OnlinePJ

Thanks for Visiting my Page

புதன், 2 அக்டோபர், 2013

இன்று காந்தி ஜெயந்தி, இந்தியா அரசாங்கத்தின் பூந்தி!!!

காந்தியை கொன்ற போது கோட்சே யென் தன்னுடைய கைய்யில் இஸ்மாயில் என்று இஸ்லாமிய பெயரை பச்சை குத்திக்கொண்டு வார வேண்டும். 

காந்தியை கொன்றது ஒரு இஸ்லாமியன் என்று அவசர அவசரமாக இந்தியா முழுவதும் இந்துதுவா ஆதரவாளர்கள் ஏன் பொய் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

காந்திக்கொள்ளப்பட்ட சில மணிநேரத்திற்குள் நேரு வானொலி மூலமாக காந்தியை சுட்டது இஸ்லாமியர் அல்ல ஒரு இந்து என்று அறிவிப்பை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்?

அப்படி செய்யாவிட்டால் இந்தியாவில் பல்லாயிரம் கணக்கான இஸ்லாமியர்களை படுகொலை செய்திருப்பார்கள். இப்படி எல்லாத்துக்கும் என்ன காரணம் என்று தெரிந்தும் அதை எல்லாம் முறையாக விசாரிக்காமல் வருடா வருடம் காந்தி ஜெயந்தி கொண்டாடும் இந்திய அரசாங்கத்தை என்ன செய்யலாம்??????????

பூந்திதான் குடுக்க முடியும்

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

உலகில் உள்ள 700 கோடி மனிதர்கள்

நாம் உயிர் வாழக் காரணாக இருக்கும் இந்த பூமி 70% தண்ணீரால் (கடலால்) சூழப்பட்டுள்ளது. நம்மை முழுவதுமாக சுற்றியுள்ள தண்ணீரில் 97% கடல் நீராகவும், 2% பனிக்கட்டியாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மீதமுள்ள 1% நன்னீரைதான் மனித இனம் தன் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்த முடியும்.

உலகில் உள்ள 700 கோடி மனிதர்கள் உட்பட எல்லா உயிரினங்களும் இந்த தண்ணீரை நம்பியே வாழ்கின்றன. மேலும், உலகம் தோன்றிய நாளில் இருந்து இன்று வரையில் உலகத்தில் உள்ள நல்ல தண்ணீரின் அளவு மாறவில்லை.

உலகம் தோன்றியதிலிருந்து நாளது வரை பல மாற்றங்களையும், பல வகை உயிரினங்கள் தோன்றியும், முழுவதுமாக அழிந்தும் வந்திருக்கின்றன. மாறாமல் இருப்பது தண்ணீர் மட்டுமே. தண்ணீரை புதிதாக உற்பத்தி செய்ய இயலாது, உருமாற்ற மட்டுமே முடியும்.

மனித நாகரிகங்களுக்கும் தண்ணீரே மையமாக உள்ளது. ஆதி காலத்தில் மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்த 'மழை நாகரிக'த்தில் இருந்து, இந்த நவீன கணினி உலகம் வரை வேளாண்மைக்கும் தண்ணீர்தான் ஆதாரமாக உள்ளது. அதற்கான மோதல்களும் உலகளவிலும், உள்நாட்டு அளவிலும் நடைபெற்ற வண்ணம் உள்ளன.