OnlinePJ

Thanks for Visiting my Page

வியாழன், 12 ஏப்ரல், 2012

நான் என்ன பாவம் செய்தேன் ????????

இந்த பிஞ்சுக்கு தெரியுமா தான் ஏன் தாக்கப்படுகின்றோம், ஏன் இறந்தோம் என்று? 


கடந்த ஆறாம் தேதி, குழந்தையை கடுமையாக அடித்து துன்புறுத்தியுள்ளார். குழந்தையின் உடம்பில் பல பகுதிகளில் சிகரெட்டால் சூடு வைத்துள்ளார். குழந்தை அலறி துடித்தது. அரக்கத்தனத்தை விடாத பரூக், குழந்தையின் முகத்தில், தொடர்ந்து கண்மூடித்தனமாக தன் கையினால் மாறி, மாறி குத்தியுள்ளார். இதை பார்த்த குழந்தையின் தாயார் ரேஷ்மா அலறி துடித்து, பேச்சு, மூச்சில்லாமல் இருந்த குழந்தையை, சிவாஜி நகர் பவுரிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கிருந்து வாணி விலாஸ் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக குழந்தையை எடுத்து சென்றனர். மருத்துவமனையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.குழந்தை மரணம்: டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதும், குழந்தைக்கு அடுத்தடுத்து ஏற்பட்ட வலிப்பு காரணமாக மாரடைப்பில் அப்ரின் மரணமடைந்ததாக டாக்டர்கள் கூறினர். தீவிர சிகிச்சை மேற்கொண்டதாகவும் டாக்டர்கள் கூறினர்.

இதையறிந்த ரேஷ்மாவின் கதறல், மருத்துவமனையை உலுக்கி எடுத்தது. குழந்தையின் தந்தை பாரூக், ஏற்கனவே கைது செய்யப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது இந்த வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. ரேஷ்மா கூறுகையில், ""என் குழந்தையை கொலை செய்த, என் கணவருக்கு மிகப்பெரிய தண்டனை கொடுக்க வேண்டும். பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும். அவரது தண்டனை, அவரை போல் தவறு செய்ய நினைப்பவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்,'' என, கதறியபடி கூறினார்


இந்த உலகில் எத்தனையோ சந்தோசங்கள் நம் வாழ்வில், ஆனால் அவை எல்லாம் அற்ப சந்தோசம்தான், எல்லா மத போதனைகளும் நமக்கு சொல்லுவது இந்த நாம் வாழும் வாழ்க்கைக்கு ஏற்றது போன்றுதான் நமக்கு நாளை மறுமையில் (நியாய தீர்ப்புநாளில்) நமக்கு இறைவனால் கூலி (சொர்க்கம் / நரகம்) வழங்கப்படும். ஆனால் அந்த இறைவன் இந்த பூமியிலேயே ஒரு சொர்கத்தை (அது எப்படி இருக்கும் என்று நம்மால் கற்பனை செய்ய முடியாது) நமக்கு குடுப்பாநேயானால் அது கண்டிப்பாக நமது குழந்தையே தவிர வேற ஒன்றுமில்லை.

இன்று உலகில் எத்தனையோ லட்ச மக்கள் அந்த சொர்க்கம் கிடைக்க போராடி கொண்டிருக்கின்றனர், ஏன் அது இல்லாமலே தன வாழ்நாள் முடிந்தவர்களும் உண்டு, அப்பேர்ப்பட்ட ஒரு சொர்கத்தை, ஒருவன் இப்படியா அழிப்பான்? 

ஒரு குழந்தை பிறப்பது என்பது ஒரு பெண் மறுபிறவி எடுப்பது போன்று, கண்டிப்பாக இதில் ஒரு ஆணிற்கு 5  நிமிட பங்கே தவிர வேற என்ன இருக்க முடியும்???????

இந்தியாவில் மனைவியின் பிரசவத்தின் பொது கணவன்மார்கள் லேபர்வார்டில் அனுமதிக்கபடுவதில்லை, அப்படி அனுமதித்தால் தெரியும் அவர்களின் நிலை என்னவென்று....அதன் பிறகு ஒவ்வொருத்தனும் அவன் பொண்டாட்டியை தொடவே யோசிப்பான்...........!!!!!!!!!!!!!!!

கண்டிப்பாக இது போன்ற மிருகங்களை அப்படி சீக்கிரம் சாகடிக்க கூடாது, கொஞ்சம் கொஞ்சமாக சித்திரவதை செய்துதான் சாகடிக்க வேண்டும். அப்போதான் நாளை இது போல செய்பவர்கள் திருந்துவார்கள், குறைந்தது பயப்படுவார்கள்................

இதற்க்கு இவனுக்கு குடுக்கும் மரண தண்டனை பொதுமக்கள் முன்னிலையில் நிறைவேற்ற படவேண்டும், அது அனைத்து தொலைகாட்சியிலும் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும். இதெல்லாம் நடந்தால் தான் அந்த குழந்தையின் தாயின் மனசு அமைதியடியும், 

இதெல்லாம் சாத்தியமா இந்திய அரசியல் சட்டத்தில்??????????????????

கருத்துகள் இல்லை: