OnlinePJ

Thanks for Visiting my Page
வளைகுடா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வளைகுடா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

அமீரக கோர விபத்து!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


இன்று காலை அலுவலகம் வந்தவுடன் கண்ணில் பட்ட செய்தி அமீரகத்தில் உள்ள அல்அயின் இல் நடந்த ஒரு கோர விபத்தில் 24 தொழிலாளர்கள் பலி, இதில் இறந்த அத்தனை பெரும் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள், எனக்கு தெரிந்த வரை இதில் அதிகமாக பங்களாதேசிகளும், இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் அதிகமாக இருப்பார்கள்.





இறந்தவர்களில் இதுவரை 16 நபர்கள் பங்களாதேஷ் எனவும், ஒருவர் இந்தியர் எனவும் தெரியவந்துள்ளன், மீதமுள்ள 7 நபரால் யார் என்று இதுவரை தெரியவில்லை, 75 டன் கொண்ட மணல் லாரி ஒன்று தொழிலாளர்களை ஏற்றி சென்ற பஸ் ஒன்றில் மோதி அதன் மீது கவிழ்ததால் இந்த விபத்து நெர்துள்ளது, இது வரை யார் மீது தவறு என்று தெரியவில்லை, ஆனால் இரண்டு வாகன ஓட்டிகளும் உயிர்பிழைதுள்ளனர், ஒருவர் இரண்டு கால்களும் இழந்துள்ளார்.

இறந்தவர்களின் குடும்பத்தார்கள் மனக்கஷ்ட்டதை போக்க இறைவனிடம் பிராத்திப்போம்.



ஒரு கும்கி செய்தி:-
அமீரகத்தில் உள்ள எடிசலாத் (etisalat) தொலைதொடர்பு நிறுவனம் குறைவான சம்பளம் வாங்கும் வெளிநாட்டவர்களை கருதி அவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் உள்ள வாய்ப் (voip) காலிங் கார்டை அறிமுகம் செய்துள்ளது. 

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

அபு தாபியின் ஷேக் ஜாய்த் பள்ளியின் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி!!!!!!!!



உலகிலேயே மக்கா மதீனாவிர்க்கு அடுதபடியாக மிகப்பெரிய பள்ளிவாசல் என்பது அமீரக அபு தாபியில் அமைந்துள்ள ஷேக் ஜாய்த் பள்ளிதான். இதை எதற்காக வேண்டுமென்றாலும் அவர்களும் கட்டிக்கொள்ளட்டும் அதை பற்றி நாம் கவலை படவேண்டாம்.



இந்த பள்ளிவாசல் தொடங்கின நாள் முதல் வருடாவருடம் நோன்பில், பல நோன்பாளிகள் நோன்பு திறக்க இவர்கள் உணவு வழங்கி வருகின்றனர். இங்கே நோன்பு திறக்க வருபவர்கள் மிகவும் குறைந்த சம்பளத்தில் வேளைபார்க்கும் தொழிலாளிகளில இருந்து, உயர் மட்ட ஆட்காட்கள் மற்றும் பெண்களும் வருகின்றனர். இது என்ன ஒரு பெரிய விஷயமா? அப்படின்னா இதுக்கு அப்புறம் தான் நீங்க முக்கியமாக கவனிக்கணும்.

சனி, 11 ஆகஸ்ட், 2012

இந்தியாவின் மானம் எப்படி எல்லாம்!!!!!!!!!!ஏற்கனவே இல்லை.

