OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 26 மே, 2014

ஐபிஎல் இவங்களே வைப்பாங்கலாம், இவங்களே எடுப்பாங்கலாம்.


நேற்றைய தினமும் அதற்க்கு முந்தைய நாள் நடந்த இரண்டு ஐபிஎல் போட்டிகளை பார்த்தால் தெரியும் இது அப்பட்டமான ஏமாற்று வேலை மற்றும் பக்காவான நிர்ணயிக்கப்பட்ட ஒரு விளையாட்டு என்று.

1.   அதாவது முதல் ஆட்டத்தில் கோல்கத்தாவிர்க்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 15.2 ஓவர்களில் 161 ஓட்டங்கள் எடுக்க வேண்டும், இது சாத்தியமே என்று வைத்துக்கொண்டாலும் அதை யூசுஃப் பதான் அடித்தது கண்டிப்பாக இது ஒரு மேட்ச் பிக்ஸிங்க் என்பது நிருபணமாகின்றது எப்படி? யூசுஃப் பதான் கடந்த ஓராண்டுக்கு மேலாக அதிகளவில் போட்டிகளில் பங்குபெறவில்லை மேலும் அவர் இது வரை ஆடிய ஆட்டங்களை பார்த்தால் தெரியும் அவர் கொஞ்சம் கூட பார்மில் இல்லை என்று ஆனால் அவர் அடித்து இலக்கை அடைகிறார்.
2.   அடுத்து நேற்றைய தின ஆட்டமும் இதே மாதிரி மும்பை அணி 14.3 ஓவர்களில் 190 ஓட்டங்கள் வேண்டும், இதுவும் ஒரு பேச்சுக்கு சாத்தியம் என்று வைத்துக்கொண்டாலும் இங்கேயும் அதே மொள்ளமாரித்தனம்தான் இது வரை ஒரு ஆட்டங்களில் சாதிக்காத கொஞ்சம் கூட பார்மில் இல்லாத கோரி ஆண்டேர்சன் அதை நிகழ்த்துகிறார்.
3.   மேலும், கடந்த 20-20 உலகக்கோப்பை வரை பயங்கர பார்மில் இருந்த விராட் கோஹ்லி படுபயங்கரமாக சொதப்பி வருகிறார்.

இதையெல்லாம் வைத்து பாருங்கள் இது எல்லாமே முன்னாடியே நிர்ணயிக்கப்பட்டது. இந்த மெச்சில் இந்த வீரர்தான் விளையாடனும் அப்படினு குதிரை ரேஸில் பணம் காட்டுவது போன்று கட்டிவிட்டார்கள் அப்படி அந்த வீரர்கள் தப்பித்தவறி கேட்ச் குடுத்தாலும் பிடிக்க கூடாது இதுதான் மேட்ச் பிக்ஸிங்க் இதுதான் ஐபிஎல். மேலும் அருமையான வீரர்களைக்கொண்ட டில்லி அணி ஏன் தோல்வியை மட்டுமே தழுவிக்கொண்டு இருக்கின்றது அதற்க்கும் கட்டிவிட்டார்கள் பணத்தை அது தெரியக்கொடாது என்றுதான் முதல் இரண்டு ஆட்டங்கள் ஜெயித்து மக்களை நம்பவைத்தார்கள்.

#ஐபிஎல் இவங்களே வைப்பாங்கலாம், இவங்களே எடுப்பாங்கலாம்.     


திங்கள், 28 ஏப்ரல், 2014

புரோட்டா வாழ்க.


ஒவ்வொரு பொருளிலும் குறை கண்டு பிடித்துக் கொண்டு இருந்தால் அப்புறம் ஒன்றையும் சாப்பிட முடியாது.

மைதா மாவில் செய்யப் படும் புரோட்டா உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று இப்போது சொல்லுகிறார்கள். புரோட்டா, இன்றோ நேற்றோ கண்டுபிடிக்கப்பட்ட பதார்த்தம் அல்ல. ஏறக்குறைய ஐம்பது வருடங்களாக புழக்கத்தில் இருந்து வரும் ஒரு உணவுப் பண்டம். நமக்கு முந்தி இரண்டு தலைமுறையினர் இந்த புரோட்டாவை சாப்பிட்டு ஜீரணம் பண்ணி வாழ்ந்து செத்துப் போனார்கள். அவர்கள் எல்லாம் ஒன்றும் சொல்லவில்லை. அப்போதும் டாக்டர்கள் இருந்தார்கள்.

சரி, புரோட்டாவை விட்டு விடுவோம். புரோட்டா தவிர மைதா மாவில் வேறு என்னென்ன தின்பண்டங்கள் செய்கிறார்கள் என்று பார்ப்போமா. அனைத்து பிஸ்கோத்துகள், கேக்குகள், முதலான அனைத்து பேக்கரி ஐட்டங்களுக்கும் மூலப் பொருள் மைதாவே. மைதா மாவில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள் கணக்கிலடங்கா. அனைத்து ஓட்டல்களிலும் தயாரிக்கப்படும் பூரி, சப்பாத்திகளில் பாதிக்கு மேல் மைதா கலக்கப்படுகிறது. "நான்", "ருமானி" ரொட்டி இவைகளுக்கு மூலப்பொருள் மைதா மட்டுமே.

மைதா மாவிற்கு எதிராக சொல்லப்படும் முக்கியமான குற்றச்சாட்டு, வளர்ந்த நாடுகளில் இதை புறக்கணித்து விட்டார்களாம். அதனால் நாமும் இதை புறக்கணிக்க வேண்டுமாம். வளர்ந்த நாடுகளின் தரக் கட்டுப்பாட்டு முறைகளை நாமும் கடைப் பிடிக்கவேண்டுமென்றால் இந்தியாவில் சாப்பிடுவதற்கு லாயக்கான உணவு வகைகள் எதுவுமே மிஞ்சாது.

