OnlinePJ

Thanks for Visiting my Page

புதன், 1 பிப்ரவரி, 2012

மருந்து மாத்திரைகள் வாங்கும் போது… சில எச்சரிக்கை குறிப்புகள்!!



மருந்து வாங்கும் போது… கீழ்க்கண்ட விஷயங்களை அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இது உயிர் பற்றிய விஷயம். எனவே அக்கறை அவசியம்.
1. மருத்துவரின் சீட்டு இல்லாமல்வாங்காதீர்கள்!
தமிழ் சினிமாவின் பிரபல வசனங்களில் ஒன்று, யார் சுட்டாலும் துப்பாக்கி சுடும. யார் வெட்டினாலும் கத்தி வெட்டும். மருந்து, டாக்டர் எழுதிக் கொடுத்தாலென்ன… கடைக்காரரே கொடுத்தால் என்ன? என்று நினைப்பவர் அநேகர். அது உண்மையல்ல. குடும்ப மருத்துவருக்குக் கொடுக்கும் பணம் உங்கள் உடல்

நலத்திற்கான முதலீடு என்பதை உணருங்கள். நீங்கள் சரியான மருத்துவரிடம் 50, 100 ரூபாய் கொடுத்தால் அவர் குறைந்தது 5 மடங்கு பணம் மிச்சப்படுத்தும் வேலையைச் செய்வார்!

