு என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. அப்படி பார்த்தால் இந்த நாட்டில் முதலில் தூக்கில் போடப்பட வேண்டியவர்கள் லிஸ்ட்டில் முதல் ஆள் நரேந்திர மோடி!!!!!!!!!!!!!!!

கடைசியாக, டெல்லி பெண் கற்பழித்து கொல்லப்பட்டது, குற்றவாளிகள் இவர்கள்தான் என்று தெரிந்தும், இன்னும் எந்த ஒரு தீர்ப்பும் சொல்லாமல், வைத்திருப்பதும் ஏனோ???????????? அப்புறம் நேற்று வினோதினி, அநியாயமாக ஒரு உயிரை கொண்டிருக்கின்றான், அந்த பெண்ணே மரண வாக்குமூலம் குடுத்துள்ளால் நான் பட்ட வேதனையை அவனும் பட வேணும் என்று” இன்று இதனை ஆதரிக்கும் அதிமேதாவிகளே  இஸ்லாம் கூறுவதும் அதுதான்?????????

அல் குரான் 05:45
உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக் மூக்கு, காதுக்கு காது, பாலுக்கு பள்ளு மற்றும் காயத்திர்க்கு பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப்பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்கு) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்பல்லிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.”

அடுத்த பதிவு :- இன்ஷா அல்லாஹ், இந்த இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள் பற்றி!!!!!!!!!!!!! விரைவில்   

1 கருத்து:

sakthi சொன்னது…

poda lossu ,nee ellam en inga irukuera ?