மைதா மாவு கோதுமை மாவை வெளுப்பாக்கி செய்யப்படும் ஒரு மாவு. இந்த வெளுப்பாக்குதலுக்கு "பென்சாயில் பெர்ஆக்சைடு" என்னும் போருளை உபயோகிக்கிறார்கள். அதானால் அந்த ரசாயனம் விஷம் என்று சொல்கிறார்கள். ரிபைஃன்டு ஆயில், சர்க்கரை, இரண்டும் இவ்வாறு ரசாயனங்கள் மூலம்தான் வெளுப்பாக்கப்படுகின்றன. இந்த இரண்டும்தான் சமையலறையின் உயிர்நாடி. இவைகளை என்ன செய்யப்போகிறோம்?

நம் கசாப்புக்கடைகளைப் பார்த்தால் வெள்ளைக்காரன் ஆயுசுக்கும் மட்டனை விட்டு விடுவான். நம் ஓட்டல் கிச்சனைப் பார்த்தால் என்றால் அடுத்த வேளை சாப்பாட்டிற்கு அவன் ஊருக்கே ஓடி விடுவான். கல்யாண வீட்டில் உணவு தயாரிப்பதைப் பார்த்தால் நமக்கே வாந்தி வந்து விடும்.

கைக்குத்தலரிசிதான் உடலுக்கு நல்லது. எத்தனை பேர் இதைச் சாப்பிடுகிறோம்? டபிள் பாலிஷ் செய்த அரிசிதான் மார்க்கெட்டில் விற்பனையாகிறது. அந்த அரிசி சாப்பாடுதான் மல்லிகைப்பூ மாதிரி பார்வைக்கு நன்றாக இருக்கிறது. அதைத்தானே சாப்பினுகிறோம்.

இத்தனை சீர்கேடுகள் இருந்தும் இந்தியன் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்றால் அவனுக்கு இந்த உணவு கிடைப்பதே பெரும் அதிர்ஷ்டமாக இருக்கிறது. தரக் கட்டுப்பாட்டு சான்றிதழ் பெற்ற உணவைத்தான் சாப்பிடுவேன் என்று இருந்தால் இந்திய ஜனத்தொகை ஒரே வருடத்தில் சுதந்திரம் வாங்கியபோது இருந்த அளவிற்கு வந்து விடும்.

சரி ஐயா, அப்படி மைதாவில் என்ன விஷத்தை கலக்கிறார்கள் என்று பார்த்தால், மாவை வெள்ளையாக்குவதற்கு பென்சாயில் பெர்ஆக்சைடு என்ற பொருளைப் பயன்படுத்துகிறார்கள். இது செற்கையாகத் தயார் செய்யப்பட்டாலும் அடிப்படையில் இது ஒரு அங்ககப் பொருளே. எல்லா அங்ககப் பொருட்களும் குறுகிய காலத்திலேயே வேதியல் மாற்றம் அடைந்து மறைந்து விடும். மைதா மாவு கடைக்கு விற்பனைக்கு வரும்போது இந்த வேதியல் பொருளின் அளவு, மனிதனுக்குத் தீங்கு விளைவிக்காத அளவிற்குத்தான் இருக்கும். இந்த விஷயத்தை அரசாங்கம் கட்டாயம் கவனித்துக்கொண்டிருக்கும்.

ஏன் இப்போது இந்த மைதா மாவு பிரச்சினை தலை தூக்கியிருக்கிறது என்றால், கேரளாவில்தான் முதலில் இந்தப் பிரச்சினை துவங்கியிருக்கிறது. கேரளாவைப் பொருத்த வரையில் தினம் ஒரு போராட்டம் நடத்தாவிட்டால் அவர்களுக்கு தூக்கம் வராது. மைதா மாவை ஒழிப்போம் என்று காலையில் ஊர்வலம் போய்விட்டு மத்தியானம் டீக்கடைக்குப் போய் ரெண்டு புரோட்டாவும் சாயாவும் சாப்பிட்டு விட்டுத்தான் வீட்டிற்குப் போவார்கள். ஈரைப் பேனாக்கி, பேனை பெருமாளாக்குவதில் வல்லவர்கள் அவர்கள்.

இந்த மாதிரி சமாச்சாரங்கள் இப்போது ஒரு பேஃஷனாகப் போய்விட்டது. மேனகா காந்தி என்று ஒரு அம்மாள் நாய்களுக்காக கோர்ட்டுக்குப் போய் தெரு நாய்களை கொல்லக்கூடாது என்று தீர்ப்பு வாங்கியிருக்கிறாள். நாய்க்கடி பட்டு ஆஸ்பத்திரிக்குப் போவது சாதாரண ஜனங்கள்தான்.

அந்தக் காலத்தில் பால்தான் சரிவிகித உணவு, எல்லோரும் பால் குடியுங்கள் என்று எல்லா டாக்டர்களும் பரிந்துரைத்தார்கள்.

ஆகவே உணவுக் கலப்படத்தைப் பற்றிய சிந்தனையாளர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப் படுகிறேன். தயவு செய்து இந்தக் கருமாந்திரம் பிடித்த ஊரில் குடியிருக்காதீர்கள். அமெரிக்கா, இங்கிலாந்து அல்லது ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டிற்குப் போய்விடுங்கள். நாங்கள் நிம்மதியாக புரோட்டா, சால்னா சாப்பிட்டுக்கொண்டு வாழ்ந்து கொள்கிறோம். புரோட்டா இந்தியன் உள்ளளவும் இருக்கும். புரோட்டா வாழ்க.