OnlinePJ

Thanks for Visiting my Page

ஞாயிறு, 22 மார்ச், 2015

பின் தள்ளப்பட்ட பிரச்சனைகள்

மறதி என்பது ஒரு தேசிய வியாதி என்பது பலரால் பல நேரங்களில் சொல்லப்பட்ட சொல்லப்பட்டு கொண்டிருக்கிற வார்த்தை தான்.  என்னை பொறுத்தவரை அது தேசிய வியாதி இல்லை. உலகளாவிய வியாதி.

ஒரு நிகழ்வை அல்லது ஒரு செய்தியை மறப்பது அல்லது திட்டமிட்டு மறக்கடிக்க படுவது என்பது வேறு. ஆனால் சில செய்திகளை மறக்கவோ  அல்லது மறக்கடிக்கபடுவதை விட விசித்திரமான சூழ்ச்சி எதுவென்றால் மக்களை அது பற்றி சிந்திக்கவோ அல்லது குறைந்த பட்சம் அது பற்றி பேசுவதை கூட அனுமதிக்காத அளவுக்கு வேறு ஒரு விஷயத்தை அல்லது நிகழ்வை கொண்டு நீர்த்து போக செய்வதுதான்.

அப்படி பல விஷயங்களை நீர்த்து போக செய்யும் மாற்று விஷயம் (தந்திரம் என்பதே சரியான சொல்லாக இருக்கும்) பின்தள்ளப்பட்ட விஷயங்களை விட முதன்மையானதாக இருந்தால் நிகழ்வுகளின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் என்று முதன்மை பெறுகிறது என்று நமக்கு நாமே சால்ஜாப்பு சொல்லிக்கொண்டு நாட்களை கடத்தலாம்.

ஆனால் நீர்த்து போக செய்யப்படும் விஷயத்தை விட அதை நீர்த்து போக செய்யப்படும் விஷயம் சாதரணமாக இருந்தால் அதை என்னவென்று சொல்வது? அப்படி ஒரு விஷயம் தான் இப்போழுது நடந்து கொண்டிருக்கிறது.

அந்த சாதாரண விஷயத்தின் பெயர் தான் கிரிக்கெட்!!!!

கிரிக்கெட் என்ற சாதாரண ஒரு விளையாட்டு விஷயத்தை முன்னிலைபடுத்தி பின்னுக்கு தள்ளப்பட்ட அல்லது நீர்த்து போக செய்யப்பட்ட விஷயங்கள் ஏராளம்.

ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியின் மரணம் , தமிழகத்தில் ஒரு அரசு ஊழியரின் மரணம் , ட்ராபிக் ராமசாமி என்கின்ற சர்வதேச பயங்கரவாதியின் (அவர்கள் பார்வையில் ) கைது , தேசத்தை விற்று காசாக்கி கோட்டு சூட்டு போட்டுக்கொள்ள துடிக்கும் ஆட்சியாளர்களின் நிலம் கையகபடுத்தும் சட்டம், மாட்டுக்கறிக்கு எதிரான மாங்கா மடையர்களின் சட்டம்  என அடுக்கி கொண்டே போகலாம்.

இந்த மாத இறுதிக்கு பிறகு கண்ணையும் அறிவையும் உலக நிகழ்வுகளையும் மறக்கடிக்க செய்த உலக கோப்பை கிரிக்கெட் என்கின்ற மாயை முடிவுக்கு வரும்பொழுதே ஐபிஎல் என்னும் அடுத்த சூழ்ச்சி கண்ணை மறக்க தயாராகி நிற்கிறது.

நடக்கட்டும் பார்க்கலாம்....நானும் சேர்ந்து பார்க்கிறேன்.

1 கருத்து:

பூ.இராஜேந்திரன் சொன்னது…

தங்களை யார் கிரிக்கெட் பார்க்க சொன்னா??? அது பேசாம அது நடந்துவிட்டு போகட்டும், நாம் பேசாம நம் வேலையை நாம் பார்போம்