இப்போது பெரும்பாலான மருத்துவர் கள் தங்கள் மருந்துச் சீட்டை தெளிவாக, தனித்தனியாக கொட்டை எழுத்துக்களில் தான் எழுதித்தருகின்றனர். சிலர் கம்ப் யூட்டர் மூலம் பிரிண்ட் செய்யப்பட்ட மருந்துச் சீட்டை கொடுக்கிறார்கள்.
கையெழுத்துப் புரியவில்லை என்றால் கேட்டு விடுங்கள்! கோபிக்க மாட்டார்! சிலர் பழைய சீட்டை வைத்தே வருடக் கணக்கில் வாங்குவார்கள். அதுவும் தவறு! அவ்வப்போது மருத்துவரைப்பாருங்கள்!
2. செல்போனில் மருந்துச் சீட்டு
நீண்ட காலத்திற்கு சாப்பிட வேண்டிய உயிர் காக்கும் மருந்துகளின் பெயர், டோஸ் அளவு போன்றவற்றை Cell Phone™ மெஸேஜ் ஆக எழுதி பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த Message  வீட்டில் உள்ள அனைத்து செல்ஃபோனி லும் இருக்கட்டும். அவசரத்தில் சிகிச்சை யளிக்க மருத்துவர் கேட்கும்போது இது உயிர் காக்க உதவும்.
3. பில் இல்லா மருந்து மருந்தல்ல எங்கே வாங்கினாலும், எவ்வளவு வாங்கினாலும் எவ்வளவு அவசர மானாலும், பில் இல்லாமல் மருந்துகளை வாங்காதீர்கள்.
பில்லில் உங்கள் பெயர், மருத்துவரின் பெயரும் இருக்கட்டும். மருத்துவரின் மருந்துச் சீட்டுடன், பில்லை வைத்து கவனமாக சரிபார்த்து, வாங்குங்கள். சந்தேகம் இருக்கும் பட்சம் மருத்துவரிடமோ அவரது உதவியாளரிடமோ Cross Check செய்து கொள்ளுங்கள்.
4. உதிரிகள் வேண்டவே வேண்டாம்..
மருந்தின் பெயர், மருந்துப் பொருட்களின் பெயர், தயாரித்த கம்பெனியின்  பெயர், விற்கும் கம்பெனியின் பெயர் மருந்தின் வீரிய அளவு, மருந்து தயாரித்த தேதி காலாவதி தேதி ஆகியவற்றை முழு அட்டையாக மாத்திரை வாங்கும் போதுதான் கவனித்து வாங்க முடியும். எனவே கூடுமானவரை உதிரியாக மாத்திரை வாங்குவதை தவிர்த்து விடுங் கள். உதிரி மாத்திரைகள், காலாவதி, போலி, சாம்பிள் மாத்திரைகளாகக் கூட இருக்கக் கூடும். எனவே கூடுதல் கவனம் தேவை.
5. வீரியமில்லாமல் காரியமில்லை
மாத்திரை பெயர் பார்த்து வாங்கும் போது அதன் அளவு 2 மிலி, 5 மிலி, 10 மிலி என வீரியத்தின் அளவு பார்த்து வாங்க வேண்டும். இது மிக முக்கியம்.
6. காலாவதி மாத்திரை
காலனிடம் சேர்க்கும் எந்த மருந்தையும் நீங்களாகப் பார்த்து, காலாவதி தேதி சரிபாருங்கள். சில மாத்திரைகளில், 18 மாதங்கள், 24 மாதங்கள். தயாரித்த தேதியிலிருந்து என போட்டிருப்பார்கள். அதையும் சரிபாருங்கள்.
ஒரே வகையான மருந்து 6 மாதம் ஒரு கம்பெனியும் மற்றொரு கம்பெனி 3 வருடம் கழித்தும் காலாவதி தேதியை குறிப்பிட்டிருக்கும். அது மருந்து தயாரிக் கும் முறை, மருந்தின் உட்பொருட்கள் பொறுத்து மாறக்கூடும். நீங்களாக ஒரு முடிவுக்கு வர வேண்டாம்.
சில மருந்துகள் 1 நாள் தாண்டினால் கூட விஷமாக மாற வாய்ப்பு உண்டு. உதாரணம் டெட்ராசைக்ளின் வகை மருந்துகள். சில மருந்துகளில் காலாவதி தேதி நீண்ட நாட்கள் இருந்தாலும், குறிப்பாக குழந்தைகளுக்கு பவுடர் வடிவில் கொடுக்கப்படும் ‘ஆன்டி பயாடிக்Õ வகை மருந்துகள், காய்ச்சி ஆறவைத்த நீரில் கலந்து 5 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என சிறிய எழுத்தில் எழுதியிருப்பார்கள். அதுபோன்ற மருந்து களை 5 நாட்களுக்கு மேல் வைக்கக் கூடாது.
7. நீண்ட நாட்களுக்கு…
நீண்ட நாட்களுக்கு சாப்பிட வேண்டிய, தினசரி தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகள் குறைந்தது 1 வாரத்துக்கான அளவாவது வீட்டில் இருக்கட்டும். இரவு ஒரே மாத்திரை இருந்து அதுவும் கீழே தவறி விழுந்துவிட்டால், தேவையில்லாத, பயம், பதட்டம், கவலை, அலைச்சல் டென்ஷன் இதை தவிர்க்க கைவசம் சற்று மாத்திரைகள், பர்ஸ், அல்லது ஹேண்ட் பேகில் இருக்கட்டும்.
8. குறைந்த செலவில் நிறைய மருந்துகள் சில
மொத்த மருந்து வியாபாரிகளின் சில்லறை விலைக் கடைகளிலோ, சேவை நிறுவனங்கள் நடத்தும்

கடைகளிளோ, 10 முதல் 20% வரை எம்.ஆர்.பி. விலையில் இருந்து தள்ளுபடி விலையில் மருந்து கிடைக்கும். ஒரு மாதத்திற்குத் தேவை யான மருந்துகளை இதுபோன்ற கடை களில் வாங்கினாலே கணிசமான பணம் மிச்சமாகும். சில கடைகளில் போனில் ஆர்டர் கொடுத்தால் இலவச டோர் டெலிவரி வசதியும் உண்டு. பயன்படுத்திக் கொள்ளுங்கள். நேரத்தை மிச்சப்படுத்துங்கள்.

9. அதே மருந்து…
வேறு கம்பெனி சில மருந்து கம்பெனியின் தயாரிப் புகள் இல்லாதபோது நீங்களாகவே வேறு கம்பெனி மருந்துகளை மருத்துவரின் அனுமதியில்லாமல் வாங்காதீர்கள். போலி கம்பெனியா, தடைசெய்யப்பட்ட மருந்துகள் கலந்துள்ளனவா என்பதை உங்கள் மருத்துவர் அறிவார். குறிப்பாக வலிப்பு/ சர்க்கரை வியாதி/ ரத்தக் கொதிப்பு மாத்திரை வாங்கும்போது, வீரியம் அதிகரித்தாலோ, குறைந்தாலோ, தேவையில்லாத பாதிப்புகள் ஏற்படக் கூடும்.
அதுபோலவே மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்தை நீங்களாகவே குறைத்துக் கொள்ளவோ அதிகரித்துக் கொள்ளவோ வேண்டாம்.
என் நண்பர் ஒருவர் ‘விருந்துக்குப் போய்விட்டு வந்தால் சர்க்கரை மாத்திரை இரண்டாகப் போட்டுக் கொள்வேன்’ என்பார். தலைக்கு மேல் கத்தி தொங்கு வது போன்றது இது. எப்போதும் ஆபத்து நேரலாம்.
10. மருந்துகள் பாதுகாக்க குழந்தைகள் கைக்கு எட்டாமல் வைக்கவும்.
பல மாத்திரைகள் கலர் கலராக ஜெம்ஸ் மிட்டாய் போல இருப்பதால் குழந்தைகள் வாயில் போட்டுக் கொள்ளும் ஆபத்து அதிகம்.
சில மருந்து மாத்திரைகள் குறிப்பாக நெஞ்சுவலி மாத்திரைகள் போன்றவை கைக்கு எட்டும் வகையிலும், தேவைப்பட்டால் ஒவ்வொரு அறையிலும் இருப்பது நலம்.
சில மருந்துகளை குளிர் சாதனப் பெட்டியில் தான் (இன்சுலின் போன்றவை) வைக்க வேண்டும். ஆனால் ஓபஸ் பெட்டியில் (ப்ரீஜரில்) வைக்கக் கூடாது.
பொதுவாக எல்லா மருந்துகளையும் வெயில், சூடுபடாத, ஈரம் இல்லாத உலர்ந்த இடத்தில் வைப்பது அவசியம். அடுப்பு அருகே, ப்ரிட்ஜின் மேல், சூடான பாத்திரம், ஹீட்டர் அருகே அல்லது வெயில்படும் இடங்களில் மருந்துகளை வைத்தால் மருந்து கெட்டுப்போக வாய்ப்பு உண்டு. சிலவகை தடுப்பு

மருந்துகளில், மருந்தின் வீரியம் கெட்டுப் போனதை அந்த லேபிள் கலர் மாறு வதைப் பொறுத்து கண்டுபிடிக்க இயலும்

source:kalvikalanjiam.

டெல்லி:சைக்கிள் ரிக்‌ஷா தொழிலாளர்களிடம் போலீஸ் கொள்ளையடிப்பது 360 கோடி.



