OnlinePJ

Thanks for Visiting my Page

செவ்வாய், 19 ஜூன், 2012

விலை உயர்வைத் தடுக்க என்ன வழி



பொருட்களின் விலை ஏற்றதிர்க்கு பல காரணங்கள் உள்ளன. அனைத்தையும் ஒரே மாதிரியான நடவடிக்கை மூலம் சரி செய்ய முடியாது. ஒரு பொருள் தேவையை விட பல மடங்கு அதிகமாக உற்பத்தியாகும் போது அப்பொருளின் விலை சரிந்து விடுவதையும், தேவையை விட குறைவாக உற்பத்தியாகும் போது அதைக்கேர்ப்ப விலை அதிகரிப்பதையும் நாம் காண்கிறோம்.




உற்பத்தி குறைவினால் ஏறிய விலைவாசியை குறைத்திட உற்பத்தியை அதிகரிக்க செய்வதுதான் ஒரே வழியாகும். பொருள்கள் தாறுமாறாக உற்பத்தியாகி நட்டம் ஏற்பட்டால் அந்தப்பொருளின் உற்பத்தியை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படாமல் தடுக்க முடியும். அல்லது குறைந்த உற்பத்தி காரணமாக விலை உயர்ந்தால் உலகம் முழுவதும் இந்த நிலை இருக்காது. எனவே எந்த பொருளின் விலை உயர்ந்து விட்டதோ அந்த பொருளை இறக்குமதி செய்து தட்டுப்பாட்டை நீக்கினால் விலை உயர்வு கட்டுக்குள் வந்துவிடும்.

அது போல உற்பத்தி அதிகமாகும் போது உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டால் உடனே ஏற்றுமதிக்கான தட்டுபாடுகளை தளர்த்தி தேவையுள்ள நாடுகளுக்கு அனுப்பினால் உற்பத்தியாளர்கள் பாதிக்கபடமாட்டார்கள். இதை எந்த அரசாங்கமும் செய்வதில்லை. இவர்களின் ஏற்றுமதிக்கொள்கை பல காலத்துக்கு ஒரே மாதிரியாக உள்ளதாலும், நாட்டு மக்கள் நலனுக்காக அன்றாடம் சிந்திக்க இவர்களுக்கு நேரமில்லாததாலும் இதை செய்ய மாட்டார்கள்.

ஆரம்ப காலங்களில் இந்த வகையில் மட்டுமே விலைகள் உயர்ந்து வந்தன. ஆனால் இப்போது இன்னும் பல காரணங்களால் விலை உயர்கின்றன. வட்டியை அடிபடையாக கொண்ட பொருளாதாரம் விலை உயர்வுக்கான மிக முக்கிய காரணமாகும். ஒரு பொருளை உற்பத்தி செய்யும் போது வட்டிக்கு கடன் வாங்கி உற்பத்தி செய்தால் விலையை ஏற்றினால் தான் வட்டி கட்ட முடியும் என்பதர்க்காக விலையை அதிகரித்து விடுகின்றனர். மேலும் வட்டிக்குக்கடன் கிடைப்பதால் வக்கற்றவர்களும் கலத்தில் இறங்கி சொத்துக்களை வாங்க முயற்சிப்பதால் தேவைகள் அதிகரிக்கின்றன. குறைந்த பொருளுக்கு அதிகமானவர்கள் போட்டியிடும் நிலை ஏற்பட்டு இதன் காரணமாகவும் விலைவாசிகள் உயர்கின்றன.

தேவைக்கு மேல் பணம் வைத்திருப்பவர்கள் மட்டும் சொத்து வாங்க அலையும் போது போட்டி குறைவாக உள்ளதால் விலை சீராக இருக்கும். ஆனால் சாப்பாட்டுக்கே வழி இல்லாதாவர்கள் வட்டிக்கு கடன் கிடைப்பதால் சொத்து வாங்க அலைகின்றனர். தங்களால் திருப்பி செலுத்த முடியாத நிலை இருந்து ஆடம்பர பொருள்களை வாங்கி குவிக்கின்றனர், இப்படி போட்டி அதிகமாகும் போது தானாகவே விலைகள் உயர்கின்றன.

வட்டி எனும் கொடிய சுரண்டல் இரண்டு வகைகளில் விலைவாசிகள் உயர்கின்றன. வட்டி அடிபடையிலான பொருளாதாரம் தடுக்கப்பட்டால் பிரும்பாலான பொருட்கள் உடனே விலை குறைந்துவிடும். ஆனால் வட்டி இல்லாத பொருளாதாரம் பற்றி சிந்திக்க கூட அரசியல்வாதிகள் முன்வருவதில்லை என்பதால் இந்த வகையான விளைவாசி உயர்வு கட்டுக்குள் வரப்போவதில்லை.

