OnlinePJ

Thanks for Visiting my Page
முஸ்லீம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முஸ்லீம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 ஏப்ரல், 2013

மாப்ளே இருக்குடி உனக்கு


நரபலி மோடிதான் அடுத்த பிரதமர் ஆகப்போகிறார் அப்போ இருக்குடி உங்களுக்கெல்லாம் என்று சில காவிசொம்புகள் நம்மை (இஸ்லாமியர்களை) பார்த்து கொக்கரிக்கிறது. அவர்களிடம் நாம் சொல்லிக்கொள்ள விரும்புவது...

"தம்பி!!! அபுஜெஹில், ஃப்பிரவுன் போன்ற கொம்பங்களை எதிர்த்து வளர்ந்த சமூகம் இந்த இஸ்லாமிய சமூகம். அவர்களை ஒப்பிடும்போது இந்த மோ(கே)டியை ஒரு கொசு லிஸ்ட்டில் கூட சேர்க்க முடியாது. 

ஆக இந்த மோடிமஸ்த்தான்கிட்டே போய் சொல்லுங்க ஒரு குஜராத்தை வைத்து நீ ஓட்டு மொத்த இந்தியாவையும் எடை போட்டே மவனே அதோட நீ கேட்ட

கொன்னே புடுவேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!


செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

சிங்கத்திற்க்கும் , வவ்வாலிர்க்கும் ஒரு கண்டன பதிவு!!!!!!!!!!!!!!


இந்த பதிவில் வரும் எல்லாம் வெறும் கற்பனையே!!!!!!!!!!!!!!

இந்த பதிவில் வரும் பெயர்கள் வேறயாரையாவது நியாபகம் படுத்தினால் நிர்வாகம் பொறுப்பல்ல.








தமிழ் சினிமாவில் காட்டப்படும் முஸ்லிம்கள் வந்தேறிகளாகவே உள்ளனர். முஸ்லிம்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் அல்ல எனும் விஷமக் கருத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் நிறுவுகின்ற வகையில் தொடர்ச்சியாக காட்சிகள் அமைக்கப்படுகின்றன.

தமிழ் சினிமாவில் தோன்றும் முஸ்லிம்கள் தமிழுக்கு அறவே தொடர்பில்லாதவர்களாக சித்தரிக்கப் படுகின்றனர். கழுத்தில் தாயத்தும், தலையில் தொப்பியும், லுங்கியும் அணிந்து, கையில் கத்தியுடன் கசாப்புக் கடைகாரனாகவோ, பச்சைத் தலைப்பாகையுடனும் விகாரமான தோற்றத்துடனும் சாம்பிராணி போடுபவராகவோ காட்சியளிக்கும் முஸ்லிம் 'ஹரே பாய்..நம்பல் கீ' என்றுதான் பேசுகிறார்.
இதுதானா தமிழ் முஸ்லிம்களின் அடையாளம்? இதுவா நமது கலாச்சாரம்? 'நாம் இன்னும் பதிவு செய்யப்படாத சமூகம்' என்று உணரப்போகிறோம். ஆனால், தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் முஸ்லிம்கள் ஆற்றிய அரும்பணி பற்றியும், நடைமுறை வாழ்வில் கூட தமிழை வாழ வைத்துக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் குறித்தும் யார் படமெடுப்பது?
'சாதம்' என்று உயர் சாதியினர் பேசுவது போல் அல்லாமல் 'சோறு' என்று நல்ல தமிழில் உச்சரிப்பவர்கள் முஸ்லிம்கள். குழம்பை 'ஆணம்' என்றும் பழையதை 'நீர்ச்சோறு' என்றும் தூய தமிழில் பேசுபவர்கள் முஸ்லிம்கள். சாப்பிட்டாயா என கேட்காமல் 'பசியாறினாயா' என்று கேட்பவர்கள் முஸ்லிம்கள்.
பூஜை புனஸ்காரங்கள் என்று சொல்லாமல் 'தொழுகை' என்று அழகுத் தமிழில் அழைப்பவர்கள் அல்லவா முஸ்லிம்கள். இன்னும் எத்தனை எத்தனை தகவல்கள்? இந்த உண்மைகளை யார் பதிவு செய்வது?
நாம்தானே செய்ய வேண்டும். நமக்குத்தான் நம் வாழ்வியலின் ஆழ அகலம் தெரியும்; வலியும் வேதனையும் புரியும். நமது கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியத்தின் வலிமை தெரியும். இனி நமக்கென்று ஒரு ஊடகம் ஒன்றை நாமே உருவாக்கினால்தான், இந்த காவிதேசத்தில் சத்தியத்தை நிலை நாட்ட முடியும்.
அப்படி இல்லை என்றால் சில சிங்கங்களும், வவ்வால்களும், நம்மை சீண்டிப்பார்க்கத்தான் செய்யும். 