280917-rickshaw-in-delhi
புதுடெல்லி:நெரிசல் மிகுந்த தாயகத்தின் தலைநகராம் டெல்லியில் குளிரையும், வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் குறைந்த வாடகையில் பயணிகளை அவர்களின் செல்ல விரும்பும் இடத்திற்கு அழைத்துச் செல்ல இரத்தத்தை வியர்வையாக மாற்றும் சைக்கிள் தொழிலாளிகளுக்கு வாழ்க்கையை ஓட்டுவதே பெரும் சிரமம்தான்.
பிச்சைப் பாத்திரத்தில் உள்ள காசை தட்டிப்பறிப்பது போல லஞ்சபேர் வழிகளான போலீசாரின் தொல்லை இவர்களின் வாழ்க்கையை மேலும் சிரமத்தில் ஆழ்த்துகிறது. ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 360 கோடி ரூபாயை கையூட்டு போலீசார் ரிக்‌ஷா தொழிலாளர்களிடம் இருந்து கொள்ளையடிப்பதாக புள்ளிவிபரம் கூறுகிறது.
1940 களில் கைவண்டிக்கு பதிலாக சைக்கிள் ரிக்‌ஷாக்கள் அறிமுகபடுத்தப்பட்ட வேளையில் பெரியதொரு தொழில்நுட்ப முன்னேற்றமாக டெல்லி வாசிகள் மகிழ்ந்தனர். 60 களில் சைக்கிள் ரிக்‌ஷாக்களின் எண்ணிக்கை 600-ஐ தாண்டியது. தற்போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சைக்கிள் ரிக்‌ஷாக்கள் சர்வீஸ் நடத்துவதாக டெல்லி மாநகராட்சி கூறுகிறது. ஆனால், நகர வீதிகளின் நெரிசலின் ஊடே 6 லட்சத்திற்கும் அதிகமான ரிக்‌ஷாக்கள் பயணிப்பதாக அதிகாரப்பூர்வமற்ற புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்களை அவர்கள் விரும்பும் இடத்திற்கு கொண்டு சேர்க்கும் ரிக்‌ஷா தொழிலாளர்களை போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் சேர்ந்து கொள்ளையடிக்கின்றனர்.
காண்பவர்களின் உள்ளத்தை உருக்கும் வகையில் சைக்கிள் ரிக்‌ஷாக்களை வியர்வை வழிய ஓட்டிச் செல்லும் இவர்களை பிழிவதற்காக அசாத்தியமான சட்டங்களை பிரயோகிப்பது போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் சூழ்ச்சியாகும்.
உதாரணமாக 99 ஆயிரம் சைக்கிள் ரிக்‌ஷாக்களுக்கு மட்டுமே அனுமதி என்பது மாநகராட்சியின் தீர்மானமாகும். இதனால் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட ரிக்‌ஷாக்கள் சட்டவிரோதமானது ஆகும். இதைவிட போலீஸ்காரர்களுக்கு கொள்ளையடிப்பதற்கான வேறு வழி தேவையா? தனக்கு சொந்தமான ரிக்‌ஷாவை மட்டுமே ஓட்டவேண்டும் என்பது மற்றொரு சட்டம். அதாவது ஒன்றிற்கு மேற்பட்ட ரிக்‌ஷாக்களை ஒருவர் சொந்தமாக வைத்துக்கொள்ளக் கூடாது. தனக்கு சொந்தமான ரிக்‌ஷாவை வேறு எவரிடமும் கொடுத்து ஓட்டவும் கூடாது. முதலாளிகளின் சுரண்டல்களில் இருந்து தொழிலாளர்களை பாதுகாப்பதே இச்சட்டத்தின் நோக்கம் என அதிகாரிகள் கூறினாலும், 95 சதவீத ரிக்‌ஷா தொழிலாளர்களும் சொந்தமாக ரிக்‌ஷா வைத்துக்கொள்ளும் அளவுக்கு வசதியில்லாத ஏழை குடியேற்ற வாசிகள் ஆவர்.
சட்டவிரோதமாக ரிக்‌ஷா ஓட்டும் இவர்களிடமிருந்து விருப்பம் போல லஞ்சம் வாங்கலாம். பெரும்பாலும் ரிக்‌ஷாக்களை தங்களிடமிருந்து போலீஸார் கைப்பற்றி, கடுமையாக கொடுமைப்படுத்துவதாகவும் கீதா காலனியில் ரிக்‌ஷா ஓட்டும் ராஜேஷ்வர் கூறுகிறார்.
காலை முதல் மாலை வரை ரிக்‌ஷாவை ஓட்டினால் ஒரு நாளைக்கு 300-350 ரூபாய் வசூலாகும். அதில் 60 சதவீதம் ரிக்‌ஷா முதலாளிகளுக்கு செல்லும். உணவு மற்றும் இதர செலவுகளுக்கு 100 ரூபாய் ஆகும். வீட்டிற்கு பணம் அனுப்பி வட்டிக்காரர்களிடம் இருந்து பெற்ற கடனை வட்டியுடன் சேர்த்து திரும்ப அடைக்கவேண்டும். இதனிடையே போலீஸ்காரர்களுக்கு லஞ்சம் வேறு. குடியரசு தினத்தை கோலகலமாக கொண்டாடிய நமது தலைநகரில் அப்பாவி ரிக்‌ஷா தொழிலாளர்களின் அவலநிலையை யார் கண்டு கொள்கிறார்கள்?
source:thoothuonline.