அரசாங்கதின் வருமானத்தை பெருக்கிக்கொள்ள எத்தினையோ வழிகள் உள்ளன. குறிப்பாக தேவைக்கு மேல் பணம் வைத்திருப்பவர்களிடம் மட்டுமே பல வகை வரிகளை வசூலித்து ஏழைகள் பாதிக்காத வகையில் வர்கள் விதிக்கலாம். ஆனால் நாட்டில் எல்லா கட்சிகளும் எல்லா அரசுகளும் ஏழை மக்கள் பாதிக்கும் வகையில் தான் வரிகளை விதிக்கின்றன. இதில் யாரும் விதிவிலக்கு இல்லை.

அரிசி, பருப்பு, சோப்பு, பிளேடு, எண்ணெய், மண்ணெண்ணெய், டீசல், பெட்ரோல் என பொது மக்கள் பயன்படுத்தும் எல்லாப்பொருட்கள் மீதும் வரி விதிப்பதும் வியலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமாகும். ஒரு ஏழை ஒரு நாளைக்கு நூறு ரூபாய் செலவிட்டால் அவனிடமிருந்து வரி மூலம் அரசுக்கு 20 ரூபாய் குறையாமல் கிடைக்கிறது. பொதுமக்கள் பொதுவாக பரவலாக பயன்படுத்தும் எந்த பொருளுக்கும் எந்த வரியும் விதிக்காவிட்டா உடண்டியாக 25 சதவீதம் விலை ஒரே நாளில் நாளில் குறைந்துவிடும்.

இதற்க்கு பதிலாக ஒரு ஆடம்பர கார் வாங்கினால் அதன் மீது 100 சதவிகிதம் கூட வரி போடலாம். பணத்தை வைத்து கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் முழிப்பவர்களுக்கு இது பாரமாக இருக்காது. குறிப்பிட்ட மதிப்புக்கு மேல் சொத்து வாங்கினால் அதன் மீதும் இது போல் வரி விதிக்கலாம்.

உணவு, உடை, மருந்து, கல்வி போன்ற அடிப்படை தேவைகளுக்கு தவிர, ஏசி, வாசிங்க்மிசின், ஓவன், பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர் போன்ற எல்லாப் பொருட்களின் மீதும்  அதிக வரி விதிக்கலாம். இது சாதாரண மக்களை பாதிக்காது. மேலும் தினசரி இவர்ற்றை வாங்கப்போவதில்லை. ஆனால் உப்பு, புளி, மிளகாய் போன்ற பொருட்களுக்காக அன்றாடம் மக்கள் செலவிட வேண்டிய நிலை உள்ளது இந்த பொருட்களின் விலை உயர்வுதான் இன்று மக்கள் பிரச்சனையாக உள்ளது. ஏசி விலை ஏறிவிட்டது, பிரிட்ஜ் விலை ஏறிவிட்டது என்று எந்த போராட்டமும் உலகில் நடப்பது இல்லை. அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் விலையேற்றம் தான் பொதுமக்களின் பிரச்சனையாகும்.

இது போன்ற பொருட்களுக்கு வரிவிதிக்காமல் ஆடம்பர பொருட்களுக்கு மட்டும் திட்டமிட்டு வரி விதித்தால் அரசின் வருவாயும் குறையாது, ஏழைகளும் பாதிக்கப்பட மாட்டார்கள், ஓட்டும் கூட பாதிக்காது. அத்தியாவசியமான பொருட்கள் மீது வரி விதிப்பதாக இருந்தாலும், சங்கிலி தொடரான பாதிப்புகளை ஏற்படுத்தும் பொருள்கள் மீதி கட்டாயம் வரி விதிக்கவே கூடாது. உதாரணமாக பெட்ரோல், டீசல் வியலை உயர்ந்தால் அதன் காரணமாக போக்குயரக்து கட்டணம் அதிகரிக்குக்ம், இதனால் எல்லா பொருட்களின் விலையும் அதிகாரிக்கும், 80 ரூபாய் பெட்ரோல் விலை என்றாள் அதில் சரிபாதி மத்திய மாநில அரசுக்களுக்கு வாரியாக போகின்றது. மேலும் அரசாங்கம் செய்யும் முக்கால்வாசி செலவுகள் ஆடம்பரதுக்காகவும், பகட்டுக்காகவும் பயனற்ற வழிகளில்தான் செலவிடபடுகின்றன.