துபாயில் பிச்சை எடுப்பது குற்றம்! ரமலான் நோன்பின்போது யார் என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்லாது இருப்பதைக்கொடுக்க வேண்டும் என்பது இஸ்லாமியர் நியதி. இதை சாதமாகப் பயன்படுத்திக்கொண்டு இந்தியாவிலிருந்து விமானத்தில் வந்து பிச்சை எடுத்த இந்தியர்கள் 131 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இவர்கள் தமிழ்நாடுபீகார்உத்தர பிரதேசம் மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 16 தமிழர்களும் அடக்கம்! (ராமநாதபுரம், வேலூர், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்)

இதேபோல் ஷார்ஜாவில் வீட்டில் பிச்சை கேட்ட 40 வயதான ஒரு பாகிஸ்தானியரை கைது செய்து அவரின் பையில் சோதனை செய்தபோது பையில் இருந்தது எவ்வளவு தெரியுமா? Dhs 30,000 (இந்திய மதிப்பில் 4.5லட்சம்!)

இந்த பிச்சைக்காரர்கள் ரமலான் மாதத்தை ஒரு வியாபாரமாகவே கருதுகின்றனர். ரமலான் மாதத் தொடக்கத்தில் Visit Visa வாங்கி விமானம் ஏறி துபாய், கத்தார், பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளுக்குச் சென்று தொழிலை ஆரம்பித்துவிடுவர். இதற்கு மொத்தமாய் ஆகும் செலவு 50,000 ரூபாய். ஒரு மாதம் ரமலான் நோன்பு முடிந்ததும் தங்கள் தொழிலை முடித்துவிட்டு சொந்த நாட்டிற்கு திரும்பிவிடுவர். இது எப்படி இருக்கு?
துபாயில் ஊடக நிறுவன இளைஞர் ஒருவர் சில நாட்கள் முன்பு ரோட்டில் நின்று உதவி/பிச்சை கேட்டதில் கிடைத்தது எவ்வளவு தெரியுமா? 1,200 Dhs (ரூ.18,000)  இதை பெருமையாக? அவரே கூறியுள்ளார்.
சரி இவர்களைப் போட்டுக்கொடுத்தது யாராக இருக்கும்? நிச்சயம் இன்னொரு இந்தியராககூட இருக்கலாம்! என்னைவிட அதிகம் சம்பாரிக்கிறான் என்ற பொறாமையால் துபாயில் பணி புரிந்துகொண்டிருக்கும் இன்னொரு இந்தியரேகூட போட்டுக்கொடுத்திருக்கலாம் J
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்கள், இவர்களுக்கு 3 மாதம்வரை சிறை தண்டனை கிடைக்கலாம்!

திங்கள், 16 ஏப்ரல், 2012

துபாய் பேமிலி விசா - டேனன்சி காண்ட்ராக்ட் கண்டிப்பாக வேண்டும்,


 பலபேர் எண்ணத்தில் மண்ணை போட்ட, எண்ணை வள நாடு????????????

துபாயில் டேனன்சி காண்ட்ராக்ட் கண்டிப்பாக தேவை என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குடும்பஸ்தர்கள் வயிற்றில் புளியை கரைக்கும் செய்திதான். பெரும்பாலும் துபையில் நம்ப ஆட்கள் sharing ப்ளாட்டில்தான் தங்கி இருக்கிறார்கள். இன்னும் பலபேர் தங்கள் மனைவி மக்களை அழைக்கலாம் என்று ஆர்வத்தில் உள்ளார்கள், அவர்களின் எண்ணத்தில் மண்ணை போட்ட மாதிரி இருக்கு இந்த செய்தி (ஏற்கனவே அவிங்களுக்கும் நமக்கு வாய்க்கா தகராறு) 
. --------------------------------------------------------------------------------
 UAE யில் உள்ள இந்தியன் ஸ்கூல்கள் அனைத்தும் ஜூலை முதல் வாரத்தில் இருந்து விடுமுறை அறிவித்துள்ளன. சீக்கிரம் டிக்கெட் போட்டுடுங்க. (சொர்கமே என்றாலும் அது நம்ம ஊற போல வருமா?????????)
-------------------------------------------------------------------------------- 

துபாயில் இந்த வருடம் மழை குறைவுதான். ஷார்ஜவிலும் அதே நிலைதான். கடந்த வெள்ளி  இரவு யாருக்கும் தெரியாமல் பெய்து விட்டு போனது. ஆனால் அபுதாபியில் சனிக்கிழமை நல்ல மழை பெய்து இருக்கிறது. 3.5 மீட்டர் வரை பெய்து இருக்கிறது. 
---------------------------------------------------------------------------------

புதன், 28 மார்ச், 2012

துபையை தொடர்ந்து அபு தாபியிலும் மெட்ரோ!!!!!!!!!!!!!


அமீரகத்தில் துபையில் கடந்த 2009  ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்று வரை வெற்றிகரமாக இயங்கிகொண்டிருக்கும் மெட்ரோ, இப்பொழுது அமீரகத்தின் தலைநகரான அபு தாபியிலும் அதற்க்கான ஆயத்த பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.



இந்த மெட்ரோ துபையை காட்டிலும் கூடுதலாக 131  km தூரத்திற்கு என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது. அபு தாபி துபையை விட சிறிய நகரம்தான் என்றாலும் இதனை சுற்றியுள்ள சிறிய ஊர்கள் அதிகம், அதனை முன்னிருத்திதான் இந்த ஏற்பாடு, மேலும் இங்கு பெருகி வரும் மக்கள் தொகையை கனகிளிட்டும் இந்த பணி துரிதபடுதபட்டுள்ளது. 

இந்த மெட்ரோ ப்ராஜெக்ட் இங்குள்ள முக்கிய இடங்களான Sowwah Island, Reem Island, Saadiyat Island, Yas Island, Abu Dhabi International Airport and Masdar, the Capital City District, Emerald Gateway, Zayed Sports City and Adnec. போன்றவைகளை இணைக்கும் வண்ணமாக செயல்படவுள்ளது. 


இதில் முதல் கட்டமாக 18km மெட்ரோவும், 40km tram வண்டியும் தொடங்கப்படவுள்ளது, அதாவது இது இங்குள்ள Central Station, North Island, Al Wahda, Adnec, and Zayed Sports City போன்றவைகளை இணைக்கும் எனவும் தெரிய வந்துள்ளது. 

இதனால் அபு தபி அரசிற்கு வருடத்திற்கு 3 .8 பில்லியன் டிராவல் டைம் செலவும், 102million பயண நேரமும் மிச்சமாகும் என்கின்றார்கள் அதிகாரிகள். 

இதனால் இங்கு வெளியாகும் கார்பன் மோனாக்சைட் 22050  ன் குறையும் என்றும் தெரியவருகிறது. இந்த முயற்சி 2016  ஆமாண்டு முடிவடையும்.

என்னதான் இந்த நாட்டில் மக்கள் அவதி பட்டாலும், இது போல  உண்மையிலேயே மக்களுக்காக செய்ய கூடிய ஒவ்வொரு செயலும் பாராட்டகூடியதே.................

துபாய் என்னதான் planned  நகரம் என்றாலும், அபு தபி well  planned  நகரம் என்பதில் மாற்றுகருத்து இல்லை...............

திங்கள், 26 மார்ச், 2012

அமீரகத்தில் ஒரு மழைகாலம்...

நான் கடந்த வாரம் அமீரக மனபுயலை பற்றி, எனது பதிவில் எழுதினேன், அதனை தொடர்ந்து ஊரை சுத்த படுத்தும் விதமாக நேற்றிலிருந்து அமீரகத்தில் ஆங்காங்கே சிறிய அளவில் மழை தூறல்கள் விழுந்த வண்ணம் உள்ளன.............இன்றும் அமீரகத்தில் உள்ள அபு தாபியில் கொஞ்சம் நல்ல மழையும் பெய்தது.................இந்த வானிலை நாளை வரை தொடரும் என்று நம்ம ரமணி கூறவில்லை...........இங்குள்ள வானிலை அறிக்கை கூறுகின்றது...............இத்துடன் உங்களுக்காக சில புகைப்பட துளிகள்..............










செவ்வாய், 20 மார்ச், 2012

அமீரகத்தில் புயல்

என்னமோ தலைப்பை பார்த்தவுடன் ஏதோ தானே புயல் என்று நினைக்காதீங்க, அந்த புயல்ல கூட குளிக்காதவங்க நிறைய பேர் இருந்திருப்பாங்க ஆனா இந்த புயல்ல குளிக்காதவங்க இருக்கவே முடியாது, ஏன் தெரியுமா? இங்கே அடிப்பது மண் புயல் (என்ன அப்பா நாங்க குளிக்கமாட்டோம்னு ஒரு சிலர் சொல்லறது கேட்குது).

இதை பற்றி இங்கே 20  ௦ வருடத்திற்கு மேலாக வசிக்க கூடியவர்களிடம் கேட்டவரை, இது போல ஒரு மண் புயலை பார்த்ததில்லை என்கின்றனர். ஏன் நான் இங்கு வந்தே எட்டு வருடங்கள் ஆகின்றஹு நானும் இதுவரை இதுபோல பார்த்ததில்லை, ஏதோ என்னால முடிஞ்ச அளவு நான் எடுத்த போடோக்கள் உங்கள் பார்வைக்காக, போட்டோவில் அப்படியொன்றும் அதன் வீரியம் தெரியாது, மேலும் விபரங்களுக்கு உங்கள் நண்பர்கள் யாராவது இங்கிருந்தால் கேட்டுகொல்லுங்கள்







மேலும் சில செய்திகள்:-


  1. அபுதாபியில் ஆசியாவை சேர்ந்த ஒருவர் இங்குள்ள எடிசலாட் எனும் தொலைதொடர்பு அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவின் மேல் சந்தகப்பட்டு, அவரை உளவு பார்க்க தன்னுடைய லேப்டாப் காமெராவின் மூலம் படம் எடுத்துள்ளார், இதை அறிந்த அவருடைய மனைவி, தன கணவர் மேல் போலீசிடம் புகர் குடுத்து இப்பொழுது, இவர் சிறையில் உள்ளார்? இது தேவையா???
  2. அபுதாபியில் அத்தியாவசிய பொருட்களின் விலை தார்மாரக உயர்ந்துள்ளது என்று ஒரு கணக்கீடு கூறுகின்றது, அது எந்த அளவிற்க்கேன்றால், ஆண்டு 2010 -இல் ஒருவர் தான் வாங்கும் சம்பளத்தில் தனது அத்தியாவசிய பொருட்களுக்கென்று 16 .6  சதவிகிதம் செலவிட்டார, ஆனால் இன்று 2012 -இல் அது 23  சதவிகிதமாக ஏறியுள்ளது (எப்படி சிக்கியிருக்கும் பாருங்க) .
  3. இப்படி விளைஎற்றினாலும், இங்குள்ள அரசாங்கம், மக்களுக்கு குளிரூட்டப்பட்ட பெருந்துநிலயங்களை அமைத்து குடுத்திருக்கின்றது. அதனுடைய போடோக்கள் இதோ...........

இப்போதைக்கு இதுமாட்டும்தாங்க செய்தி..............மறக்காம உங்கள் கருத்துக்களை கூறிவிட்டு போங்க...............

திங்கள், 5 மார்ச், 2012

சவூதியில் வாடும் 700 பேர் : இந்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?

சவூதியில் உள்ள நமது செய்தியாளரை இன்று காலையில் சந்தித்த தமிழர் ஒருவர் கூறிய அதிர்ச்சியூட்டும் தகவல் இது.

சவூதி தலைநகர் ரியாத்தின் புறநகர்களில் ஒன்றான அல்ஹைர் என்னும் நகரில் Aல்-ஷ்௰அயெஹ் Bஉஇல்திங் Cஒந்ஸ்த்ருச்திஒந் அந்த் Cஒந்த்ரச்திங் Cஒ என்னும் நிறுவனம் உள்ளது. இங்கு கடந்த மே மாதம் 2011ல் 700 பணியாளர்கள் அவரவர் நாடுகளிலிருந்து பணிக்கு வந்துள்ளனர்.  அவர்களில் சுமார் 200 பேர் தமிழ்நாடு, உ.பி, பீகார், கேரளா முதலான இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

என்ன கொடுமை என்றால், வந்த நாள் முதலே அவர்களுக்குச் சம்பளம் வழங்கப்படவில்லை. இதுவரை அவர்களுக்கு அக்காமா எனப்படும் குடியுரிமை அட்டையும் தரப்படவில்லை. அவர்களிருக்கும் முகாம் கூட ஏதோ அகதிமுகாம் போல மின்சாரம் இல்லாமல், சமைப்பதற்குத் தேவையான எரிவாயு வசதியும் இல்லாமல், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள், உறவினர்கள் தரும் சொற்பத் தொகையைக் கொண்டே இதுவரை நாட்களைக் கழித்துவருகின்றனர். மனித உரிமை அமைப்புகளின் கடும் முயற்சியில் சொற்பத்தொகையில் ஒருமுறை சம்பளம் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இச்செய்தியினைத் தெரிவித்த அத்தொழிலாளருக்கும் நம் செய்தியாளருக்கும் இடையில் நடந்த உரையாடல்:

"சவூதி அரேபியாவில் பாரபட்சமில்லாத நீதிமுறை இருக்கிறதே! நீங்கள் சவூதி அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்றீர்களா??"
"அதில் மொழிப் பிரச்னை இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களில் ஆறுபேர் காவல்நிலையம் சென்று முறையிட்டபோது, அவர்களைப் பற்றி நிறுவனத்தார் வேறு ஏதோ முறையீடுகளைச் செய்ததால், அது எடுபடாமல் போனது தான் மிச்சம்"
"சரி, எத்தனையோ தமிழர் அமைப்புகள், மலையாள அமைப்புகள், இந்தியத் தூதரகம் யாவும் உள்ளனவே....!"
"இல்லை, அதெல்லாம் சரிப்படும் என்று தெரியவில்லை, உங்கள் இதழில் வெளியிட்டால் இந்திய அரசு மூலமாக, அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்புவதன் வாயிலாக இம்மாதிரியான இந்தியர் பிரச்னைகளுக்கு ஒரு முடிவும் விடிவும் ஏற்படலாம். குறிப்பாக, உடல்நலம் குன்றியுள்ளவர்கள் நாட்டுக்கும் போக வழியில்லாமல் படும் சிரமம் சொல்லிமாளாது. மனிதாபிமான அடிப்படையில் நீதி நிலைபெறச் செய்ய வேண்டியுள்ளது"
"நல்லது. நிச்சயம் இதுபற்றி எழுதுகிறோம்."
சொன்னபடி, இதோ எழுதிவிட்டோம். இச்செய்தியினை வாசிக்கும் நமது அரசியலவை உறுப்பினர்கள் நிச்சயம் தீர்வுகாண வழிமுறைகளை மேற்கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

செவ்வாய், 1 நவம்பர், 2011

கொள்ளை அடிக்கப்படும் இராக் எண்ணெய்....கொழிக்கும் குள்ள நரிகள்...



ண்ணெய் வளமிக்க மேற்காசிய நாடுகளில் இராக் முதலிடம் வகிக்கிறது. இராக்கில் பூமிக்கடியில் 505 பில்லியன் (ஒரு பில்லியன் 100 கோடி) பீப்பாய்கள் (Barrel) அளவுக்கு பெட்ரோல் உண்டு. அவற்றில் 134 பில்லியன் பீப்பாய் பெட்ரோல் வெளியே எடுப்பதற்கு ஏற்ற நிலையில் உள்ளது.