வியாழன், 31 மே, 2012

முஸ்லிம் ! இந்தியாவிலே முதலிடம்!!

 

இம்பால்: மத்திய மேல்நிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ)-2012 ஆம் ஆண்டிற்கான 12-வகுப்பு தேர்வில் இந்தியாவிலேயே முதலிடத்தை மணிப்பூரைச் சார்ந்த முஸ்லிம் மாணவன் முஹம்மது இஸ்மத் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

வடகிழக்கு மாநிலத்தில் இருந்து ஒரு மாணவர் இந்திய அளவிலான சி.பி.எஸ்.இ 12-ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெறுவது இதுவே முதன் முறையாகும்.

முஹம்மது இஸ்மத் சி.பி.எஸ்.இ +2 தேர்வில் 500க்கு 495 மதிப்பெண்களை (99.6%) பெற்றுள்ளார். இவர் மணிப்பூர் மாநிலம் தவ்பால் மாவட்டத்தில் லிலாங்கில் Haoreibi MayaiLeikai என்ற ஊரைச் சார்ந்தவர். இவரது தந்தை மவ்லானா பஸீருர் ரஹ்மான் ப்ரமைரி மதரஸா ஆசிரியர் ஆவார். தாயார் இஸ்மத்தின் சிறுவயதிலேயே மரணமடைந்துவிட்டார்.

7 சகோதரிகளை கொண்ட இஸ்மத் குடும்பத்தில் கடைசி நபர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தபோதும் இஸ்மத் படிப்பில் கெட்டிக்காரர். இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா?இவர் வசிக்கும் கிராமத்தில் தினமும் 2 அல்லது 3 மணிநேரமே மின்சாரம் இருக்கும். இதனால் அவர் தனது பெரும் பகுதி நேரத்தை பள்ளிக்கூடத்திலேயே கழிப்பார். தினமும் 8 to 10 மணிநேரம் படிப்பார்.

இவர் ஸெனித் அகாடமியில் பயின்று வந்தார். இஸ்மத்துக்கு +2 பயிலத் துவங்கும் பொழுது ரெஜிஸ்ட்ரேசன் ஃபீஸ் கட்ட இயலாத சூழல் இருந்தது அவரது நிலைமையை புரிந்துகொண்ட ஸெனித் அகாடமியின் செயலாளர் எஸ்.எம்.சிங், கட்டணத்தை செலுத்தியுள்ளார். மேலும் அவருக்கு படிப்பதற்கு தேவையான பொருட்களையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.

இஸ்மத் உடல்ரீதியாக பலவீனமானவர் என்பதால் நீண்ட படிப்பதையும் அவர் கைவிடும் சூழல் உருவானதாக எஸ்.எம்.சிங் கூறுகிறார்.

இவரது தந்தை கூறுகையில்,இஸ்மத்தின் பலவீனமான உடல்நிலையும், பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையும் கல்வி கற்க தடைக் கற்களாகும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர், தனது மகன் இத்தகைய தடைகளை தாண்டி வெற்றியை ஈட்டியுள்ளதற்கு உதவிய அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதாக கூறினார்.

இஸ்மத் டெல்லியில் உள்ள ஸ்டீஃபன் கல்லூரியில் பயில விரும்புகிறார். இயற்பியல்(பிசிக்ஸ்) பாடத்தை பயின்று விஞ்ஞானியாக மாறவேண்டும் என்பதே இஸ்மத்தின் நோக்கமாகும். மேலும் பல்கலைக்கழகத்தில் பட்டம் படித்த பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதவேண்டும் என்பதும் அவரது ஆர்வமாகும்.

ஸெனித் அகாடமி அவரது அடுத்த கட்ட படிப்பிற்கான அனைத்து பொருளாதார உதவிகளையும் அளிப்பதாக தெரிவித்துள்ளது. லிலாங் தொகுதி எம்.எல்.ஏவும் மாநில விவசாய அமைச்சருமான முஹம்மது அப்துல் நாஸிர் ரூ.1,11,111 பரிசுத் தொகையை அறிவித்துள்ளார்.

இஸ்மத் தனது வெற்றியின் சூத்திரமாக கூறுவது என்னவெனில், “ஒருவர் தனது ஆசையை கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும். ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நோக்கி அவரது நடவடிக்கைகள் அமையவேண்டும். ஆடம்பரமாக நவநாகரீகமாக வாழ்வதை விட எளிமையாக வாழ்வதிலும், அதிகமாக சிந்திப்பதிலும் ஒருவர் கவனம் செலுத்தவேண்டும். ஒரு மனிதன் தீர்மானித்து செயல்பட்டால் எல்லாம் சாத்தியமே.” என்றார்.!

புதன், 23 மே, 2012

பசும்த்தோல் போர்த்திய நரிகள் இந்த நடுநிலைவாதிகள்!!!!!!!!!!!!!!!!!



நாங்கள் எந்த இயக்கத்தையும் சாராதவர்கள் என்று சொல்லும் தௌஹீத்வாதிகள் TNTJ வை மட்டும் மறைமுகமாகவோ, நேரடியாகவோ வேறுபடும், சாடுவதுமாக உள்ளனரே ஏன்?





எந்த இயக்கத்தையும் சாராதவர்கள் என்பது ஒரு போர்வை தான். தௌஹீத் ஜமாஅத்தின் பக்கம் மக்கள் நம்பிக்கை  வைத்து செல்வதைப்பார்த்து பிடிக்காத சிலர் அவதூறு பரப்பி மக்கள் மத்தியில் வெறுப்பை விதைப்பார்கள். அதை சாதாரண மக்களும் புரிந்து கொள்வதால் உரிய முறையில் இதை நாம் எதிர்கொள்ள முடியும்.

தௌஹீத் ஜமாஅத் மீது அவதூறு பரப்பினாலும் அதன் வளர்ச்சியை தடுக்க முடியவில்லை என்பதை காணும் சிலர் தந்திரமான முறையில் மக்களை தௌஹீத் ஜமாத்தில் இருந்து அப்புறப்படுத்தும் வேலையை செய்வார்கள்.

நமக்கு யாரும் வேண்டாம், நாம் எதிலும் சேராமல் இருப்போம் என்று கூறுவது தான் அந்த தந்திரம். இவர்கள் அவர்களை குறை சொல்கிறார்கள், அவர்கள் இவர்களை குறை சொல்கிறார்கள். நாம் இவர்களை விட நல்லவர்களாக எதிலும் சேராமல் இருப்போம் என கூறி நடிப்பார்கள்.

ஆனால் இவர்களுக்கும் தோல்விதான் கிடைத்து வருகிறது. என்ன தான் மறைக்க முயன்றாலும் அவர்களின் உண்மையான தோலை வெளிபடுத்தும் வகையில் தௌஹீத் ஜமாத்துக்கு எதிராக இயக்கங்களின் நிகழ்ச்சிக்கு ஆள் பிடிக்கும் போதும், அது போன்ற பிரசூரங்கள் வெளியிடும் போதும் இவர்கள் முனாஃபிக்குகள் என்பது வெளிச்சமாகிவிடுகிறது. மக்களும் இவர்களை அடையாளம் கண்டு கொள்கின்றனர்.

ஒருவன் மோசடி செய்கிறான். இவன் செய்வது மோசடி என்று இன்னொருவன் சொல்கிறான். இதைப்பார்க்கும் இந்த நரிகள் கூட்டம் மோசடி செய்பவனுக்கு எதிராக இருக்காமல் இருவரும் சண்டையிடுவதால் நான் நடுநிலை வகிக்கப்போகிறேன் என்று கூறினால் இவனும் திருடந்தானே?

திருட்டில் பங்கு போடுவதர்க்காக அல்லது நாளை நாம் திருடும் போது மற்றவர்கள் சப்போர்ட் செய்ய வேண்டுமென்பதர்க்காக நாங்கள் நடுநிலை என கூறிக்கொண்டு தௌஹீத் ஜமாத்தை மட்டும் எதிர்பதற்க்கு காரணம் இதுதான்.

நடுநிலை வேஷம் போடுவோரில் ஆயிரத்தில் ஒருவர் அனைவரையும் சம்தூரத்தில் வைத்து நடந்து கொள்கிறார். அவர் துரோகம் செய்யவில்லை, நடிக்கவில்லை, ஆனாலும் நல்லவர்களையும் கேட்டவர்களையும் சம தூரத்தில் வைக்கும் குற்றம் செய்தவராக ஆகிறார். ஆனால் அதிகமான நடுநிலைவாதிகள் சந்தர்ப்பவாதிகளாகவும் சத்தியதுக்கு எதிராக காலம் இறங்கியவர்களுக்கு பலம் சேர்ப்பவர்களாகவும் தான் உள்ளனர்.

தௌஹீத் ஜமாத்துக்கும் மற்ற இயக்கங்களுக்கும் போராட்ட வழிமுறைகள் உள்பட பல வேறுபாடுகள் உள்ளன.

போராட்டம் நடத்துவது நம்முடைய இருப்பைக்காட்டி கொள்வதற்க்கு அல்ல. கோரிக்கைகளை வென்றெடுக்க தான் போராட்டம் நடத்த வேண்டும். ஆனால், அதிகமான முஸ்லிம் இயக்கங்களை எடுத்து கொண்டால் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு பெரிய கட்சியுடன் கூட்டணி வைக்கிறார்கள். தேர்தலின் பொது ஆதரவு அளிப்பதுடன் நீர்க்காமல் தொடர்ந்து அதில் நீடிக்கிறார்கள்.

இவர்கள் திமுக கூட்டணியில் இருந்தால் அந்த கட்சியின் கேடுகளை எதிர்த்து போராட மாட்டார்கள். அதிமுக கூட்டணியில் இருந்தால் அதன் தீமைகளை எதிர்த்து போராட மாட்டார்கள்.

திமுக ஆட்சி நடக்கும் பொது அக்கட்சியுடன் கூட்டணி கண்டவர்கள் இட ஒதுக்கீட்டுக்காக கூட போராடியதில்லை,.

அதிமுகவுடன் கூட்டணி கண்டவர்கள் அக்கட்சியின் முஸ்லிம் விரோத நடவடிக்கைக்காக போராடியதில்லை.

இரண்டு கூட்டணிகளில் இருந்து வெளியேற்றப்பட்டால்தான் போராட்டகாலத்திருக்கே வருகிறார்கள்.
அப்படியானால் இவர்களின் நோக்கம் கோரிக்கைகள் அல்ல, தாங்கள் கூட்டணிக்கட்சிக்கு ஆதரவாக மக்களை மாற்றுவதும் அதைக்காட்டி அரசியல் ஆதாயம் அடைவதும் தான்.

இப்படி நன்றாக தெரியும் போது நாம் எப்படி அவர்களுடன் சேர்ந்து போராட முடியும்? நாளைக்கு கோரிக்கைகளை கைகழுவி விட்டு நீர்த்து போக செய்து விட்டால் நடத்திய போராட்டம் அர்த்தமில்லாமல் போய்விடும்.
தௌஹீத் ஜமாத்தும் ஒரு நேரத்தில் அதிமுகவை ஆதரித்துள்ளது, ஒரு கட்டத்தில் திமுகவை ஆதரித்ட்டுள்ளது ஆனால் தேர்தல் முடிந்த கணமே ஆதரித்த கட்சி தவறு செய்யும் போது எதிர்த்து களமிறங்க தயங்கவில்லை.

ஜெயலலிதாவை 2001 சட்டமன்ற தேர்தலில் ஆதரித்தோம், தேர்தல் முடிந்தவுடன் நரேந்திர மோடிக்கு 64 வகையான உணவளித்து விருந்து அளித்த போது உடனே ஜெயலைத்தாவை கண்டித்து ஆர்ப்பாட்டமும் நடத்தினோம். அது போல சென்ற நாடாலாமன்ற தேர்தலில் திமுகவை ஆதரித்தோம் ஆனால் அதை தொடர்ந்து முதல்வர் வீடு முற்றுகை உள்ளிட்ட பலபோராட்டளை தௌஹீத் ஜமாஅத் நடத்த தயங்கவில்லை.

இது போல ஒருபக்க சார்பு இல்லாமல் முஸ்லிம் இயக்கங்கள் செயல்படுவதில்லை என்பதால் அவர்களின் சுயநலனுக்கு நாம் உதவ கூடாது என்பதர்க்காக நாம் மற்றவர்களின் போராட்டங்களில் கலந்து கொள்வதில்லை.

சில லெட்டர் பேடு இயக்கங்கள் தங்களை வளர்த்து கொள்வதர்க்காக சார்பற்ற போராட்டங்கள் நடத்தினாலும் அவர்கள் மார்க்கத்தில் சமரசம் செய்கின்றனர். தாரை தப்பட்டை அடித்தும், தனிநபர் துதி பாடியும் இன்னும் பல சமரசங்களை செய்வதையும் பார்க்கிறோம். முஸ்லிம் அல்லாதவர்களையும் இஸ்லாம் பற்றி அறியாதவர்களையும் அழைத்து கவுரவப்படுத்தும்வகையிலும் அவர்களை சமுதாயத்தின் காவலர்களாகவும் சித்தரிக்க முயல்கின்றனர்.

இவற்றில் தௌஹீத் ஜமாத்த்ரிக்கு கடுகல்வும் உடன்பாடு இல்லாததால் மற்றவர்களின் போராட்டங்களில் கலந்து கொள்வதில்லை.

சுருக்கமா சொல்லனும்னா!!!!!!!!! தூங்குறவனை எழுப்பிடலாம், தூங்குற மாதிரி நடிக்கிறவனை எழுப்ப முடியாது. இந்த நடுநிலைவாதி, போலி ஒற்றுமை பேசுறவாதிகள் இவர்கள் எல்லாம் ஒரே வகைதான்.................
  

திங்கள், 28 நவம்பர், 2011

“நேரமில்லை” – ஓர் இஸ்லாமியப் பார்வை!



அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.
நேரமில்லை! – இது நாம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை! அதிலும் குறிப்பாக தொழுகை, நஃபிலான வணக்கங்கள், மார்க்கக் கல்வியை பயில்வது போன்ற இபாத்களைப் பற்றி பேசப்படும் போது அதிகமாக உபயோகப்படுத்தும் வார்த்தை!

செவ்வாய், 4 அக்டோபர், 2011

எங்கே செல்லும் இந்தப் பாதை???

'அல்லாஹ் ஒருவன்' என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.112:1,2,3,4


அம்மனா ? அவ்லியாவா ? 

அம்மன் கோயில் கட்டி வழிப்படும் முஸ்லீம் தம்பதிகள் என்ற தலைப்பிட்டு சமீபத்தில் சில ஊடகங்களில் புகைப்படத்துடன் செய்திகள் வெளியாகி இருந்தன.
சிதம்பரம் அருகில் கிள்ளை என்ற கிராமத்தில் தான் மேல்படி சம்பவம் நடந்துள்ளது அம்மனுக்கு கோயில் கட்டி அதற்கு ''' மஹா மாரியம்மன் ஆலயம்'' என்றுப் பெயரிட்டு தீப ஆராதனை ஏற்றி வேத மந்திரங்களை புர்கா அணிந்த பஷீரா என்ற முஸ்லிம் பெண்ணே ஓதி காலை, மாலை பூஜை நடத்தி வருவதாகவும் அதற்கு அவரது கணவர் ஜின்னா முழு ஆதரவு அளித்து வருவதாகவும் அதை ஏராளமான பக்த, பக்தையர்கள் அம்மனை தரிசித்துவிட்டு செல்கின்றனர் என்று தொடருகிறது அந்த செய்தி.

உருவ வழிப்பாட்டை ஒழித்துக்கட்டிய இஸ்லாமிய மார்க்கத்தில் பிறந்து வளர்ந்த நீங்கள் அம்மனுக்கு கோயில் கட்டி வழிப்பாடு செய்வதற்கு எது காரணமாக இருந்தது என்று நிருபர் கேட்க? பத்து வருடங்களுக்கு முன் மாரியாத்தா எனது கணவில் தோன்றி தனக்கு கோயில் கட்டி வழிபடச் சொன்னதாக மிகவும் பக்தி பரவசத்துடன் பதில் கூறினாராம் பஷீரா...
பஷீராவின் கணவில் அம்மன் தோன்றியது உண்மை என்றால் பஷீரா வாழும் காலத்தில் அம்மனை பலத் தடவை நேரில் சந்தித்துப் பேசி இருக்க வேண்டும். அம்மனை இவர் நேரில் பார்த்ததில்லை அம்மன் இன்ன வடிவில்தான் இருப்பார் என்றும் இவருக்குத் தெரியாது இவரல்லாமல் அம்மனுக்கு கோவில் கட்டி அன்றிலிருந்து இன்றுவரை வழிப்படும் ஹிந்துக்களிலும் எவரும் அம்மனை நேரில் பார்த்தவர்கள் கிடையாது. 

கிள்ளையில் அல்லது பக்கத்து ஊரில் உள்ள அம்மன் சிலையை பஷீரா அடிக்கடிப் பார்த்திருக்கலாம். அம்மனின் கற்சிலை பஷீராவின் கணவில் காட்சி அளித்திருக்கலாம். பன்றிகள் அதிகம் மேயும் வழியாக போய் வரும் நிலை முஸ்லீம் ஒருவருக்கு ஏற்பட்டால் அவரது கணவில் பன்றிகள் காட்சி அளிக்கவேச் செய்யும் பன்றிகளை கணவில் கண்டதற்காக அதை அவர் ஹலாலாக்கிக் கொள்ள முடியுமா ? 

இணை வைப்பாளர் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியின் இணைவைப்பு பிரச்சாரம் சமீப காலமாக சூடு பிடித்திருப்பதால் அது பஷீராவின் மனதில் மாற்றத்தை எற்படுத்தி இருக்கலாம். பஷீரா ஜின்னா தம்பதிகள் வசிக்கும் பகுதியில் ஹிந்துக்கள் அதிகம் என்பதால் அங்கே தர்ஹா கட்டினால் கல்லா (உண்டியல்) நிறையாது என்றுக் கருதி கோயிலைக்கட்டி வசூலை முடுக்கி விட்டிருக்கலாம்.

காரணம் கணவில் தோன்றி ஆலயம் அமைக்கக் கூறியதாக கரடி விடுவதெல்லாம் மற்ற மதத்தவர்களை விட நம்மவர்களிடம் அதிகம் இருப்பதை எவரும் மறுக்க முடியாது. தமிழகத்தின் தர்ஹாக்களின் வரலாறுகளில் 100 சதவிகிதம் பஷீரா விடும் கணவு புருடாவாகவே இருக்கும்.

வள்ளலாரா ? வல்லோன் ரஹ்மானா ?

திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த அமானுல்லாஹ் என்பவர் வயிற்றுப் பிழைப்புக்காக சென்னைக்கு வேலை தேடிச் சென்றுள்ளார் ஃபோட்டோகிரப்பராக வேலையும் கிடைத்துள்ளது அதனால் பிறரிடம் யாசிக்க வேண்டியத் தேவை இல்லாத அளவுக்கு வயிறு நிறைந்துள்ளது இதற்கே இறைவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளார் அமானுல்லாஹ்.


இதுவும் கிடைக்காமல் கூலித் தொழில் பார்த்தும் யாசித்தும் பிழைக்கக் கூடியவர்கள் எத்தனையோப் பேர் இதையாவது இறைவன் கொடுத்தானே என்று நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்துவதைக் கண்டிருக்கிறோம்.

ஃபோட்டோகிராப்பராக வேலை கிடைத்ததில் அமானுல்லாஹ்வுக்கு வயிறு மட்டும் நிறைந்து வங்கிக் கணக்கு நிறையாமல் இருந்தது வருத்தத்தை அளித்திருக்கிறது. வங்கிக் கணக்கை நிறைக்கும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்த அமானுல்லாஹ்விடம் திடீரென சந்தித்த ஏழுமலை என்கிற  சகோதரர் வள்ளலார் ராமலிங்க அடிகளாரை தரிசித்தால் காசு கூரையைப் பிய்த்துக்கொண்டுக் கொட்டும் என்றுக் கூற இது தான் சிறந்த வழி என்று அமானுல்லாஹ்வுக்கு பொறி தட்ட வள்ளலாருக்கு கோயில் கட்டி உண்டியலை நிறைத்து அதன் மூலம் வங்கிக் கணக்கை நிறைப்பதற்கும் ஒரு சாய்பாபாவைப் போலவோ, நித்யாணந்தாப் போலவோ, பாபா ராம்தேவைப் போலவோ ஆவதற்கும் ஆசைப்பட்டுவிட்டார் அமானுல்லாஹ்.

வள்ளலாரின் பக்தர்கள் நிறைந்துள்ள வடலூருக்கு ஏழுமலையுடன் சென்று வள்ளலாரின் சரித்திரத்தை தெரிந்து கொண்டுத் திரும்பியதும் தாமதமின்றி வள்ளலாருக்கு கோயில் கட்டி தினந்தோறும் பூஜை செய்து அன்னதானமும் வழங்கி வியாழன் தோறும் சிறப்பு சொற்பொழிவு நடத்த ஆரம்பித்து விட்டார் அமானுல்லாஹ்.  

வள்ளலாரை தரிசித்து விட்டு வந்தப் பின்னர் தான் சென்னை மாநகராட்சியில் வேலை கிடைத்ததாக நிருபர்களிடம் புருடா விட்டுள்ளார் அமானுல்லாஹ்.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகர் எவருமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் எல்லாப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன். இறைவா! நீ கொடுப்பதை எவரும் தடுக்க முடியாது. நீ தடுப்பதை எவரும் கொடுக்க முடியாது. எந்தச் செல்வந்தரின் செல்வமும் அவருக்கு உன்னிடம் பயன் அளிக்காது) என கடமையான தொழுகைக்குப் பிறகு நபி(ஸல்) அவர்கள் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஅபா (ரலி) நூல்கள்: புகாரீ 844, முஸ்லிம் 933

உலக வாழ்வு அழியக் கூடியதே மறுமை வாழ்வே நிரந்தரமானது என்ற உயர்ந்த கோட்பாட்டை உடைய இஸ்லாமிய மார்க்கத்தில் பிறந்த இவர்கள் நிரந்தரமில்லாத உலக சுகபோக வாழ்விற்காக உயர்ந்த கொள்கையை விட்டுக் கொடுத்து வழி கெடுவதற்கு எது காரணம் ?

கடவுள் பெயரைக் கூறி அப்பாவி மக்களை ஏமாற்றி ஏராளமான செல்வங்களைத் திரட்டி வைத்துக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழும் சாமியார்கள் மட்டும் காரணமல்ல. 

மாறாக தர்ஹா கட்டி அதில் மன்னறை அமைத்து> ஊதுவத்தி சாம்ப்ரானிக் கொளுத்தி இல்லாத அவ்லியா பெயரில் ஃபாத்திஹா ஓதி பக்தர்களுக்கு மயில் இறகால் மண்டையில் தடவி விட்டு உண்டியலுக்கு பாதி தனக்குப் பாதியை ஒதுக்கி வயிறு வளர்க்கும் முஸ்லீம் பெயர் தாங்கிகளும் அவற்றிற்கு வாக்காலத்து வாங்கும் ஜமாலியாக்களும் முக்கிய காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது. 

கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு முன் தமிழகத்தில் தவ்ஹீத் பிரச்சாரம் வெடித்து சில தர்ஹாக்கள் தரை மட்டமாக்கப்பட்டது பல தர்ஹாக்கள் டம்மியாக்கப்பட்டு வெளி ஊர் பொருட்கள் விற்பனை செய்யும் சந்தையாக்கப்பட்டது. இதைக் கண்டு ஷைத்தான் சும்மா இருப்பானா? ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி வடிவில் தமிழகத்தில் கால் ஊண்டினான். 

மனிதர்கள் எழுதிய மத்ஹப் சட்டங்களை உண்மைப் படுத்தியும், ஏக இறைவனுக்கு இணைவைக்கும் தர்ஹா வழிப்பாட்டை ஆதரித்தும் ஷேக்அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் உளறியதை தொலைகாட்சியில் வெளியிடுவதால் அது கடவுள் பெயரைக் கூறி வயிறு வளர்க்கும் ஆசாமிகளுக்கு உற்சாகமூட்டியது. அதனால் கடவுள் பெயரைக் கூறி வயிறு வளர்க்கும் கூட்டம் முஸ்லீம்களிலும் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்து விட்டது.

பீஜேயை எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு ஏகத்துவத்தை குழி தோண்டிப் புதைக்கும் கேடு கெட்ட செயலில் இவர்கள் இறங்கிக் கொண்டிருப்பதால் அமானுல்லாஹ், ஜின்னா - பஷீரா தம்பதிகள் போல் இன்னும் பலர் நேர்வழியை விட்டு விலகி வழிக்கேட்டில் வீழ்வதற்கு காரணமாக அமைந்தால் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தங்களது மரணத்தருவாயில் கூறிய அல்லாஹ்வின் லஃனத்திற்கு இவர்கள் அஞ்சிக்கொள்ள வேண்டும்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு (நோய் அதிகமாம்) இறப்பு நெருங்கிவிட்டபோது அவர்கள் தங்களின் கறுப்புக் கம்பளி ஆடையைத் தம் முகத்தின் மீது போட்டுக் கொள்ளலானார்கள். அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும்போது தம் முகத்திலிருந்து அதை அகற்றிவிடுவார்கள். அவர்கள் அதே நிலையில் இருந்துகொண்டே யூதர்களின் மீதும் கிறிஸ்தவர்களின் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். அவர்கள் தம் இறைத்தூதர்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கினார்கள்'' என்று அவர்கள் செய்ததை(ப் போன்று நீங்களும் செய்துவிடக் கூடாது என அதைக்) குறித்து எச்சரித்தார்கள். என்று ஆயிஷா(ரலி) அவர்களும் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்: நூல்: புகாரி 5815 5816. 

நன்றி: அதிரை பாரூக்