ஏழைகளுக்கான பேருந்து கட்டணத்தை உயர்த்தி விட்டு, செஸ் சாம்பியனானதற்க்கு நாட்டின் பரம ஏழையான(?) விஸ்வநாத் ஆனதுக்கு நம்முடைய பணம் இரண்டு கோடி ரூபாய்யை தூக்கி கொடுக்கபடுகின்றது. சினிமாக்கலுக்கு விருதுகளும், பண முடிசுகளும் அளிக்கபடுகின்றன. தெருவெங்கும் காக்காய்கள் எச்சம் போட தலைவர்களுக்கு சிலைகள் வைக்கபடுகின்றது. எருமை மாடுகளும், நாய்களும் இளைப்பாற மணிமண்டபங்கள் கட்டப்படுகின்றன. செத்து போனவர்களுக்கு அரசின் சார்பில் விழாக்கள் எடுக்கபடுகின்றன. ஊடகங்களின் வாயடைக்க முழுபக்க விளம்பரங்கள், இன்னும் பலவகைகளில் மக்களின் வரிப்பணம் பாழாக்கப்படுகின்றது. இது போன்ற செலவுகளை அடியோடு நிறுத்தினால் செல்வந்தர்களுக்கு கூட குறைவாகவே வரி போடலாம்.

ஆனால் இது நமக்குதான் நன்றாக தெரியும். இது போன்ற ஊதாரிதானத்தில் ஊறியவர்களுக்கு இது இல்லை என்றால் பைத்தியமே பிடித்துவிடும். இந்த காரணத்தால் ஏறிய விலை இறங்க போவதில்லை. பணமுதலைகளும் அமைச்சர்களின் பினாமிகளும் பணம் சம்பாதிப்பதற்க்கு ஆன்லைன் வர்த்தகம், பங்கு வணிகம் போன்ற சூதாட்டங்களுக்கு அனுமதி அளித்து ஊக்குவிப்பதன் காரணமாகவும் விலைகள் ஏறுகின்றன.
உலகில் எங்கோ இருக்கும் ஒரு பணமுதலை இந்தியாவில் உள்ள துவரம் பருப்பை ஆன்லைனில் புக் பண்ணிவிடுகிறான். சில நாட்களுக்கு பருப்பு கிடைக்காமல் செய்து செயர்க்கையாக தட்டுபாடை ஏற்படுத்தி விலையை இஷ்டத்துக்கு உயர்த்துகிறான். இப்போதைய வியலிவாசி உயர்வுக்கு இதுதான் பிரதான காரணமாக உள்ளது.

ஒரு ஹோட்டலில் நூறு அறைகள் இருந்தால் அதை ஒருவன் புக் பண்ணி விடுகிறான். ஆயிரம் ரூபை வாடகை உள்ள ஆராயை 3000 ரூபாய் என்று இவன் உள்பதிவு செய்கிறான். இது போலதான் தங்கம் முதல் அத்தியாவசிய பொருள் வரை விலை ஏறுகிறது.

இதற்க்கு முக்கிய கார்ணம் பிரதமர் மன்மோகன் சிங்கும், ப. சிதம்பரமும்தான். இவர்கள் பல்லை புடுங்கினால் தங்கம் முதல் அனைத்தும் பன்மடங்கு இறங்கிவிடும். பணமுதலைகள் ஆதாயம் அடைவதற்க்கு ஆன்லைன் மொஸைட்யை அனுமத்திது நாட்ட நாசமாக்கியவர்கள் இவர்கள்தான், நாசம் என்பதை விட அடிமையாக்கி விட்டார்கள். இதற்கெல்லாம் போராட்ட நடத்தினால் ஒரு பயனும் ஏற்படாது. நாமும் இருக்கிறோம் என்று காட்டுவதற்க்குதான் அது உதவும்.  

இந்த நிலை தொடர்ந்தாள், நாட்டு மக்கள் அனைவரும் கொந்தளிது புரட்சியில் இறங்கி அதிபர்கள் நாட்டி விட்டு ஒட்ட்ம் பிடிக்கும் நிலை ஏற்பட்டு வருவதை நாம் கண்டு வருகிறோம். அப்படி ஒரு புரட்சி வந்தாலும் புரட்சியிம் மூலம் ஆட்சியை பிடித்தவர்களும் இதே வழியில் தான் செல்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.


நன்றி:- உணர்வு


கருத்துகள் இல்லை: